Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா, கனடா, பிரித்தானிய நாடுகள் இணைந்து ஜெனிவாவில் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவை இலக்கு வைத்து உருவாக்கபபடும் கெலும் மக்ரேயின் புதிய ஆவணப்படத்தில் புலிகள் பற்றிய தகவல்களும் வெளியாகுமா?

col_CI.jpg

எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் ஜெனிவா மகாநாட்டில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பிரித்தானியாவே இதில் முதன்மை நாடாக இருந்து செயற்பட்டு வருவதாக சர்வதேச  ஊடகங்கங்கள் கூறுகின்றன. அன்மையில் பிரித்தானிய வெளியுறுவுச் செயலர் விடுத்த அறிக்கையிலும் இலங்கைக்கான காலக்கெடுவுக்குள் அந்த நாடு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிடின் பிரித்தானியாவே மனித உரிமைப் பேரவையில் கடுமையான அழுத்தத்தைக் கொடுக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே இலங்கைக்கு எதிரான தனது புதிய ஆவணப்படத்தை உருவாக்கும் பணிகளை சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியிகி உள்ள போதும் உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் வெளியாகவில்லை.

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் வெளியிடும் நோக்கில் அவர் இந்த ஆவணப்படத்தை உருவாக்கி வருகிறார் எனக் கூறப்படுகிறது.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் நடந்த போர்க்குற்றங்களை வெளிகாட்டும் இரண்டு முக்கிய ஆவணப்படங்களை உருவாக்கியிருந்தார். இலங்கையின் கொலைக்களம், போர் தவிர்ப்பு வலயம் ஆகிய படங்கள் இலங்கை அரசின் போர் குற்றங்களை வெட்டவெளிச்சத்திற்கு கொண்டு வந்தன.

இதனால் கெலும் மக்ரே மீதும் சனல் 4 தொலைக்காட்சி மீதும் கடும் கோபத்தில் இருக்கும் இலங்கை அரசாங்கமும் கடும் போக்காளர்களும் கொழும்பில் அண்மையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு சென்றிருந்த சனல் 4 தொலைக்காட்சியினருக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இலங்கையின் புலனாய்வாளர்கள் தம்மை பின் தொடர்ந்தாக கெலும் மக்ரே உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் சனல் 4 ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற குடிவரவு அதிகாரிகள் எனக் கூறிக்கொண்ட சிலர் அவர்களிடம் விசாரணை நடத்தியதாக சனல் 4 தொலைக்காட்சியினர் குறிப்பிட்டிருந்தனர்.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஆவணப் படத்தில் இறுதி யுத்தத்தில் சரணடைந்த  விடுதலைப்புலிகளின் உயர் மட்ட தளபதிகள், படையினரால் கொல்லப்பட்ட முக்கிய தளபதிகள், அவர்கள் மீதான மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட சித்திரவதைகள் உள்ளிட்ட விடயங்களும் வெளிவரலாம் என்ற பலமான கருத்துக்கள் நிலவி வருகின்ற போதும் அதனையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99913/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.