Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணம் - அச்சத்தில் சிறீலங்கா, எச்சரிக்கின்றன இனவாத அமைப்புகள்

Featured Replies

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அடுத்த வார இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் 25ம் திகதி தொடக்கம், 31ம் திகதி வரையில் ஒரு வாரகாலம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக ஐ,நா தகவல்கள் வெளிவந்தபோதும், தனது பயணத்தை அவர் முற்கூட்டியே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வார இறுதியில் அவர் இலங்கை வரவுள்ளதாகவும் கொழும்பில் இருந்து வெளியாகும் சிறீலங்கா அரச சார்பு ஆங்கில வார இதழான ‘சண்டே ஒப்சேவர்’ தெரிவித்திருக்கின்றது.

Navi%20pillai%20srilanak.JPG

எனினும், இந்த வார இறுதியில் அவர் இலங்கை செல்வது தொடர்பாக ஐ.நா தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை செல்லும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது இராணுவ விமானத்திலேயே பயணம் செய்யவேண்டும் என வலியுறுத்தி வந்த சிறீலங்கா அரசு தற்போது அதில் இருந்து பின்வாங்கியுள்ளது. நவநீதம்பிள்ளையின் பயண ஒழுங்குகள், பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக கடந்த மாத இறுதியில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் தலைமைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆப்ரஹாம் மதாய் தலைமையிலான குழுவொன்று இலங்கை சென்றிருந்தது.    

நவநீதம்பிள்ளை தலைமையிலான குழுவினர், தனியார் விமானம் மூலமே, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்வதற்கே ஐ.நா அதிகாரிகள் விருப்பம் கொண்டிருந்தனர். ஆனால், சிறீலங்கா அரசு இந்தப் பயணங்களுக்கு சிறீலங்கா விமானப் படையினால் நடத்தப்படும், ‘ஹெலி ருவர்ஸ்’ விமானங்களைப் பயன்படுத்தும்படி வலியுறுத்தியது. ஆயினும், சிறீலங்கா விமானப்படை விமானங்களில் பயணம் செய்வதற்கு நவநீதம்பிள்ளையின் பாதுகாப்பு அதிகாரிகள் குழு மறுத்துவிட்டது. இதனை ஏற்றுக்கொள்ள முதலில் சிறீலங்கா தரப்பு மறுத்துவந்தபோதும் இறுதியில் ஐ.நாவின் வழிக்கு வந்துள்ளது.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை சிறீலங்காவில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் பயணங்களுக்கு அழுத்தங்களைக் கொடுப்பது மாநாட்டைப் பாதிக்கும் என்பதால் சிறீலங்கா ஐ.நாவின் வழிக்கு வரவேண்டியிருந்ததாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்தே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் விரும்பியவாறு, தனியார் விமானத்தையோ, அல்லது ஐ.நா விமானத்தையோ நவநீதம்பிள்ளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிறீலங்கா அரசு தற்போது ஜெனிவாவுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட சிறீலங்கா ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு சிறீலங்கா விமானப்படை விமானங்கள் மீது நம்பிக்கை இல்லையாம். இனிமேல் நாம் என்ன செய்வது? அவர் ஐ.நா விமானத்திலேயே வந்து வடக்கு உள்ளிட்ட தேவையான அனைத்து இடங்களுக்கும் சென்று, எதிர்பார்க்கும் உண்மைகளைக் கண்டறிய அவருக்கு அரசு ஒத்துழைக்கும் என்று வெறுப்புடன் தெரிவித்துள்ளார்.

இலங்கை செல்லும் நவநீதம்பிள்ளை அம்மையார் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி உட்பட தமிழர் தாயகத்தின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளதுடன், ஏராளமான பொதுமக்களையும், சிவில் அமைப்பின் பிரதிநிதிகளையும், மக்கள் பிரமுகர்களையும் எந்தவித அழுத்தங்களுமின்றிச் சந்தித்துக் கலந்துரையாடத் திட்டமிட்டுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணத்திற்கு ஆரம்பத்தில் தடைகளைப் போட்டுவந்த சிறீலங்கா அரசு, தற்போது அவரது பயணம் உறுதியாகியுள்ள நிலையில், தமிழ் மக்களைச் சந்தித்து உண்மைகளைக் கண்டறிவதை எவ்வாறு தடுப்பது என ஆலோசித்து வருகின்றது. போர் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கை சென்ற ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனைத் தமது உலங்குவானூர்தியில் போர் நடைபெற்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று வானில் இருந்தே காண்பித்த சிறீலங்கா அரசு, பாதுகாப்பு காரணங்களைக்காட்டி அங்கு தரையிறங்க அனுமதிக்கவில்லை. பின்னர் வவுனியா தடுப்புச் சிறை முகாமில் தம்மால் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட பகுதிக்கு மட்டும் பான் கீ மூனை அழைத்துவந்து காண்பித்துவிட்டு திருப்பி அனுப்பிவைத்தது.

ஆனால், தற்போது வரும் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமது சொந்த விமானத்தில் பயணம் செய்வதுடன் தமிழ் மக்களை சுயாதீனமாகச் சந்தித்துப்பேசவுள்ளதால் உண்மைகளை கேட்டறிந்துவிடுவாரோ என்ற அச்சம் சிறீலங்கா ஆட்சியாளர்களையும் பேரினவாதிகளையும் சூழ்ந்துள்ளது. ஏனெனில் 31ம் திகதி இலங்கையில் இருந்து திரும்பும் நவநீதம்பிள்ளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது அமர்வில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் செப்டெம்பர் 9ம் திகதி தொடக்கம் 27ம் திகதி வரை நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 24வது அமர்வில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தொடக்க நாளன்று உரை நிகழ்த்தவுள்ளதுடன், அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிக்கவுள்ளார். பொதுநலவாய மாநாடு நவம்பர் மாதம் நடக்கவுள்ள நிலையில் இவரது அறிக்கை எவ்வாறு அமையப்போகின்றதோ என்ற பேரச்சம் சிறீலங்கா ஆட்சியாளர்களைச் சூழ்ந்துள்ளது.

நவநீதம்பிள்ளையின் நகர்வுகள் குறித்து எதுவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கவோ அல்லது எவரையும் அவர் சந்திப்பதனைத் தடுக்கவோ சிறீலங்கா அரசாங்கத்தினால் முடியாதென பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மாத்தாய் தெரிவித்துள்ளார். இவரே ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் கொள்கை விவகாரங்களை ஒழுங்கமைப்பதிலான சிரேஷ்ட முகாமைத்துவ அணியின் உறுப்பினரொருவராகவும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் மனித உரிமையாளரைச் சந்திக்க இருப்பவர்கள் குறித்து தகவல் திரட்டிவரும் சிறீலங்காப் புலனாய்வுத்துறையினர், அடையாளம் காணப்பட்டவர்களை எவ்வாறான கருத்துக்களை நவநீதம்பிள்ளையுடன் கலந்துரையாடவேண்டும் என்பதை எடுத்துக்கூறி வருவதுடன், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி வரும் என இரகசியமாக எச்சரித்து வருவதாகவும் அங்கிருந்து எமக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நவநீதம்பிள்ளையின் பயணங்கள் தொடர்பிலான குழப்பமான செய்திகளையும் சிறீலங்கா அரச ஆதரவு ஊடகங்கள் வெளியிட்டு வருவதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர். எனினும், அவரது பயண மாற்றம் தொடர்பாக ஐ.நா. எந்தவொரு தகவலையும் இதுவரை வெளியிடவில்லை. இதேவேளை, இதுவரை அத்தகைய முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ள நவநீதம்பிள்ளையின் பேச்சாளர், அதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, உண்மைக்கு புறம்பானவற்றை உலகுக்கு எடுத்துக் கூறி பிரிவினைவாதத்தை தேற்றுவிப்பதற்கு கடும் பிரயத்தனம் எடுத்துவருபவரே ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை எனக் குற்றம்சாட்டியுள்ள சிங்கள மதவாத அமைப்பான பொது பல சேனா அவரை ஒரு உண்மையானதும் நடுநிலையானதுமான இராஜதந்திரியாக ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில், இலங்கைக்கு வரும் நவநீதம்பிள்ளை யுத்தத்துக்கு பின்னரான வட கிழக்கு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து நியாயமானதும் நடுநிலையானதுமான அறிக்கையன்றினை ஐ.நா.வுக்கு சமர்ப்பிப்பார் என்பதை எதிர்பார்க்க முடியாது. கடந்த காலங்களில் உண்மையை திரிவுபடுத்தி சிறீலங்காவிற்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவந்தவரே நவநீதம்பிள்ளை.

எனவே அவரின் அவ்வாறான செயற்பாடுகளால் எமது நாட்டின் நற்பெயருக்கு சர்வதேச மட்டத்தில் பங்கம் ஏற்பட்டது. ஆகையால் அவரின் வருகையால் நமக்கு நன்மையேற்படும் சாத்தியக்கூறுகள் இல்லை. நவநீதம்பிள்ளை போன்றவர்கள் இலங்கைக்குள் பிரிவினைவாதத்தினை தோற்றுவிப்பதில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள். இன்று சில சர்வதேச அமைப்புக்களும் நவநீதம்பிள்ளை போன்றவர்களும் உண்மைகளை திரிவுபடுத்தி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர், ஆனால் அவ்வாறான கருத்துக்களை கூறுகின்றவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எதனையும் செய்யவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, வெலிவேரியா தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையின் அலுவலகம் தகவல்களைத் திரட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிவேரியா வன்முறையில் கொல்லப்பட்டோர் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் தமது அலுவலகம் கரிசனை கொண்டிருப்பதாக நவிபிள்ளையின் பேச்சாளர் செசிலி பௌல்லி தெரிவித்துள்ளார். வெலிவேரியாவில் சுத்தமான குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் காயமடைந்தமை தொடர்பில் தமது அலுவலகம் தகவல்களை திரட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் வெலிவேரியா சம்பவம் குறித்து நவநீதம்பிள்ளை தகவல் திரட்டவில்லை என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நவநீதம்பிள்ளை வந்தோமா, போனோமா என்றிருக்க வேண்டும், வாய் திறக்கக்கூடாது என சிங்கள இனவாத அமைப்புக்களில் ஒன்றான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரித்துள்ளது.

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வரலாம், ஆனால் யுத்தம் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பது, விசாரணைகளை மேற்கொள்வது, ஊடகவியலாளர் மாநாடு நடத்துவது என்பவற்றை சிறீலங்கா அரசாங்கம் அனுமதிக்க முடியாது எனக் கூறியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார, யுத்தம் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பது விசாரணைகளை நடத்துவதை அனுமதிக்க முடியாது. விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவில்லை. அது மட்டுமல்லாது, இவ்வாறான விசாரணைகளை நடத்தி ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் உத்தியோகபூர்வ அறிக்கையை நவநீதம்பிள்ளை கையளிக்கவும் முடியாது. இதற்கான அதிகாரம் அவருக்கு கிடையாது. சிறீலங்கா அரசாங்கத்தின் அனுமதியை மீறி அவர் செயற்பட முடியாது. அதனையும் மீறி அறிக்கையை அவர் சமர்ப்பிக்க முனைந்தால் அரசாங்கம் நேச நாடுகளின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு இதற்கு எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32232/64//d,fullart.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களை மூடி மறைத்த சிறிலங்கா அரசு நவநீதம்பிள்ளைக்கு தண்ணி காட்டுவது பெரிய வேலை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.