Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செத்து மடிவோமே அன்றி இலங்கைக்கு திரும்பப் போக மாட்டோம். துபாயில் சிக்கியுள்ள ஈழ அகதிகளின் கண்ணீர்.

Featured Replies

செத்து மடிவோமே அன்றி இலங்கைக்கு திரும்பப் போக மாட்டோம். துபாயில் சிக்கியுள்ள ஈழ அகதிகளின் கண்ணீர். 

---------------------------------------------------------------------

சர்வதேச நாடுகளுக்கு துபாய் ஈழ அகதிகளின் வேண்டுகோள். 

எங்களுக்கு புகலிடக் கோரிக்கை தர மறுக்கும் சர்வதேச குடியேற்ற நாடுகளே.!!

எங்களுக்கு வீடு வாசல், வசதி வாய்ப்புக்கள், சுகபோக வாழ்க்கை எதுவும் தர வேண்டாம். உங்கள் நாடுகளில் ஏதாவது ஒரு காட்டுப் பகுதியில் ஒரு சிறிய இடம் தந்தாலே போதும், நாம் உயிரோடும், பாதுகாப்போடும், நிம்மதியோடும் வாழ்வதற்கு! 

----------------------------------------------------------------------

இவ்வாறு துபாய் சிறையில் வாடும் ஈழத்து உறவுகள் கோரிக்கை வைத்திருப்பது தமிழ் சமூகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது . தமிழீழ மக்களுக்கு ஒரு அரசு இல்லாத இல்லாத காரணத்தால் அவர்கள் சொல் முடியாத வேதனையை அனுபவித்து வருகின்றனர் . ஈழத்தில் இருப்பவர்கள் , தமிழக முகாம்களில் இருப்பவர்கள் , இந்தோனேசியா மற்றும் துபாயில் இருக்கும் ஈழத் தமிழர்களும் கொடும் துயரை அனுபவித்து வருகின்றனர். ஒரு சராசரி மனிதர்களை போல் அவர்களால் வாழ்வை நடத்த முடியவில்லை. நாட்டை விட்டு தப்பித்து தமிழகம் வந்தாலும் , இங்கு தமிழக காவல்துறை சித்திரவதை செய்கிறது. இவர்களுக்கு பயந்து கப்பல் மூலமாக தப்பித்து வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றாலும் கடலில் உயிர் போகிறது. கடலில் இருந்து தப்பித்து துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றாலும் , அங்கும் சிறையில் சித்திரவதை. இப்படியே துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருகின்றனர் ஈழத்து உறவுகள். இப்போது துபாய் சிறையில் வாடும் 12 பேர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்ப ஐ.நா முடிவெடுத்துள்ளது . இவர்களில் ஒரு சிறுமியும் சில பெண்களும் அடக்கம். துபாய் அரசு இவர்களை திரும்ப செல்லுமாறு அழுத்தம் கொடுக்கிறது. இவர்கள் இலங்கை சென்றால் அங்கு இவர்கள் கொல்லப்படுவது உறுதி . 

ஆதலால் இவர்களுக்கு குரல் கொடுப்பது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். தமிழக அரசும் இந்த விடயத்தில் உடனே தலையிட்டு துபாய் அரசுக்கும் , ஐநாவிற்கும் அழுத்தம் கொடுத்து அங்குள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் , அமைப்புகளும் ஐ.நா விற்கு கோரிக்கை வைக்க வேண்டும். நாம் கொடுக்கும் அழுத்தமே துபாயில் உள்ள ஈழத் தமிழ்களை காப்பாற்றும் . உடனே செயலில் இறங்குவோம். நம்மால் முடிந்த எல்லா வழிகளிலும் போராடுவோம். 

இணையம் மூலமாக கையெழுத்திட்டு இவர்களை காப்பாற்ற கீழுள்ள இணைப்பில் கையொப்பம் இடவும். 

http://chn.ge/147LNpW

மற்றபடி இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் , இயக்கங்கள் இவர்களை காப்பாற்ற முன்வரும்படி கேட்டுக் கொள்கிறோம். சென்னையில் உள்ள ஐ.நா அலுவகத்தில் உடனே சென்று மனு கொடுப்போம் . தொடர்புக்கு தமிழர் பண்பாட்டு நடுவம் 9566224027

-Rajkumar Palaniswamy

தமிழால் இணைவோம்

999126_661405167211070_740232670_n.jpg
https://www.facebook.com/photo.php?fbid=661405167211070&set=a.212371062114485.58409.211901605494764&type=1&theater

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.