Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் என்ன நாட்டாமையா? - இந்திய அரசுக்கு வைகோ கேள்வி

Featured Replies

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இந்தியாவின் தலைநகரம் புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக ஓகஸ்ட் 30 இல் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது:

ம.தி.மு.க. சார்பில் ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டம் நேற்று இரவு சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் (சிறையில் இருந்தாலும்) தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிற பக்கம். மனித சமுதாயம் இதுவரை கண்டும் கேட்டும் இராத கொடூர படுகொலை. செஞ்சோலை முகாமில் 61 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இத்தனை காலம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது திறக்காத இதயக்கதவுகள் இப்போது திறந்திருக்கின்றன. குண்டு வீசவில்லை. விமானம் குண்டு வீசவில்லை என்று இலங்கை அரசு சொல்கிறது. போர் நிறுத்த கண்காணிப்பு குழு, யூனிசெப், ஐ.நா. பிரதிநிதிகள் சொல்லட்டும்.

எது பயங்கரவாதம். இதை பேசித் தீர்க்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. ஆனால் எது பயங்கரவாதம் என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அரசே பயங்கரவாதத்தில் ஈடுபடுகிற போது அதை எதிர்ப்பது எப்படி பயங்கரவாதம் ஆகும்.

எந்த வாதத்தில் சிங்களத்துக்காரனோடு தமிழன் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற வாதத்தை இந்திய அரசு முன்வைக்கிறது.

இலங்கை துண்டாடப்படக் கூடாது என்று கூறும் இந்திய அரசே, இன்னொரு நாட்டை கூற உங்களுக்கு என்ன தகுதி, என்ன உரிமை இருக்கிறது.

நீங்கள் என்ன பெரிய நாட்டாண்மையா? அப்படியானால் சரித்திரம் மீண்டும் திரும்பும். கடந்த கால சம்பவங்கள் மீண்டும் உங்களுடைய கதவுகளை தட்டும்.

இந்தியா ஒன்றுபட்ட நாடு, இந்திய ஒருமைப்பாடு காப்பாற்றப்பட வேண்டும், சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஏற்றுக்கொண்டு தான் கட்சி நடத்துகிறோம்.

இந்திய அரசு அதிகாரப்பகிர்வை ஏற்றுக் கொள்வார்களா? எத்தனை முறை ஏமாற்றுவீர்கள். நீங்கள் என்ன யோசனை சொல்வது. ம.தி.மு.க. ஏற்காது. தமிழ் ஈழம் ஒன்றே இதற்கு தீர்வு. நேற்றும் இதைத்தான் வைகோ பேசினான். இன்றும் அதைத்தான் பேசுவேன். நாளையும் இதைத்தான் வைகோ பேசுவான்.

2 வருடம் என்ன 10 வருடம் பாதாள சிறை என்றாலும் வைகோ அதைத்தான் பேசுவான். இது வெறும் பேச்சல்ல. லட்சியங்களுக்காக போராடும் ஒரு போராளியின் வார்த்தை. தமிழ் மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்புகிறவரை பேசுவேன்.

ஈழத்தில் உள்ள 99 சதவீத மக்கள் தனிநாடு கேட்கிறார்கள். ஏன் சமாதானம் பேசுகிறீர்கள். இன்னும் எவ்வளவு பேர் மடிந்தாலும் சரி, வருங்கால சந்ததி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். நேற்று 573 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் யாரும் விடுதலைப் புலிகளை தவறாக சொல்லவில்லை. இதுவரை பட்ட தியாகம் வீண் போகக் கூடாது. விடுதலைப் புலிகள் தமிழர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று எச்சரிக்கையாக யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கிறேன். இன்றும் சொல்கிறேன், நாளையும் சொல்வேன்.

விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர். உதவியிருக்கிறார். இந்திய அரசு உதவி செய்திருக்கிறது. இந்திய அரசு நிறுத்திக் கொண்ட போதும் எம்.ஜி.ஆர். உதவினார்.

இந்திய அரசே இலங்கைக்கு எந்தவித உதவியையும் செய்யாதே, கடலில் வரும் மக்களை பாதுகாப்பாக கொண்டு வந்து சேருங்கள், இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய், தமிழக சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானம் தவறு என்று இலங்கை அரசு எப்படி கூறலாம்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் 30 ஆம் திகதி டில்லியில் இலங்கை தூதரகம் முன்பு எனது தலைமையில் எல்.கணேசன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். செப்டம்பர் 1 ஆம் திகதி சென்னையில் ஈழ தமிழர் பாதுகாப்பு பேரணி நடத்தப்படும் என்றார் வைகோ.

நன்றி - புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.