Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகம் கண்டிராத எம் உன்னத தலைவனின் சிறப்புகள் ..!

Featured Replies

 

ஈழ மைந்தன் இன் புகைப்படம் ஒன்றை வெற்றிச் செழியன்பகிர்ந்துள்ளார்.
548926_454605657970060_1859189987_n.jpg
உலகம் கண்டிராத எம் உன்னத தலைவனின் சிறப்புகள் ..!

அது 1994 - 1995 ஆம் ஆண்டுக் காலப்பகுதி. ஈழத்தின் நான்கு திசைகளும் அப்போது போர்மேகங்கள் சூழ்ந்திருந்த காலப்பகுதி. அப்போது பெண் போராளிகள், ஆண் போராளிகளுக்கு நிகராக யுத்த களங்களில் வீரப் போர் புரிந்து கொண்டிருந்தனர்.

ஈழத்தின் எல்லையில் பெண் போராளிகள் வீரசமர் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், ஊர்களுக்குள்ளே பெண்களுக்கான அடக்குமுறை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. வரதட்சணை என்ற பெயரிலும் சீதனம் என்ற பெயரிலும் பல ஏழை பெண்களின் திருமணம் என்பது வெறும் கனவாகவே ஆகிகொண்டிருந்தது. ஈழ மைந்தன்

இந்த விடயம் அப்போது போராளிகளினால் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் கவனத்திக்கு கொண்டு வரப்பட்டது. ஒருபுறம் பெண்கள் ஈழத்தில் போரில் சாதனை படைத்துக் கொண்டிருக்க, மறுபுறமோ பெண்கள் திருமணமாகாமலே முதிர்கன்னியாக வாழ்க்கையினை தொலைக்கும் நிலையினை அடியோடு மாற்ற வேண்டும் என்று தேசிய தலைவர் எண்ணினார்.

இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் எண்ணத்தில் உதித்த தீர்க்கதரிசனமான திட்டம் தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க "மணக்கொடை தடைச்சட்டம்" அதாவது திருமனத்திற்காக பெண் வீட்டாரிடம் இருந்து வலுக்கட்டாயமாக வரதட்சனை வாங்கும் முறையினை அடியோடு ஒழித்துக் கட்டுவதற்கென கொண்டுவரபட்ட புலிகளின் சட்டம் தான் இந்த மணக்கொடை தடைச்சட்டம்.

பல ஏழை பெண்களில் வாழ்வில் ஓளி ஏற்றிவைத்த இந்த சட்டம் அப்போது ஈழத்தில் பரவலாக வரவேற்பு பெற்றது. ஆரம்பத்தில் சிறிது தீவு கானபட்டாலும் போகப்போக ஈழத்தின் அனைத்துப் பகுதிகளிலுமே இந்த வரதட்சனை என்ற ஒன்று முழுவதுமாக ஒழித்துக் கட்டபட்டது. புலிகளின் மீது இருந்த மக்களின் ஆதரவும், தேசிய தலைவர் மீதான மரியாதையும் இந்த நிகழ்வின் பின்னர் பன்மடங்காக உயர்ந்தது.

இந்த நிகழ்வினைத்தான் ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா அவர்கள் " சாலப்பொருந்தும் சட்டம் வந்தாச்சு , ஏல விற்பனை இனி இல்லை" வரதட்சனை என்ற பெயரில் பெண்களை ஏலம் போட்டு விற்பது இனி இல்லை என்ற தொநோயில் எழுதபட்ட இந்த கவிதையின் ஒரு பகுத்து உங்களுக்காக. ஈழ மைந்தன்

மலரில் மதுவருந்தி மயங்குவதற்காக

வண்டுகளுக்குப் பூக்கள்

வரதட்சனை கொடுப்பதில்லை.

காளை மாட்டுக்கு

கலியாணச்சீர் கொடுக்கும்

பழக்கமேதும் பசுமாட்டுக்கில்லை.

ஆண் நாய் பெண் நாயிடம்

ஆறு லட்சம் கேட்பதில்லை.

மானுடனுக்கு மட்டும் ஏனிந்த இழிநிலை?

அதுவும் தமிழனென்றால்…..

பிள்ளையை விற்பதில் அவனே பெரியபுள்ளி.

பத்து லட்சம் காசும்,

பன்னிரண்டு பரப்புக் காணியும்

நாற்பது பவுணில் நகையும் வாங்கி

ஏலத்தில் தன்னைக் கூவி விற்றவன்

எந்தமுகத்தோடு முதலிரவுக்கு கதவுமூடுவான்?

நரையெறிந்து, நடைதளர்ந்து,

கோடை மரமாகி இலையுதிர்ந்து போகும்

முதிர்க்கன்னியரின் வாசல் கடந்து

கலியாண ஊர்வலம் போகும்போது

யன்னல் கம்பிகளில் முகம் உரசி

தீ மூட்டியபடி

அவர்கள் விடும் அக்கினி மூச்சின் அர்த்தம்,

எத்தனை பேரைத் தைத்தது?

“மணக்கொடைத் தடைச் சட்டம்”

இது; புரையோடிப்போன புண்ணுக்கு

தலைவன் செய்த சத்திர சிகிச்சை.

அதர்மத்தின் அடி முடியை நீறாக்க

பிரபாகரன் இட்ட பெருநெருப்பு.

போகப்பொருளாகவும், காமப்பொருளாகவும்

பெண்ணை எதிர்கொள்ளும்

புன்மை தீருவதட்காக

பிரபாகரன் இட்ட பிரவாகம்.

`மணக்கொடைத் தடைச்சட்டம்`.

புதிய பாய்சல்.

விற்பனைப்பொருளாய் வீட்டில் முடங்கிய

அற்புதங்களே எழுவீர்!

சாலப்பொருந்தும் சட்டம் வந்தாச்சு.

ஏலவிற்பனை இனி இல்லை.

- ஈழ மைந்தன் -

நன்றி முகனூல் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.