Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடமாகாண சபை ஆளுநர் சந்திரசிறி VS முதலமைச்சர் விக்னேஸ்வரன் - ஆளணி நியமன நிகழ்வை புறக்கணித்தார் CV:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

vik%20chandrasri_CI.jpg

 

ஆளணி வெற்றிடங்களிற்கு ஆட்களை நியமிக்கும் வடமாகாணசபையின் ஆளுநரது நிகழ்வினை தனது தனிப்பட்ட காரணங்களிற்காக பங்கெடுக்க முடியாதிருப்பதாக தெரிவித்து முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் புறக்கணித்துள்ளார். இன்று கோப்பாய் கல்வியியல் கல்லூரியினில் இடம்பெற்ற நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சியினிலேயே அவர் இவ்வாறு சமூகமளிக்காதிருந்துள்ளார்.

வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னராக அவசர அவசரமாக வெற்றிடமாகவுள்ள ஆளணிகளிற்கு தமது ஆதரவாளர்களை நியமனம் செய்ய  ஆளும் தரப்பு அமைச்சர்கள் முதல் சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் வரை ஆளுநருடன் கைகோர்த்து செயற்பட்டிருந்தனர். அவ்வாறாக ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட போதும் கடைசி நேரத்தில் சில நியமனங்கள் தாமதமடைந்திருந்தது. அவற்றினையே தேர்தலின் பின்னதாக  தற்போது ஆளுநரால் நிரப்பப்படுகின்றது.

இதற்கான நிகழ்வினையே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளாது தவிர்த்துள்ளார். குறிப்பாக வடமாகாணசபை அமைச்சாகளிற்கோ ஏனைய உறுப்பினர்களிற்கோ அழைப்புக்களினை ஆளுநர் விடுத்திருக்கவில்லை என கூறப்படுகின்றது.

முகாமைத்துவ உதவியாளர்கள் மற்றும் ஆசிரிய சேவைகளை சேர்ந்தவர்களென  முந்நூறிற்கும் அதிகமானவாகள் இன்று  நியமனக்கடிதத்தினை பெற்றுகொண்டிருந்தனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99758/language/ta-IN/article.aspx

 

 

எதேச்சதிகார போக்குகளை கைவிட்டு இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் : சி. வி.

வடமாகாண சபை செயலாளர்கள் தமது எதேச்சதிகாரமான போக்குகளை கைவிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும். இல்லையெனில் தமது பதவிகளை இராஜினமா செய்து விட்டு புதியவர்களை நியமிக்க வழிவிட  வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
c.v1_1.jpg
 
மன்னாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
வடமாகாண சபையினை மக்கள் பிரதிநிதிகளான நாம் பொறுப்பேற்க முன்னர் வடமாகாண சபையின் அதிகாரிகள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு ஆளுநருடைய விருப்பு வெறுப்புகளையும் மத்திய அரசினுடைய அமைச்சர்களின் விருப்பு வெறுப்புகளையும் திருப்திப்படுத்தும் வேலைத்திட்டங்களையும் நிறைவேற்றி வந்த செயலாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் திணைக்கள தலைவர்கள் பலருக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபை அமைச்சர்களுடனும் உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்ற முடியாமல் இருக்கின்றது. இந்த நிலைமை ஏன் என்று புரியவில்லை.
 
வடமாகாண மக்கள் கடந்த மூன்று தசாப்பதங்களாக நிலவிவந்த யுத்தத்தின் பாதிப்புகளை நேரடியாக அனுபவித்தவர்கள்.
 
அந்த மக்கள் வடமாகாண சபையை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளித்தது போது பல எதிர்பார்ப்புகளையும் மக்கள் பிரதிநிதிகளிடம் சேர்த்தே கையளித்தனர்.
 
ஆனால் இன்று மக்கள் பிரதிநிதிகள் மாகாண சபைக்கு ஊடாக பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்வதற்கு அதிகாரிகள் பலவிதமான தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
 
இவ்வாறான அதிகாரிகள் கடந்த காலங்களில் எவ்வாறு பொது மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்திருந்தார்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.
 
சில அதிகாரிகள் நாங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர்கள். ஆளுனரால் நியமிக்கப்பட்டவர்கள் மத்திய அரசினுடைய அமைச்சர்களது அனுசரணை எமக்கிருக்கிறது. வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் எம்மை ஒன்றும் செய்து விட முடியாது என்ற தோரணையில் செயலாற்றி வருகின்றார்கள்.
 
இவர்கள் நிச்சயமாக என்றோ ஒருநாள் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள்.
 
மக்களுக்கான சேவையை சரியான முறையில் மக்களிடம் முன்னெடுத்து செல்ல முடியாத இவர்கள் உடனடியாக பதவிகளை இராஜினமா செய்து விட்டு மக்கள் சேவையை முன்னெடுக்கக் கூடிய அதிகாரிகளை நியமிக்க வழிவிடவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.