Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லிங்குசாமி மீது சீமான் புகார்.. சூர்யா டென்ஷன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
லிங்குசாமி மீது சீமான் புகார்.. சூர்யா டென்ஷன்!

ju-15-surya-lingusamy--580x387.jpg

இயக்குனரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி மீது நடிகரும், இயக்குனருமான சீமான் இயக்குனர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்… நடிகர் சூர்யா கடும் டென்ஷன் ஆனார்.

ஏன்..?

இந்த கேள்விக்கு விடை தெரிவிதற்கு முன்பு ஒரு சின்ன பிளாஷ்பேக்…

நடிகர் சூர்யா நடிக்க கவுதம்மேனன் இயக்கி வந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. ‘துருவ நட்சத்திரம்’ பட கதையில் திருப்தி இல்லாததால் கதையை மாற்றச் சொல்லி சூர்யா கண்டீஷன் போட்டதால் படப்பிடிப்பு நின்று போனது.

அந்த சூழலில், ‘திருப்பதி பிரதர்ஸ்’ சார்பில் ஒரு கதை சொல்லி சூர்யாவிடம் ஓகே வாங்கியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி. லிங்கு சொன்ன கதை பிடித்திருந்தால் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கு தந்த கால்ஷீட் தேதிகளை லிங்குசாமி இயக்கப்போகும் படத்திற்கு கொடுத்தார் சூர்யா. படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருந்த நிலையில்தான் சிக்கல் ஆரம்பம் ஆனது…

பிரபல தயாரிப்பாளர் தாணு தனது நிறுவனம் சார்பில் நடிகரும், இயக்குனருமான சீமானிடம் ஒரு கதை கேட்டு படம் தயாரிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இந்த படத்திற்கு ‘பகலவன்’ என பேரும் வைத்திருந்தார்கள். ஜெயம்ரவி ஹீரோவாக நடிக்கயிருந்தார். கதை விவாதம் முடிந்து படப்பிடிப்பு தொடங்கும் தேதியும் முடிவானது.

இந்த நிலையில்தான், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் கதையும் ‘பகலவன்’ கதையும் ஒரே கதைதான் என்பது சீமானுக்கு தெரிவந்தது.

கடும் டென்ஷன் ஆன சீமான் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் லிங்குசாமியின் மீது புகார் அளித்திருக்கிறார். இந்த விவரம் தெரிந்ததும் இருவரையும் சமாதானப்படுத்த செயலாளர் ஆர்.கே.செல்வமணியும் சில முக்கிய சங்க நிர்வாகிகளும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

புகார் விவரம் வெளியே தெரியாமல் தடுக்கவும், புகாரை வாபஸ் வாங்கவும் சீமானிடம் பிரபலங்கள் பலர் பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ‘ஆனந்தம்’ படமும், விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘வானத்தைப்போல’ படமும் ஒரே கதை என்றும், இதேபோல பிரச்னை ஏற்பட்டபோது அவரவர் இயக்கும் பாணியில் ஒரே கதையை இயக்குவது என்று பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து இயக்கி ஒரே நேரத்தில் வெளியிட்டார்கள். இரு படங்களும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வெற்றி பெற்றன.

இப்போதும் அதே பாணியில் இந்த கதையை அவரவர் பாணியில் இயக்கிக் கொள்ள வேண்டும் என சமரசம் செய்பவர்கள் சொல்வதை சீமான் தரப்பு மறுப்பதால் இப்போது புகாரில் சிக்கி நிற்கிறது.

ஏற்கனவே, இயக்குனர் சீமான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்ற பரபரப்பு அடங்குவதற்குள் அவரைச் சுற்றியே அடுத்த பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

http://www.ampalam.com/2013/07/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.