Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர்கள் பலியானதன் எதிரொலி - பிகார் அமைச்சரைத் துரத்தித் துரத்தித் தாக்கிய மக்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
graveyard-19713-150.jpg

பிகாரில் சமூக நலத்துறை அமைச்சர் பர்வீண் அமானுல்லா தாக்கப்பட்டார்.பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாகவே இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இது குறித்த விவரம்: அமைச்சர் அமானுல்லா, பாட்னாவில் இருந்து முஸாபர்பூருக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். ஹாஜிபூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சரின் காரை வழி மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பாட்னா திரும்பினார்.

  

ஒரு கும்பல் எனது காரை வழி மறித்தது, கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் போலீஸார் வந்து என்னை மீட்டு அழைத்துச் சென்றனர் என்று அமைச்சர் அமானுல்லா கூறினார். பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததே உயிரிழப்பு அதிகரிக்கக் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சரண் மாவட்டத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தின.

 

பிகாரில் பள்ளி மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 23 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமாக கூறப்படும், தலைமை ஆசிரியை தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் தர்மசதி கண்டவான் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில், உயிரிழந்த மற்றொரு குழந்தையை அவரது பெற்றோர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வராமல் புதைத்து விட்டதாக ஆட்சியர் அபிஜித் சின்கா வியாழக்கிழமை தெரிவித்தார். இதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

 

உடல்நலம் பாதிக்கப்பட்ட 24 குழந்தைகள் மற்றும் பெண் சமையலர் மஞ்சு தேவி ஆகியோர் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தை அடுத்து, தர்மசதி கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. இறந்த குழந்தைகளின் சடலங்கள் பள்ளிக்கு வெளியே வியாழக்கிழமை புதைக்கப்பட்டன. அப்போது, பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். பின்னர் பள்ளி முன்பு திரண்ட அவர்கள் அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினர்.

 

தனது பேரக்குழந்தையை இழந்த ராகேஷ்வர் மகாதோ கூறுகையில், இந்தப் பள்ளி இனிமேல் இயங்காது. நாங்கள் பள்ளியை செயல்பட அனுமதிக்க மாட்டோம். எங்கள் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார். சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் ஆன பின்பும் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீஸார் வழக்குப்பதிவு செய்து பள்ளித் தலைமை ஆசிரியை மீனாதேவி மற்றும் அவரது கணவரைத் தேடி வருகின்றனர்.

 

மாநில முதன்மைச் செயலாளர் அமர்தீப் சின்கா கூறுகையில், "இந்த வழக்கு விஷ உணவு என்ற ரீதியில் இல்லாமல், உணவில் விஷம் கலப்பு என்பதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மாநில தடய அறிவியல் கூடத்தின் உணவு பரிசோதனை அறிக்கை வெள்ளிக்கிழமை கிடைத்துவிடும் என்றார். மாநில மதிய உணவுத் திட்ட இயக்குநர் ஆர்.லக்ஷ்மணன் கூறுகையில், பள்ளிக்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆசிரியர்கள் மற்றும் சமையலர்கள் ஆய்வு செய்வதில்லை என்பது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=87922&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.