Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துக்களில் மாற்றங்கள் [2007]

Featured Replies

பார்ப்பனர்கள் அரங்கேற்றும் ஆரியக்கூத்து - என்ற தலைப்பின் கீழ் தலைப்புக்குத் தொடர்பில்லாமல், தலைப்பைத் திசை திருப்பும் வகையில் எழுதப்பட்ட அநாவசியக் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன.

  • Replies 768
  • Views 88k
  • Created
  • Last Reply

புலிகளுக்கு உதவியதாக "றோ" முன்னாள் அதிகாரி கைது என்ற தலைப்பு ஊர்ப் புதினம் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல யாழ் இணைய உறவுகளின் வேண்டுகோளுக்கிணங்க, யாழ் காலக்கண்ணாடி என்கிற தலைப்பின் கீழான ஆக்கங்கள் தனியாகவும் அது பற்றிய கருத்துக்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டு தனித் தலைப்புகளின் கீழ் இடப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு கிழக்கு தமிழர் அவலம். நாடாளுமன்றில முழு நாள் விவாதம் சம்பந்தமான இரண்டு தலைப்புக்களும் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

TAG - மாட்டியது நீங்களாவும் இருக்கலாம்!, எனும் தலைப்பில் இருந்து பிரிக்கப்பட்ட இரண்டு கருத்துக்கள் அது தொடர்பான கருத்தாடல் தலைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.

கலைஞன் ஆகிய நான் யாழுக்கு வந்து கருத்து எழுதுவதை நீங்கள் விரும்புகின்றீர்களா?? - என்ற தலைப்பு யாழ் நாற்சந்தி பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாலசிங்கத்தின் வேடமேற்று நடிப்பதே சத்தியராஜின் கனவு என்ற தலைப்பு அடுத்த கனவு, ஆன்ரன் பாலசிங்கம் என்று ஏற்கனவே இடப்பட்டிருந்த தலைப்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

"சீ.. தூ" என்ற கவிதைத் தலைப்பிலிருந்து இரண்டு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

"சந்தேகங்கள், ஆலோசனைகள், அறிவித்தல்கள்" என்ற தலைப்பிலிருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

புலிகள் மீது சவாரி செய்ய முனையும் வர்த்தகர்கள் என்ற தலைப்பு நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. இது போன்ற செய்திகளை இணைக்கும்போது உறுதிப்படுத்திவிட்டு, உண்மையான தகவலா என்பதை ஆராய்ந்து, ஆதாரத்துடன் இணைக்கவும். ஒரு தனிநபர் சார்ந்த, விடுதலைப் போராட்ட அமைப்புடன் தொடர்புடைய செய்தியாக இது இருப்பதால், இது பொய்யான தகவலாக இருக்கும் பட்சத்தில் தவறான விளைவுகளையே ஏற்படுத்தும். எனவே, ஆதாரமுள்ள செய்தியா என்பதை உறுதிப்படுத்தி இணைக்கவும்.

"சீ.. தூ" என்ற தலைப்பும், "சீ.. நா... ஏ" என்ற தலைப்பும் தற்காலிகமாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. திருத்தங்கள் செய்யப்பட்டபின் மீண்டும் இணைக்கப்படும்.

கருத்துக்கள் பண்பான முறையில் முன்வைக்கப்பட வேண்டும். சக கருத்துக்கள உறுப்பினர்களோடு நட்போடு கருத்தாடவேண்டும். மறைமுகமாகவோ, நேரடியாகவோ கருத்துக்கள உறவுகளைத் தாக்கி எழுதுதல் தவிர்க்கப்படவேண்டும். தனிநபர் மீதான பண்பற்றி சீண்டல்/தாக்குதல் கருத்துக்களை எழுதுவதை தவிர்க்கவேண்டும். -இவையெல்லாம் புதிய விடயமல்ல. கருத்துக்கள விதிமுறைகளில் உள்ள விடயம் தான். ஒருவர் கருத்துக்கள விதிமுறையை மீறி கருத்துக்களை எழுதினால், அதை நிர்வாகத்துக்கு சுட்டிக்காட்டுங்கள். அதைவிடுத்து நீங்களும் பதிலுக்கு பண்பற்ற முறையில் கருத்துக்களை எழுதாதீர்கள். இடையிடையே சில நல்ல கருத்துக்களையும் அத்தலைப்பின் கீழ் எழுதப்படும் போது - எந்தக் கருத்தை நீக்குவது, எதை அனுமதிப்பது என்று நிர்வாகத்தினர் குழப்பமடைய வேண்டி இருக்கிறது. சிலவேளைகளில் நல்ல சில கருத்துக்களையும் நீக்கவேண்டியேற்பட்டுவிடும். நேரம் செலவழித்து ஒருவர் எழுதுகிற கருத்தை இப்படி நீக்கவேண்டி ஏற்படும்போது, எழுதியவருக்கு நிர்வாகத்தினர் மீது எரிச்சல் ஏற்படும். எனவே, பண்பற்ற முறையில் கருத்துக்கள் ஆக்கங்கள் வரும்போது அது தொடர்பாக நிர்வாகத்தினருக்கு முதலில் அறியத் தாருங்கள். அவற்றுக்கு பதிலளிக்க முற்பட்டு உங்கள் நேரத்தையும், சக்தியையும் வீணாக்காதீர்கள்.

படைப்புக்களம் பகுதியை நாம் அதிகளவு மட்டுறுத்துவதில்லை. காரணம், அந்தப் பகுதி இதுவரை காலமும் அல்லது குறிப்பிட்ட சிலகாலம் சுமூகமான சூழல் நிலவியது. இனிவருங் காலங்களில் அப் பகுதியும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

"பஞ்சு மேகம்" என்ற கவிதைத் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட நிர்வாகம் தொடர்பான சந்தேகமும், அது தொடர்பான பதில்களும் பிரிக்கப்பட்டு "பரிந்துரை செய்தல்" என்ற தனித்தலைப்பாக "யாழ் உறவோசை" பகுதியில் இடப்பட்டுள்ளது.

யாழ்கள உறவுகளின் நேசக்கர அமைப்பு என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அரட்டைகளை தவிர்த்து அத்தலைப்பில் ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டும் முன்வையுங்கள்.

பெரியார் சிலைகளை உடைத்தது ஏன்? என்ற தலைப்பு மெய்யெனப்படுவது பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது. அதன் கீழ் எழுதப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

இராமர் பாலத்தை இடிப்பதற்கு அமெ. புலிகள் கூட்டுச் சதியாம் என்ற செய்தித் தலைப்பின் கீழ் நீண்ட விவாதம் ஒன்று நடந்திருப்பதாலும், நடந்துகொண்டிருப்பதாலும் - அதனை "மெய்யெனப் படுவது" என்கிற பகுதிக்கு நகர்த்தியுள்ளோம்.

coincidence என்ற தலைப்பு "யாழ் திரைகடலோடி" பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ஆக்கங்களை இணைப்பதைத் தவிர்க்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்கள் எதிர்காலத்தில் மகப்பேறு அடைந்து குழந்தைகள் பெற்றுக்கொள்வது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என்ற தலைப்பிலிருந்து 2 கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது.

- தயவு செய்து கள உறுப்பினர்களைத் தக்காமல் உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.

Edited by yarlpriya

உஞ்சுக் என்ற தலைப்பு கதை கதையாம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

பெண்களின் உடை: தமிழனின் கண்டுபிடிப்பு என்ற தலைப்பு பொங்கு தமிழ் என்கிற பகுதிக்குள் நகர்த்தப்பட்டுள்ளது.

கூகுள் வழங்கும் பர்ஸனலைஸ்ட் இணையப் பக்கம் என்ற தலைப்பு வலையில் உலகம் என்கிற பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

ஊர்ப்புதினம் பகுதியில் ஒரே தலைப்பின் கீழ் வர வேண்டிய சில செய்திகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன. இரு முறை இணைக்கப்பட்ட ஒரே செய்திகள் சில நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன.

தமிழர் தலைவனை நிந்திக்கும் தளத்தை எதிர்ப்போம்., தமிழ்நாதத்தை முன்வைத்து என்ற தலைப்பு தற்காலிகமாக நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

படகுகளில் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றால் நெடுமாறனைக் கைது செய்யுமாறு கடற்படையினருக்கு உத்தரவு எனும் கருத்தில் இருந்து kural என்பவரதல் இணைக்கப்பட்ட கருத்து ஒன்று நீக்கப்பட்டுள்ளது

மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு நடவடிக்கை முறியடிப்பு

கொக்கட்டிச்சோலைப் படுகொலை

வாழைச்சேனையில் ஆயுதக்குழுக்கள் கடைக்கு தீவைப்பு

புலிகளின் பொறுமைக்குப் பின்னால்..!

ஆகிய தலைப்புகள் நிர்வாகம் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே அந்தச் செய்திகள் கருத்துக்களத்தில் இணைக்கப் பட்டிருப்பதாலேயே அவை நகர்த்தப்பட்டிருக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

43 மக்கள் ஒரு மாதத்தில் படுகொலை சம்பந்தமான வெவ்வேறான தலைப்புக்களில் இணைக்கப்பட்ட செய்திகள் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

Edited by yarlpaadi

மன்னார் சிலாவத்துறை நோக்கி படையினர் முன்னகர்வு என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

சபையில் அமைச்சர் டக்கிளசுவை திட்டித் தீர்த்தார் சிவநேசன். கருத்தில் சில வரிகள் நீக்கப்பட்டுள்ளதுடன், அதன் கீழ் எழுதப்பட்ட ஒரு கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் தென்பகுதி மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்ற தலைப்பின் கீழ் சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.