Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆந்திராவில் டீசல் தாங்கி வெடித்து தீயில் கருகியது சொகுசுப் பேருந்து! - 45 பேர் பரிதாப மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
bus-fire-301013-150.jpg

பெங்களூரில் இருந்து ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்துக்கு நேற்றிரவு 10.30 மணிக்கு ஒரு ஆம்னி பஸ் புறப்பட்டது.வால்வோ வகையைச் சேர்ந்த அந்த ஏ.சி. பஸ்சில் 47 பயணிகள், டிரைவர், கிளீனர் என மொத்தம் 49 பேர் இருந்தனர். இன்று அதிகாலை 5.10 மணிக்கு அந்த பஸ் ஆந்திராவில் மெகபூப்நகர் மாவட்டம் கொத்தகோட்டா பகுதியில் பாலம் என்ற ஊரில் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். பஸ் 120 கிலோ மீட்டர் வேகத்துக்கும் மேல் சென்று கொண்டிருந்தது.

  

அப்போது ஆம்னி பஸ் டிரைவர் பெரோஸ்கான் முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு காரை முந்த முயன்றார். கார் மெல்ல சென்று கொண்டிருந்ததால் ஆம்னி பஸ் டிரைவர், அதன் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை சற்று விலக்கினார். அப்போது ஆம்னி பஸ் எதிர் பாராதவிதமாக சாலை ஓரத்தில் இருந்த சிறுபாலத்தில் மோதியது. கடுமையான வேகத்தில் மோதியதால் பஸ்சின் டீசல் டேங்க் மீது பாலம் இடித்தது. இதனால் டீசல் டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மறுவினாடி பஸ்சில் தீ பிடித்துக் கொண்டது.

 

பஸ்சின் வேகம் மற்றும் டீசல் சிதறல் காரணமாக பஸ் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. அந்த நவீன பஸ் முழுவதும் கண்ணாடியால் மூடப்பட்டதாகும். ஏ.சி. வசதி உள்ள பஸ் என்பதால் தீ பிடித்தது, உள்ளே தூங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக தெரியவில்லை. டிரைவர் பெரோஸ்கான் உடலில் தீ பிடித்த நிலையில், அலறியபடி பஸ்சை அவசரம், அவசரமாக நிறுத்தி விட்டு கீழே குதித்து தப்பினார். கிளீனரை ஒருவர் பிடித்து இழுத்து வெளியில் போட்டதால் அவர் தப்பினார்.

 

அதன் பிறகுதான் பயணிகளுக்கு, தங்களை தீ சூழ்ந்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். காப்பாற்றும்படி உதவி கோரி அலறிய பயணிகள் உயிர் பிழைப்பதற்காக ஒருவரை ஒருவர் முந்தியடித்தப்படி ஓடினார்கள். பஸ்சில் டிரைவர் இருக்கைக்கும், பயணிகள் இருக்கைக்கும் இடையில் உள்ள தடுப்பு பகுதி கதவை திறக்க முயன்றனர். ஆனால் பஸ் மோதிய வேகத்தில் சென்டிரல் லாக்கிங் சிஸ்டம் ஜாம் ஆகி விட்டது.இதனால் கதவு பூட்டு திறக்க முடியாதபடி நொறுங்கி இறுகி விட்டது. இதுதான் பயணிகள் உயிரை பறிக்கும் எமனாக மாறிப் போனது.

 

பஸ் நாலாபுறமும் தீ பிடித்து எரிந்ததால் பயணிகளால் தப்பி வெளியில் வர இயலவில்லை. மூன்று பயணிகள் மட்டும் எப்படியோ கண்ணாடியை உடைத்து வெளியில் குதித்தனர். என்றாலும் தீ பட்டதால் அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மற்ற 44 பயணிகளும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். பஸ் எரிவதை கண்டதும் பொதுமக்கள் சிலர் ஓடி வந்தனர். ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் பஸ் முழுமையாக எரிந்து போனது. பஸ் உள்ளே சிக்கிய 44 பயணிகளும் தீயில் கருகி பலியானார்கள்.

 

பலரது கண் எதிரில் துடிக்க, துடிக்க அவர்கள் பலியானது பரிதாபமாக இருந்தது. உதவி கேட்டு கதறியபடி பல பயணிகள் தீயில் கருகியது நெஞ்சை உறையச் செய்வதாக இருந்தது.இதற்கிடையே படுகாயம் அடைந்த 3 பயணிகளுக்கும் அந்த பகுதி மக்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் தீ விபத்து பற்றி தகவல் அறிந்த மெகபூப்நகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாகேந்திரகுமார் போலீஸ் படையுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். காயம் அடைந்திருந்த 3 பயணிகளையும் ஆம்புலன்ஸ்களில் ஏற்றி ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு மெகபூப்நகர் மாவட்ட கலெக்டர் வந்தார். மீட்புப் பணிகளை அவர் முடுக்கி விட்டார். சிறிது நேரத்தில் மெகபூப் நகரில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தன. பஸ் முழுமையாக நாசமாகி விட்டது. தீ உக்கிரம் காரணமாக பஸ்சின் கம்பிகள் பல எரிந்து உருகி விட்டன.பயணிகள் 44 பேரின் உடல்கள் கரிக்கட்டைகளாக மாறி போனது. பலரது உடல்கள் சாம்பலாகி விட்டது. இதனால் உடல்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

உடல்களை அடையாளம் காண ஐதராபாத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். அதன் பிறகு 40 உடல்களை மீட்டதாக வனபர்த்தி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாஸ் ரெட்டி கூறினார். பயணிகளின் உடமைகளும் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன. இந்த கோர விபத்து பற்றி மெகபூப் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் பெரோஸ்கானிடம் விசாரித்து வருகிறார்கள்.

 

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட பெங்களூரில் இருந்து தங்கள் சொந்த ஊரான ஐதராபாத்துக்கு வந்து கொண்டிருந்தவர்களாவர்கள். பல்வேறு கனவுகளுடன் வந்த அவர்களது வாழ்க்கை தீயில் கருகிப் போனது. பஸ்சில் தீ பிடித்ததும் முதலில் டிரைவர் பெரோஸ் கான் வெளியில் குதித்தார். அவருக்கு 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது.டிரைவருக்கு அருகில் இருந்த கிளீனர் தீயில் சிக்கிக் கொண்டார். டிரைவர் பட்டனை தட்டினால்தான் வாசல் கதவு திறக்கும். டிரைவர் இல்லாததால் கிளீனர் உதவி கோரி அலறினார். அப்போது ஆம்னி பஸ் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு காரின் டிரைவர் ஓடி வந்தார். அவர் பக்க வாட்டு கண்ணாடியை உடைத்து கிளீனரை மீட்டார். இல்லையெனில் கிளீனரும் தீயில் கருகி இருப்பார்.சுமார் 40 சதவீத தீக்காயம் அடைந்த கிளீனர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=96082&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.