Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியமும் - இந்திய நாடும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒரு இந்தியனுக்கும் ஒரு தமிழனுக்கும் இடையே நடக்கும் விவாதத்தை சிறப்பாக பதிவு செய்துள்ளார் நண்பர் செல்வம் தமிழன். தமிழர் குறித்து இந்தியனுக்கு இருக்கும் ஐயங்களை தெளிவு படுத்தியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுகள்.
--------------------------------------------------------------
இந்தியன்: தமிழ் தேசியம் என்கிறீர்களே..நீங்கள் இருப்பது இந்திய தேசம்தானே? உங்களுக்கேது தேசியம் தேசம் ?

தமிழன்: இந்தியா என்பது தேசமல்ல நாடு

இந்தியன்: நாட்டிற்கும் தேசத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு கண்டுபிடித்துவிட்டீர்?

தமிழன்: நான் கண்டுபிடிக்கவில்லை நாடு , தேசம் இதற்கு உங்கள் பொதுமொழியாம் ஆங்கிலத்தில் விளக்கம் பாருமய்யா.ஒரு நாடு ஒரு தேசம் ஆகவும் இருக்கலாம்.பல தேசமாகவும் இருக்கலாம்.இந்தியா பல தேசம் கொண்ட நாடு

இந்தியன்: அப்படியானால் தேசம் என்றால் என்ன ?

தமிழன்: ஒரே நில பகுதியில் நீண்ட காலமாக ஒரே மொழி ,பொருளியல் ,பண்பாடு ஆகியவற்றை நிலைத்துவிட்ட ஒரு இன மக்கள் வாழும் நிலபரப்பு தேசம் எனப்படும். அத் தேசத்தில் வாழும் மக்கள் தேசிய இனம் (nationality).

இந்தியன்: இந்து இன மக்கள் பெரும்பான்மை வாழும் நிலப்பரப்பே இந்தியா .அதனால் இந்தியா தேசமல்லவா ?

தமிழன்: இந்து என்பது மதம்.அது மதமா என்பதே சந்தெகம் அது வேறு பிரச்சினை.இந்து என்று இனம் கிடையாது.அது மதம்.ஐரோப்பா கண்டத்தில் கிறித்தவ மதம் பெரும்பான்மையாக அதற்காக கிறித்துவ தேசம் என்று அழைக்கமுடியுமா? அது எப்படிமுடியாதோ அது போலவே இந்திய துணை கண்டத்தை தேசம் என்று ஏற்க முடியாது

இந்தியன்: அப்படியானால் நீங்கள் nation(தேசம்) nationality(தேசிய இனம்) போன்றவற்றில் அரசு விண்ணப்பங்களில் இந்தியா ,இந்தியர் நிரப்புகின்றீரே ?

தமிழன்: அதை நாங்கள் விரும்பி ஏற்கவில்லை.தேசம் ,தேசிய இனம் என்பதை இந்திய நாட்டு மக்கள் புரிந்து கொள்ளகூடாது விழிப்புண்ர்வு பெற கூடாது என மறைத்து வைத்திருக்கிறீர்கள்.தமிழனுக்கு மட்டும் இந்த வஞ்சகம் அல்ல அனைத்து தேசிய இனங்களுக்கும் இதே பிரச்சினையே..

இந்தியன்: தமிழ் தேசியம் எழ அவசியம் என்ன ?

தமிழன்: இந்தியாவும் தமிழர் மீதான துரோகங்களும் என்ற பதிப்பு விரைவில் வரும் படியுங்கள் ( ஈழ உறவுகளை இன படுகொலை செய்தது,மீத்தேன் திட்டம்,கூடங்குளம் பிரச்சினை, மேலும் அதற்கு தனி நூலே எழுதலாம் விரைவில் வரும்)

இந்தியன் : உங்களின் நோக்கம் என்ன ?

தமிழன்:தனி நாட்டாண்மை

இந்தியன்: ஏன் ?

தமிழன்: நாடு என்ற அமைப்பால் குறிப்பிட்ட தேச நலனில் சரிவர நாட்டாண்மை செய்ய முடியாத பட்சத்தில் மக்களுக்கு நம்பிக்கை முழுவதும் போகும் பட்சத்தில், அந்த தேச மக்கள் தனி நாட்டாண்மை கோருவதே சால சிறந்தது. இந்திய நாட்டில் உள்ள ஒட்டு மொத்த தேசிய தேச மக்களை எம்மக்களின் உணர்வுகளை புரிய வைத்து எங்களுக்கான தீர்வை பெற்றுதர கோருவது நடைமுறைக்கு இயலாத ஒன்று..எங்களுக்கான புரட்சியின் மூலம் தனி நாடு அடைவதே எங்களுக்கான தீர்வு கிடைக்கும்..

இந்தியன்:உங்கள் தேசத்தில் இருக்கும் பார்ப்பண்ர்களை பற்றி ,திராவிடர் பற்றிய கருத்து என்ன?

தமிழன்: ஆரிய எண்ணம் செயலாக்கம் கொண்ட பார்ப்பண்ர்களை திராவிட எண்ணம் செயலாக்கம் கொண்ட திராவிடர்களை தமிழ் தேசிய சித்தாந்தத்தில் ஒதுக்குவோம் .தன்னை தமிழனாக நினைத்து தமிழுக்காக உழைக்க வரும் பல ஆயிரம் ஆண்டுகள் எங்களுடன் வாழும் பார்ப்பணர்களையும் 500 ஆண்டுகளுக்கு மேலாக வாழும் திராவிடர் என கூறும் மாற்று இனத்தாரும் தேசிய இனத்தின் மரபுபண்புகளை தழுவிய மரபினம் ஆவதால் தமிழ் தேசியத்தில் அவர்களை உள்வாங்குவோம்

இந்தியன்:தமிழ் தேசிய சித்தாந்தத்தை ஏற்காத திராவிட மற்றும் ஆரியர்களின் கதி?

தமிழன்:இங்கு அவர்களுக்கு வாழ உரிமையுண்டு எங்களை ஆள உரிமையில்லை..அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலன் பேச சட்ட மன்ற உறுப்பினராய் வர உரிமை உண்டு

இந்தியன்:ஏன் தமிழர் என்ற எண்ணம் கொண்ட திராவிடர்க்கு உரிமை கொடுக்கும் போது திராவிட எண்ணம் கொண்ட திராவிடர்க்கு மறுப்பதேன்?

தமிழன்:தேச நன்மைக்கு எதிராய் முடியும்..இங்கிருந்து கொண்டு திராவிட நாட்டுக்கு ஆதரவாய் செயல்பட்டால் எம் மக்களின் கதி.தமிழர் எண்ணம் கொண்ட திராவிடரும் பார்ப்பணரும் நம்பகதன்மை பொறுத்தே தலைமை பதவிக்கு அமர்த்தபடுவார். தமிழின நலனை பெரிதென நினைக்கும்பட்ச்த்தில் எங்களுக்கு அதிபராய் இருப்பதில் யாதொரு பிரிவினை சிந்தனையுமில்லை..நாங்கள் தேச நலன் விரும்பிகள் இனவாதிகள் அல்ல

இந்தியன்: தமிழ் தேசிய புரட்சியில் பெற போகும் உங்கள் நாடு..முதலாளித்துவ நாடா? பொதுவுடமை நாடா?

தமிழன்: எமது முப்பாட்டங்கள் திருவள்ளுவர் ,கனியன் பூங்குன்றனார் மற்றும் ஔவை பாட்டி போன்ற தத்துவ மேதைகள் பொதுவுடமை சார்ந்து அனைவரும் சமம் என்ற நோக்கில் சிந்தித்துள்ளனர் அவர்கள் வழியிலே நாங்கள்..பொதுவுடமை நாடே

இந்தியன்: மதம் பற்றி ?

தமிழன்: மத விவகாரங்களில் அரசு தலையிடாது..ஆனால் தமிழர் மதமான இயற்கை வழிபாடு மற்றும் சித்த நெறிகளை அரசு தொடர்ந்து பரப்புரை செய்யும்

இந்தியன்: சாதி சமூகம் பற்றி ?

தமிழன்: சாதி இரண்டொழிய வேறில்லைஎன்ற ஔவை பாட்டியின் சொல் படி நடப்போம்.மக்களுக்கு விழிப்புணர்வின் மூலம் ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைப்போம்.பெண் புலவர்கள் இலக்கியவாதிகள் என்று சம உரிமையுடன் வாழ்வார்கள்

இந்தியன்: நீங்கள் பிரிவினைவாதி

தமிழன்: நிச்சயமாக இல்லை.இந்திய துணை கண்டம் முழுவதும் தேசிய இன விடுதலை பெற்று தனி தேசங்களாக மலரும் பட்சத்தில் தமிழ் குடியரசு இந்திய துணை கண்டத்தின் பாதுகாப்பு கருதி கூட்டு ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்புக்கு வழி செய்வோம்.UNO போன்று UNI அமைப்பு செயல்பட தமிழ் குடியரசு முதல் நாடாய் நின்று வழிமொழியும்

இந்தியன்: வாழ்த்துக்கள்.உங்கள் தேசம் பெற போராட்டம் எப்பொது தொடங்கபோகிறீர்கள்?

தமிழன்: காலம் கனிந்துவிட்டது .ஆரம்பித்துவிட்டோம்

இந்தியன்: நானும் இந்தியன் அல்ல பஞ்சாபி என்ற தேசிய இனம் என இப்போதே அறிந்தேன்

தமிழன்: நீங்களும் களம் காணுங்கள் வெல்க மக்களாட்சி ! வெல்க புரட்சி !

கருத்தாக்கம் : செல்வம் தமிழன்.

— with Senthil Kumaran.

 

994385_745588875455965_1503864266_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.