Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறையில் ஒட்டுக் குழுக்களின் அட்டகாசங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துணை இராணுவ குழுக்களின் நடவடிக்கைகளால் துயரில் மூழ்கிக் கிடக்கும் அம்பாறை

[30 - July - 2006] [Font Size - A - A - A]

-மங்களன்-

கிழக்கில் இராணுவத்தினரும் அவர்களோடு சேர்ந்தியங்கும் துணை ஆயுத கும்பல்களினதும் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அங்குள்ள மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அச்சத்துடனேயே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கமும் அதன் பேச்சாளர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இத்தகைய ஆயுத குழுக்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டு ஊடக அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்க, மறுபுறத்தே குறித்த பிரதேசங்களில் நிகழும் சம்பவங்கள் இதற்கு எதிர்மாறானதாகவே இருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவினரது சிறுவர் ஆட்கடத்தல்கள், துப்பாக்கிச் சூடுகள், கொலைகள், கொள்ளைகள் என கடந்த மாதம் பெரிதும் பரபரப்புக்குள்ளான அதேசமயம், கடந்த வாரம் அம்பாறை மாவட்டத்திலும் இக்குழுவினரது செயற்பாடுகள் விரிவடைந்துள்ளதையே நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.

அரச படைகளின் துணையுடனே இவ் ஆயுத குழுக்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமையே அண்மையில் திருக்கோவில் தம்பலுவில் பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவமொன்று எடுத்துக் காட்டுகின்றது.

கடந்த திங்கட்கிழமை வரலாற்று பிரசித்தி மிக்க திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தீர்த்தோற்சவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, இவ் ஆயுத குழுவினரின் துப்பாக்கி வேட்டு மற்றும் கிரனேற்று வீச்சு சம்பவங்களினால் திருக்கோவில் தம்புலுவில் பிரதேசம் அதிர்ந்தது.

குறித்த பிரதேசங்களில் காலை 8.30 மணியளவில் வந்திறங்கிய இவ் ஆயுததாரிகளால் தொடர்ச்சியாக சுமார் 3 மணி நேரம் ஆகாயத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதுடன் பரவலான கிரனேற் வீச்சுகளும் மேற்கொள்ளப்பட்டன.

மக்கள் குடியிருப்புகள், கடற்கரை ஓரங்கள், பிரதான வீதிகள் என சகல பகுதிகளிலிருந்தும் ஒரே சமயத்தில் துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டமையினால் மக்கள் பெரும் களேபரமடைந்தனர்.

ஆலயத்தில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்திற்காக பல பாகங்களிலுமிருந்தும் வந்து குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத் துப்பாக்கி பிரயோகத்தினால் சிதறி ஓடினர். ஆலயத்திற்கு முன்பாகவுள்ள கடற்பகுதியிலும் குண்டுச் சத்தங்கள் கேட்டதால் மக்கள் பெரிதும் பீதியடைந்து செய்வதறியாது நின்றிருந்தனர்.

அக்கரைப்பற்றிலிருந்து திருக்கோவில் பிரதேசத்திற்கான வாகன போக்குவரத்தும் இதனால் பாதிக்கப்பட்டது. வீதிகளில் ஆங்காங்கே சென்று கொண்டிருந்த மக்கள் பட்டப்பகலில் ஆயுத தாரிகளின் துப்பாக்கி பிரயோகத்தை பார்த்து திகைத்து நின்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆயுததாரிகள் அக்கரைப்பற்று-பொத்துவில் பிரதான பாதையில் ஆர்.பி.ஜி. போன்ற ஆயுதங்களுடன் வாகனங்களை மறித்து நோட்டமிட்டதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். சாதாரணமாக ஓரிரு துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டாலும் கணப்பொழுதில் அவ்விடத்திற்கு விரையும் விசேட அதிரடிப்படையினர் அவர்களது பவள் கவச வாகனங்களும் 3 மணிநேர தொடர்ச்சியான இத் துப்பாக்கி வேட்டுகள் கேட்டபோதும் வரவில்லை.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் விநாயகபுரம் கோரைக்களப்பு பகுதியில் ஆயுத குழுவொன்றினால் இரு இளம் கட்டிடத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். விநாயக புரம் -3 காளிகோவில் வீதியைச் சேர்ந்த கந்தையா திவாகரன் (வயது 21), ஏபிரகாம் ஜெயராஜ் (வயது 23) ஆகியோரே இச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆவர். இராணுவ துணைப் படையினராலேயே இவர்கள் கொல்லப்பட்டதாக அப்பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இது இவ்விதமிருக்க, ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கோவில் முருகன் கோவில் உற்சவத்தில் கலந்து கொண்ட இரு இளைஞர்கள் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவ்விருவரும் படுகாயமடைந்துள்ளனர். உழவு இயந்திர சாரதிகளான குமாரநாயகம் சசிகரன் (வயது 21), மனோகரன் ராஜேந்திரன் (வயது 23) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்தவர்களாவர். இவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தகைய சம்பவங்களால் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் நேர காலத்திலேயே மக்கள் வீட்டுக்குள் முடங்குவதை காண முடிகின்றது. மக்களில் பலர் எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம் எனும் பயப்பிராந்தியுடனேயே காலத்தை கழிக்க வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்று வந்த ஆயுததாரிகளின் செயற்பாடுகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளையும் ஆக்கிரமித்து வருவதையே அண்மைய சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அரச கட்டுப்பாட்டுப்பகுதிகளில் குறிப்பாக, விசேட அதிரடிப் படையினரின் கண்காணிப்பிலுள்ள பகுதிகளில் பட்டப்பகலில் கனரக ஆயுதங்களுடன் அதிக எண்ணிக்கையில் நடமாடுகின்றமை எதனை காட்டுகின்றது?

கடல்கோளினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டு அதிலிருந்து மெதுவாக மீள சகஜ நிலைக்கு திரும்பும் கிழக்கு வாழ் தமிழ் மக்களிடையே இத்தகைய ஆயுததாரிகளின் செயற்பாடுகள் மிகுந்த அச்சத்தை தோற்றுவித்துள்ளன. எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் சிதைத்துள்ளது.

http://www.thinakkural.com/news/2006/7/30/...es_page7420.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.