Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் ஆனந்த்பாபுவிடம் விவாகரத்து கேட்டு மனைவி மனு தாக்கல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபுவிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி எம்.பி.சாந்தி, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை குடும்பநல கோர்ட்டில் எம்.பி.சாந்தி (வயது 50) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

நான் ஈக்காட்டுத்தாங்கல் ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கிறேன். எனது கணவர் ஜெரால்ட் ஆனந்தபாபு, நடிகர் பீட்டர் நாகேஷின் மகன். எங்களுக்கு 8.12.85 அன்று கிறிஸ்துவ முறைப்படி விஜயசேஷ மகாலில் திருமணம் நடந்தது.

எங்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். திருமணமாகி 3 மாதங்கள்தான் நான் சந்தோஷமாக இருந்தேன். கணவரின் உண்மையான செயல்பாடுகளை அறிந்த பிறகு எனது சந்தோஷம் பறிபோனது. என்னுடன் அவர் இதயப்பூர்வமாக வாழ்ந்ததில்லை.

ஆனந்த்பாபுவின் தந்தை நாகேஷின் பாதுகாப்பில்தான் நான் வசித்தேன். 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை வருவார். இரண்டு நாட்கள் தங்கிவிட்டு பின்னர் எந்த காரணமும் இல்லாமல் வெளியே சென்றுவிடுவார். சினிமாவில் நடிக்கச் செல்கிறார் என்றுதான் முதலில் நான் நினைத்தேன். ஆனால் மது உட்பட தேவையற்ற இன்பங்களை நாடிச் சென்றிருக்கிறார் என்பது பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது.

பொறுப்பில்லாமலும், குடும்ப பாரத்தை சுமக்காமலும் ஆனந்த்பாபு இருந்ததால், மாமனாரின் குடும்பத்தினருக்கு பாரமாக இருக்காதபடி, வேலை தேடினேன். பெரியவர்களின் ஆலோசனையின்படி, மாமனாரின் வீட்டுக்கு அருகே வீடு எடுத்து குடியேறினேன். ஆனாலும் எனது கணவர் அதுபற்றி கவலைப்படவில்லை.

நான் வர்த்தகம் தொடர்பான தொழிலைத் தொடங்கினேன். ஆனால் வேலையில்லாமல் இருந்த ஆனந்த்பாபு, அந்தத் தொழிலில் நுழைந்து அதையும் கெடுத்தார். இதனால் ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு நிறுவனத்தில் மேலாளராகச் சேர்ந்து 5 மாதங்கள் பணியாற்றினேன்.

ஆனந்த்பாபு தனது தந்தையின் சொத்துக்களை அவரே அனுபவித்தார். எனக்கு ஒரு பைசாகூட தரவில்லை. ஆனால் நான் எனது சொந்தத் தொழில் மூலம் சம்பாதித்து ஈக்காட்டுத்தாங்கலில் வீடு வாங்கினேன். 8 ஆண்டுகளாக ஆனந்த்பாபு வீட்டுக்கு வரவில்லை.

பணத்தை செலவழித்து முடித்துவிட்டு 8 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்கு வந்தார். ஆனால் பிள்ளைகளுக்காக அவரை வீட்டில் சேர்த்துக்கொண்டேன். ஆனாலும் அவர் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை. தினமும் குடித்துவிட்டு கெட்டவார்த்தையால் திட்டுகிறார்.

இதனால் பிள்ளைகள் மிகவும் பயந்திருக்கிறார்கள். மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதால் விவாகரத்து வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. எனவே எங்களுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1307/16/1130716003_3.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.