Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிக்கைகளை மாத்திரம் விடும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நடவடிக்கை கேலிக்கூத்தானதாகும்: நல்லாட்சிக்கானமக்கள் இயக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகளும் இந்நாட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் மக்களின் ஆணைகளைப் பெற்று பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலுமாக அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களும் இதுவரை இப்பிரச்சினைகளுக்க தீர்வுகளைக் காணமுடியாமல் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டும், பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பதும் கேலிக்கூத்தான விடயங்களாகும் என நல்லாட்சிக்கானமக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

மஹியங்கனை அறபா ஜும்ஆப்பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அவ்வியக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனுராதபுரம் தர்கா தாக்கப்பட்ட சம்பவத்திலிருந்து மஹியங்கனை அறபா ஜும்ஆப்பள்ளிவாசல் மீதான தாக்குதல் வரை இந்தநாட்டில் ஏறத்தாழ 25க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும், முஸ்லிம் சமூகத்தின் கலாசாரங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படும் சம்பவங்களும், முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அடாவடித்தனங்களும் தொடர்ந்தேச்சியாக நிகழ்ந்துவருகின்றன.

இவ்வாறான சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் அரசாங்கத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி அதனை இன்றுவரைக்கும் நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்ற எமது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் மற்றும் பிரதி அமைச்சர்களும் முண்டியடித்துக் கொண்டு ஊடகங்களுக்கு கண்டன அறிக்கைகள் விடுவதையும், நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திற்கும், அமைச்சுச் செயலாளர்களுக்கும் கடிதங்கள் எழுதுவதனையும், அல்லது எழுதுவதாக காட்டிக் கொள்வதனையுமே தமது உச்ச கடமையாகக் கருதிச் செயற்பட்டுவருகின்றனர்.

இவ்வாறு ஊடகங்களின் மூலமாக தமது கண்டனங்களைத் தெரிவிப்பதும், கடிதங்கள் எழுதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோருவதுமானது அமைச்சரவையில் அல்லது பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதற்கு சந்தர்ப்பம் பெற்றிராத சமய, சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் செய்யக்கூடிய பணியேயன்றி அரச அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யவேண்டிய தலையாய கடமையல்ல.

மகியங்கனை பள்ளிவாசல் சம்பவம் தாக்குதலுக்குள்ளானது கண்டனத்திற்குரியதும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுமாகும் என்பதில் எந்தவொரு முஸ்லிமுக்கு மாத்திரமல்ல, இந்த நாட்டின் இன ஐக்கியத்தையும், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் நேசிக்கின்ற இந்நாட்டின் நிரந்தர சமாதானம் பற்றி அக்கறை கொண்டுள்ள எந்தவொரு மனிதாபிமானமுள்ள பிரஜைக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

அந்தவகையில் எமது இயக்கமும் இந்ததாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறது. தொடர்ந்தேர்ச்சையாக நடந்துவரும் இது போன்ற இனவாத வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த தவறிவரும் அரசாங்கமே இச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டில் இவ்வாறான இன-மத வன்முறைச் சம்பவங்கள் சங்கிலித் தொடராக நடைபெற்றுவரும் மோசமான நிலைமைக்கு இனிமேலாவது முற்றுப் புள்ளிவைக்க வேண்டும் என்பதையும் எனவும் எமது இயக்கம் வலியுறுத்துகின்றது.

இந்தவேளையில் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நீர்கொழும்பு புதியநீதிமன்றவளாகத் திறப்பு விழாநிகழ்வில் கலந்துகொண்டபோது மஹியங்கனைத் தாக்குதல் விடயத்தைக் கேள்வியுற்று அதுதொடர்பில் நடவடிக்கைஎடுக்கப்படும் எனத் தெரிவித்திருப்பதானது முஸ்லிம் சமூகத்திற்கு சற்று ஆறதலாக இருந்தாலும் இது போன்று நாட்டில் சமாதானத்திற்கு சேதத்தை உண்டுபண்னும் இனவாத வன்முறைச் சம்பவங்களை பகிரங்கமாகக் கண்டிக்காமல் தொடர்ந்தும் மௌனம் காப்பது கவலையையும் விரக்தியையும் தருகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.