Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவிலிருந்து கருணாநிதிக்கு சேதி!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவிலிருந்து கருணாநிதிக்கு சேதி!

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன், கனடா மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளுக்குப் போய்விட்டுத் திரும்பியிருக்கிறார். அங்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய விழாக்களில் கலந்துகொண்டு, ஈழத் தமிழர்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்திவிட்டு அவர் திரும்பியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு பரவத் துவங்கி இருக்கிறது. காரணம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்திருக்கும் மேற்சொன்ன இரண்டு நாடுகளிலும் திருமாவளவன் ஈழப் பிரச்னையைப் பற்றி பேசியதுதான். திருமாவளவனைச் சுற்றி அரசியல் சூடு பரவிக் கொண்டி ருக்கும் நிலையில், அவரைத் தொடர்பு கொண்டு சில கேள்விகளைக் கேட்டோம்.

p44le4.jpg

ஈழ பிரச்னையைப் பற்றி பேசத்தான் கனடாவுக்கும், ஃபிரான்ஸ்க்கும் போனீர்களா?

உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் ஈழப் பிரச்னைக்காக ஒன்றுபட வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்து வதற்குத்தான் கனடாவில், தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதேபோல், ஃபிரான்ஸில் உலகம் முழுதும் இருக்கும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழாவில் கலந்து கொண்டேன். இந்த விழாவில் விடுதலையை விரைவாக்குவோம் என்ற தலைப்பில் கலந்துகொண்ட அனைவரும் பேசினார்கள். ஈழ விடுதலை மட்டுமல்ல, உலகில் எங்கெல்லாம் தமிழன் அடிமைப்பட்டுக் கிடக்கிறானோ அவனுக் கெல்லாம் விடுதலை விரைவாக வேண்டும் என்பதுதான் தலைப் பின் நோக்கம்.

நீங்கள் கலந்துகொண்ட விழா பற்றி இணைய தளங்களில் வெளியான அறிவிப்பில், பிரபாகரன் படத்துடன் உங்கள் படத்தையும் பெரிதாகப் போட்டி ருந்தார்களாமே?

நான் தமிழகத்தில் கலந்து கொள்ளும் கூட்டங்களிலேயே பிரபாகரன் படம் போட்டு என் படத்தையும் போடுகின்ற வழக்கம் எங்கள் இயக்கத்துத் தோழர்களால் கடைபிடிக் கப்பட்டு வருகிறது. அப்படியிருக்கும்போது கனடாவிலும், ஃபிரான்ஸிலும் நான் கலந்துகொண்ட விழாவில் பிரபாகரன் படம் போடுவதில் என்ன தவறு? இன்னும் சொல்லப்போனால் நான் போன இரண்டு நாடுகளிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் எதற்காக, எந்த நோக்கத்துக்காக என்பதைத் தெளிவுபடுத்தி சம்பந்தப்பட்ட அரசாங்கங்களிடம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அனுமதி வாங்கியிருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் ஐம்பது அடி உயர பிரபாகரன் கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளைப் போற்றும் பாடல்களும், அவர்கள் கருத்தை வலியுறுத்தும் பேச்சுக்களும் ஒலித்தன. இதற்கெல்லாம் அந்த நாட்டு அரசுகள் அனுமதி கொடுக்கிறது. அந்த நாட்டில் புலிகள் நடமாடுவதற்கும், அவர்கள் ஏதாவது பயங்கரவாதத்தை அந்த மண்ணில் நிகழ்த்தி விடுவார்களோ என்பதைக் கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும்தான் தடை. மற்றபடி புலிகளுக்கான உதவிகளை, அங்குள்ள தமிழர்கள் இன்னும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் நேரடி யாக புலிகளின் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் பொறுப்பாளரான ரத்தினதுரை ஒரு வாழ்த்துச் செய்தியை இயக்கத்தின் சார்பில் அனுப்பியிருந்தார்.

p45ek8.jpg

நம் நாட்டைப் பொறுத்தவரை விஷயம் வேறுவிதமாக இருக்கிறதே? அண்மையில் சென்னைக்கு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், விடுதலைப் புகளை ஆதரிக்கவே கூடாது என்றும் இந்தியா, இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலை யிடக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறாரே?

எங்களைப் பொறுத்தவரை, நாராயணன் என்பவர் தமிழர்களுக்கு விரோதமானவர். புலிகளின் எதிர்ப்பாளர். அதனால் இலங்கை விவகாரத்தில் நாராயணன் சொல்வதை இந்திய அரசாங்கம் ஏற்கக்கூடாது என்பது எங்களின் நிலைப்பாடு. இந்தியா பரிபூரணமாக இலங்கைப் பிரச்னையில் தலையிட்டால்தான் அங்குள்ள தமிழர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். ஆனால் இந்திய அரசு, இலங்கை தமிழனைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. காரணம், இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும் அனுபவமுள்ள ஒரு முதலமைச்சருமான கலைஞரை சந்தித்து இலங்கைப் பிரச்னை பற்றி ஆலோசிக்க, பிரதமர் கேபினட் அந்தஸ்துள்ள ஒரு அமைச்சரைதான் அனுப்பியிருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு அதிகாரியை அனுப்பியிருக்கக் கூடாது. இதை கலைஞருக்கு ஏற்பட்ட அவமானமாகத்தான் கருதவேண்டும். இந்த விஷயத்தில் கலைஞர் தனது அதிருப்தியைத் தெரியப்படுத்த வேண்டும். காரணம், உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் இலங்கைப் பிரச்னையில் அவர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை உற்று நோக்கத் துவங்கியிருக்கிறான். அவருக்கு என் மூலமாக சில செய்திகளை அனுப்பியிருக்கிறார்கள்.

என்ன செய்தி?

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப் பாக இந்தியா பிரகடனப்படுத்தி இருக்கிறது. இந்தத் தடையை நீக்க கலைஞர் தனது ஒட்டுமொத்த அரசியல் பலத்தை மத்திய அரசின் மீது பாய்ச்ச வேண்டும். அப்படி அவர் செய்வாரா என்பதுதான் அந்த மக்கள் என்னிடம் கேட்ட கேள்வி. என்னைக் கேட்டால், ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற உணர்வு கலைஞருக்கு எப்போதுமே உண்டு. ஆனால், இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் அவர் அதை நூறு சதவிகிதம் வெளிப்படுத்துவாரா என்பதுதான் கேள்வி.

சரி, புலிகளை எப்போதுமே அ.தி.மு.க. ஆதரித்த தில்லை. அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு நீங்கள் இவ்வளவு தூரம் புலிகளுக்காகப் பரிந்து பேசலாமா? அது கூட்டணி தர்மத்தில் வருமா?

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில்லை என்பது அ.தி.மு.க&வின் நிலைப்பாடு. இதில் நாங்கள் தலையிட என்ன இருக்கிறது? ஆனால், அந்தக் கட்சியோடு கூட்டணி அமைத்துக் கொண்டதாலேயே எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தேவையில்லையே? நாங்கள் இப்போது வைத்திருக்கும் கூட்டணி& தேர்தல் கால கூட்டணி, மக்கள் விரோதப் போக்கை ஆளும்கட்சி கடைபிடித்தால் அதை எதிர்க்கும் கூட்டணி... அவ்வளவுதான்.

உங்கள் இயக்க எம்.எல்.ஏ&க்கள் அ.தி.மு.க&வை விட, தி.மு.க&வுடன்தான் சுமுகமான உறவு வைத்திருப்பதாக உங்கள் கூட்டணி வட்டாரங்களிலேயே பேசப் படுகிறதே?

இது எங்கள் அரசியல் எதிரிகளின் வேலை. தி.மு.க. ஆட்சி நல்ல விஷயங்களைச் செய்தால் அதைப் பாராட்டும் அரசியல் பக்குவம் எங்கள் இயக்கத்துக்கு உண்டு. இல்லாதவர்களுக்கு கலர் டி.வி. கொடுப்பது நல்ல திட்டம். அதைப் பாராட்டுகிறோம். ஒருவர் தன் பெயரைத் தமிழில் மாற்றினால் அதற்கான கட்டணத்தைக் குறைத்திருக்கிறார். அதைப் பாராட்டுகிறோம். ஆனால், நாங்கள் கொண்டிருக்கும் கூட்டணி தர்மத்துக்கு மாறாக என்றுமே நடக்க மாட்டோம்.

எஸ்.சரவணகுமார்

நன்றிகள் யுூனியர் விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.