Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம்" - முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறித்து அமைச்சர் டக்ளஸ் கருத்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Daclas-seithy-2-150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. அரியநேத்திரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத்தரப்புக்கு மாறியுள்ள அம்பாறை மாவட்ட எம்.பி. பியசேன ஆகியோருக்கிடையில் நேற்று சபையில் கடும் வாய்ச்சண்டை ஏற்ப்பட்டது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பியசேன எம்.பி.யும் அரியநேத்திரன் எம்.பி.க்கு இடையூறுகளை ஏற்படுத்திய அதேவேளை, அரியநேத்திரன் எம்.பி. பியசேன எம்.பி.யைப் பார்த்து கடுமையான தொனியில் பேசியதுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து உங்களது மனவேதனை புரிகின்றது என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு அரியநேத்திரன் எம்.பி. உரையாற்றினார்.

  

இதன்போது பியசேன எம்.பி. தொடர்ச்சியாக குறுக்கீடுகளை செய்து கொண்டிருந்தார். இதனை அவதானித்த குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் பியசேன எம்.பி.யைப் பார்த்து அமைதியாக இருக்குமாறும் இடையூறு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். எனினும் அவர் அதனை செவிமடுத்ததாக தெரியவில்லை. இதேவேளை, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, பியசேன எம்.பி.யைப் பார்த்து அமர்ந்து கொள்ளுமாறு சைகை மூலம் தெரிவித்தார். இதனையடுத்து அவர் அமர்ந்து கொள்ளவே அமைச்சர் டக்ளஸ் இடைமறித்து ஏதோ கூறினார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பியசேன எம்.பி. கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அரியநேத்திரன் எம்.பி. பியசேன எம்.பி.யைப் பார்த்து கடுமையான வார்த்தைகளால் திட்டினார் அமர்ந்து கொள்ளுங்கள், இல்லையாயின் இதைவிட கேவலமாக கேட்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார். இதன்போது வட மாகாண சபை குறித்து அரியநேத்திரன் எம்.பி. பேசுகையில், குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வட மாகாண முதலமைச்சர் பற்றி கூறும்போது ஆடத்தெரியாதவனுக்கு மேடை கோணலாம் என்பதைப் போன்று இருக்கின்றது என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=98372&category=TamilNews&language=tamil

'அழிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்ந்தால் இராணுவத் தடையை மீறி அங்கு செல்வேன் ,அந்த மண்ணில் உயிர் பிரிவது பாக்கியம்"
அதி­கா­ரத்தைப் பகிர்­வ­தாக சர்­வ­தே­சத்­திற்கு 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை காண்­பித்­து­விட்டு அதனை நடை­முறைப் படுத்­தாது விடு­வதே அர­சாங்­கத்தின் நோக்­க­மாக இருக்­கின்­றது. வடக்கு மாகா­ண­ச­பைக்கு மத்­திய அர­சாங்கம் போடும் முட்டுக் கட்­டைகள் இத­னையே காட்டுகின்றன என சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். 
c.v1_2.jpg
வடக்கில் அதிபாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை பார்வையிடச் சென்ற போது என்னை இராணுவத்தினர் திருப்பி அனுப் பிவிட்டனர். இந்த நிலை தொடர்ந்தால் இராணுவத்தினரின் தடையை மீறி நான் அப்பகுதிக்குச் செல்வேன் அப்போது இராணுவத்தினர் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் அந்த மண்ணில் விழுந்து உயிர் விடவும் நான் தயாராக உள்ளேன். அத்தகைய உயிரிழப்பை பாக்கியமாகவே கருதுவேன் என்றும் அவர் எடுத்துக்கூறியுள்ளார்.
 
முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வ­ரனை ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் மனோ­க­ணேசன் தலை­மை­யி­லான தூதுக்­கு­ழு­வினர் நேற்­று­மாலை சந்­தித்துப் பேசினர். இந்தச் சந்­திப்­பின்­போதே முத­ல­மைச்சர் இவ்­வாறு கருத்துத் தெரி­வித்­துள்ளர். ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் மரி­யாதை நிமித்தம் இந்தச் சந்­திப்பை மேற்­கொண்­டி­ருந்­தனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரி­வித்த வட மாகாண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன்:
 
13ஆவது திருத்தச் சட்­டத்தை நடை­முறைப் படுத்­தாது விடு­வ­தற்கே அரசாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதி­கா­ரத்தைப் பகிர்­வ­தாக கூறி 13ஆவது திருத்தச் சட்­டத்தை காண்­பித்­து­விட்டு அதனை நடை­மு­றைப்­ப­டுத்­தாது விடு­வதே அரசின் திட்­ட­மா­க­வுள்­ளது. இது­வரை எமக்கு இது­பற்றி தெரி­­யாமல் இருந்­தது. தற்­போது வட­மா­கா­ண­ச­பைக்கு அர­சாங்கம் போடும் முட்­டுக்­கட்­டை­களைப் பார்க்­கும்­போது இதன் பின்­னணி விளங்­கு­கின்­றது. அர­சாங்கம் வடக்­கையும் கிழக்­கையும் பரி­பா­லித்­து­விட்டு சிங்­கள மேல்­லாண்­மையை உட்­பு­குத்­தவே முயல்­கின்­றது. தமிழ் மக்­களும் தமிழ் பிர­தி­நி­தி­களும் இதனை உல­குக்கு எடுத்துச் சொல்ல முன்­வ­ர­வேண்டும்.
 
இது­வரை உங்கள் தலை­மை­யி­லான அணியின் ஒத்­து­ழைப்பு பூர­ண­மாக வடக்கு கிழக்கு மக்­க­ளுக்கு கிடைத்­துள்­ளது. இது தொட­ர­வேண்டும் என்­பதே எமது விருப்­ப­மாகும். நாடு பூரா­க­வு­முள்ள சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எந்தப் பிரச்­சினை ஏற்­பட்­டாலும் அதுற்கு முகம்.கொடுக்க நாம் பின்­நிற்க மாட்டோம்.
 
வடக்கில் நில ஆக்­கி­ர­மிப்பு தொடர்ந்­து­வ­ரு­கின்­றது. ஆல­யங்கள்இ வீடுகள் அதி­பா­து­காப்பு வல­யப்­ப­கு­திக்குள் இடித்து அழிக்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு அழிக்­கப்­படும் ஆல­யங்­களை பார்­வை­யி­டு­வ­தற்கு நான் கடந்­த­வாரம் சென்ற போது இரா­ணு­வத்­தினர் என்னை தடுத்து நிறுத்­தி­விட்­டனர். இத்­த­கைய செயல்கள் இனியும் தொடர்ந்தால் இரா­ணு­வத்­தையும் மீறி நான் அப்­பகு­திக்குச் செல்வேன்இ என்­மீது இரா­ணு­வத்­தினர் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தினால் அந்த மண்ணில் வீழ்ந்து உயி­ரி­ழக்கும் பாக்­கி­யத்தை நான் பெறுவேன் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
 
இந்தச் சந்­திப்பில் ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் மேல்­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்கள் நல்­லையா கும­ர­கு­ரு­பரன், எஸ். ராஜேந்­திரன், மத்­திய மாகா­ண­சபை உறுப்­பினர் வேலு­குமார், கொழும்பு மாந­க­ர­சபை உறுப்­பி­னர்­க­ளான வேலணை வேணியன், சண். குக­வ­ரதன், பிரி­யாணி குண­ரத்ன, கே.ரி. குரு­சாமி, எஸ். பாஸ்­கரா, லோரன்ஸ் பெர்­னாண்டோ ஆகியோர் இடம்­பெற்­றனர்.
 
இச்­சந்­திப்பு குறித்து ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­த­தா­வது;
பரஸ்­பர வேலைப்­பளு கார­ண­மாக தள்ளி போடப்­பட்­டி­ருந்த இந்த சந்­திப்பு இன்று இடம்­பெற்­றது. இதன் போது, வடக்கில் மக்கள் ஆணை­யுடன் தெரிவு செய்­யப்­பட்டு ஆட்சி பொறுப்பில் இருக்கும் கூட்­ட­மைப்பு நிர்­வா­கத்தை, முடக்கும் அரசின் செயல்­பா­டுகள் பற்­றிய நிலை­மை­களை முதல்வர் விளக்கி கூறினார். இவை­பற்­றிய உண்மை தக­வல்­களை சாதா­ரண சிங்­கள மக்­க­ளுக்கு எடுத்து கூறும்­படி வேண்­டுகோள் விடுத்தார்.
 
எதிர்­வரும் மேல்­மா­கா­ண­சபை தேர்­தலில், மேல்­மா­கா­ணத்தின் கொழும்பு, கம்­பாஹா, களுத்­துறை ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளிலும் நமது கட்சி போட்­டி­யி­டு­வது பற்­றியும்இ இது தொடர்பில் அடுத்த வாரம் கொழும்பில் கூட­வுள்ள எங்கள் அர­சி­யல்­குழு கூட்­டத்தில் இறுதி முடிவு எடுக்கப்­ப­ட­வுள்­ளது பற்­றியும் நான், முதல்­வ­ருக்கு எடுத்து கூறினேன். அத்­துடன், தமிழ் அர­சியல் கைதி­களின் பிரச்­சினை தொடர்பில் நான் கடந்த மாதம் முதல்­வ­ருக்கும், ஜனா­தி­பதிக்கும் எழுதி அனுப்­பி­யி­ருந்த கோரிக்­கைகள் பற்­றியும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.
 
கைதிகள், தடுத்து வைக்­கப்­ப­டி­ருப்போர் தொடர்­பான விப­ரங்­களை சட்ட மாஅ­திபர் திணைக்­க­ளத்­திடம் எதிர்பார்த்துள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். இந்த அதிமுக்கிய மனிதநேய விவகாரம் தொடர்பில் இணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்ய ப்பட்டது.
 

http://virakesari.lk/?q=node/359691

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.