Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய நாடாளுமன்றத் தேர்தலும், ஈழத் தமிழினம் மீதான காங்கிரசின் காதலும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்திய நாடாளுமன்றத் தேர்தலும், ஈழத் தமிழினம் மீதான காங்கிரசின் காதலும்! இந்திய நாடாளுமன்றத் தேர்தல் காலம் நெருங்கிவரும் நிலையில், இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழீழக் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. 

இதுவரை காலமும் தமிழீழ மக்கள் மீதான சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சி, சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டை நிராகரித்தே வந்துள்ளது. ஐ.நா.வின் மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா முதன்முறையாகக் கொண்டுவந்த இலங்கை மீதான குற்றப் பிரேரணையை தோற்கடிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது. அது இயலாத நிலையில், அதை நீர்த்துப் போகச் செய்து அதனை ஆதரித்தது. 

இந்த வருட மே மாதத்தில் அமெரிக்கா முன்மொழிந்த சிறிலங்கா மீதான குற்றப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை தமிழகம் உருவாக்கியிருந்தது. அமெரிக்காவின் சர்வதேச விசாரணை என்ற கோரிக்கையில் மாற்றம் செய்து, சிறிலங்கா மேற்கொள்ளவுள்ள உள்ளக விசாரணையில், அது விரும்பும் பட்சத்தில் ஐ.நா. தன் தொழில் நுட்பங்களை வழங்கலாம் என்ற சரத்தை உட்புகுத்தி, நீதிக்காகப் பாடுபடும் உலக நாடுகளையும், நீதிக்காகப் போராடிய தமிழகத்தையும் ஏமாற்றி, அமெரிக்காவின் பிரேரணையை ஆதரித்து, சிறிலங்காவைத் தப்ப வைத்தது. 

சிறிலங்காவில் பொதுநலவாய மாநாட்டை நடாத்த அனுமதிக்கக் கூடாது. சிறிலங்காவை பொதுநலவாய அமைப்பிலிருந்தே நீக்க வேண்டும் என்ற தமிழகத்தின் குரல்களை இந்திய மத்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. இறுதியாக, இந்தியா சார்பாக யாரும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தமிழகத்தின் ஒட்டுமொத்தக் குரல்களும், தமிழக சட்ட மன்றத்தில் இரு தடவைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களை எதுவும் செய்துவிடவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கோரும் தொனியில் மகிந்த ராஜபக்சேக்கு கடிதம் அனுப்பி வைக்க, இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் சார்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்சித் தன் பரிவாரங்கள் சகிதம் அந்த மாநாட்டுக்குச் சென்று சிங்கள ஆட்சியாளர்களைக் குளிர்வித்தார். 

இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களது தமிழினத் துரோகத்தை வெளிப்படுத்தும் முகமாக பொதுநலவாய மாநாட்டை மையப்படுத்தி இரு நிகழ்வுகள் இடம்பெற்றது. ஒன்று, சிறிலங்கா ஆட்சியாளர்களது தமிழின அழிப்பு நடவடிக்கையைக் கண்டித்து மொறிசியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் இந்த மாநாட்டைத் தான் புறக்கணிப்பதாக அறிவித்தார். ஏற்கனவே, கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹப்பர் இந்த மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தாலும், கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களது வாக்குக்களைக் குறிவைத்தே ஹப்பர் இந்த முடிவை எடுத்ததாக சிங்கள ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், மொறிசியஸ் பிரதமரின் புறக்கணிப்பு அறிவித்தல் சிங்கள ஆட்சியாளர்களை விடவும் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதுவும், அடுத்த பொதுநலவாய மாநாட்டை மொறிசியஸ் தீவில் நடாத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தப் புறக்கணிப்பு எதிர்மறையான பல விழைவுகளை ஏற்படுத்தும் என்று இந்திய தரப்பால் விடுக்கப்பட்ட எச்சரிக்கையையும் மொறிசியஸ் பிரதமர் கண்டுகொள்ளவில்லை. மொறிசியஸ் பிரதமரின் மாநாட்டுப் புறக்கணிப்பால், அடுத்த மாநாட்டை தமது நாட்டில் நடாத்தும் வாய்ப்பையும் தெரிந்தே இழந்தது மொறிசியஸ் அரசு. 

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னதாக, பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் இன்னொரு குண்டை வெடிக்க வைத்தார். யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்களது அவலங்களை நேரில் பார்வையிட்டுத் திரும்பிய பிரித்தானிய பிரதமர், பொதுநலவாய மாநாட்டில் வைத்தே சிறிலங்கா ஆட்சியாளர்களுடைய மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும் விமர்சித்ததுடன், அது குறித்த நீதியான முடிவை எட்டுவதற்கு சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நான்கு மாத அவகாசத்தை மட்டுமே வழங்குவதாக அறிவித்தார். எதிர்வரும், மார்ச் மாதத்திற்குள் போர்க் குற்றங்கள் குறித்தும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்தும் சரியான முடிவுகளை எட்டத் தவறினால், அதனை விசாரிக்க அனைத்துலக பொறிமுறை ஒன்றை உருவாக்க பிரித்தானியா பாடுபடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார். 

எதிர்பாராத கோணங்களிலிருந்தெல்லாம் விழுந்த அடியால் அதிகம் துடித்துப்போனது இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள்தான். 'இந்தியாவின் தமிழர்களை, டேவிற் கேமரூன் களவாடிவிட்டார்' என்று மேற்குலகின் பத்திரிகை ஒன்று தலையங்கம் எழுதியது. இந்தியாவைத் தாண்டி, எதையும் சிந்திக்கத் தெரியாத தமிழர்களுக்கும் டேவிற் கேமரூன் இன்னொரு திசையைக் காட்டியுள்ளார். இந்தியாவின் நலன்களுக்காகப் பலி கொள்ளப்பட்ட தமிழர்களும் புதிய நம்பிக்கையுடன் நிமிர்ந்தார்கள். 

இந்த நிலையில்தான், இந்திய காங்கிரஸ் கட்சி இன்னொரு வியுகத்தை வகுக்க ஆரம்பித்துள்ளது. அதற்காக, ப. சிதம்பரம் களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக, சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் குறித்தே எங்கும் பிரஸ்தாபிக்காத காங்கிரஸ் கட்சி சார்பாக மேடையேறிய ப. சிதம்பரம், இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலை என்று தெரிவித்துள்ளார். 'இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் மத்திய அரசின் நிலையும்' என்ற தலைப்பில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இலங்கையில் நடைபெற்றது இனப் படுகொலை என்றும், அந்தப் போரில் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்றும' முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். 

இது, இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களது மன மாற்றத்திற்கான ஒப்புதல் வாக்குமூலம் அல்ல. தமிழகத்தில் தங்களது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான வாக்கு மூல அரசியல் பித்தலாட்டம் என்பதை தமிழகம் உணர்ந்தே வைத்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இந்திய ஆட்சியாளர்கள் தெரிந்து வைத்திருக்காத ரகசியத்தை சிதம்பரம் கண்டெடுத்து வெளிப்படுத்தவில்லை. இந்திய ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் சிங்கள ஆட்சியாளர்கள் எதுவுமே செய்திருக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் நடாத்திய இனப் படுகொலைக்கான அத்தனை வளங்களையும் இந்தியாவே வழங்கியது. அந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு மேற்குலகம் மேற்கொண்ட முயற்சிகள் அத்தனையும் இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் அநாதரவாக்கப்பட்டு, சிங்களப் படைகளால் கொன்று குவிக்கப்பட்ட பின்னர், கோத்தபாய ராஜபக்ஷே 'இந்தியாவின் போரை நாங்கள் நடாத்தி முடித்தோம்' என்று வீராப்பாகச் சொன்னதை இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை மறுக்கவில்லை. 

முன்நாள் முதல்வர் கருணாநிதி மூலமாக ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடாத்தி, கடந்த தேர்தலில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட காங்கிரஸ் கட்சி, இந்தமுறை கருணாநிதியால் அரங்கேற்ற முடியாத நாடகம் ஒன்றை ப. சிதம்பரம் ஊடாக நடாத்த முயன்று வருகின்றது.

 

http://www.sankathi24.com/news/36205/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.