Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புயலை எதிர்நோக்கி இந்தியா

Featured Replies

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பெரிய புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகிவருகிறார்கள்.

ஒதிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை பைலின் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவருகிறார்கள்.

இந்தப் புயலின்போது, மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், கடலுக்கு அருகே செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவப்படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 1999ல் ஒதிஷாவைத் தாக்கிய பெரிய புயல் ஒன்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

ஆனால் இந்த முறை தாங்கள் மேலதிகத் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/10/131011_india_cyclone_video.shtml

கரையைக் கடந்தது பாய்லின் புயல்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 அக்டோபர், 2013 - 10:54 ஜிஎம்ட
131012051856_phailin_304x171_ap_nocredit

 

சனிக்கிழமை இரவு பாய்லின் புயல் தெற்கு ஒடிஷாவின் கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது.

அச்சமயம் 250 கிலோ மீட்டர் வேக சூறாவளிக் காற்று வீசியது.

இந்தப் புயல் துறைமுக நகரான கோபால்பூரைத் தாக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. அங்கிருந்த

பல ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுவிட்டனர்.

தொடர்புடைய விடயங்கள்

 

புயல்காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இந்தியா வரலாற்றிலேயே மிகப் பெரும் புயல் என்று வர்ணிக்கப்படும் இந்த புயல் காரணமாக கடந்த 24 மணி நேரமாக கடலோர ஆந்திரா மற்றும் ஒடிஷாவில் கடுமையான காற்றுடன் கூடிய மழை கொட்டிக்கொண்டிருக்கிறது.

வங்காள விரிகுடாவிலிருந்து நகர்ந்துவந்த இப்புயல் காரணமாக சுமார் நாலரை லட்சம் மக்கள் ஏற்கனவே தமது இருப்பிடங்களை விட்டு பாதுகாப்புக்காக வெளியேறியுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் கடல் பகுதிகளில் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. கடலும் கொந்தளிப்பாக உள்ளது. சில இடங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுத்துள்ள இந்திய அதிகாரிகள், புயல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒடிசாவில் 1999-இல் வீசிய பெரும் புயல் மழையில் சுமார் 10 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/india/2013/10/131012_phailinindia.shtml

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.