Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுப்பு மூலை: தடுப்பால வந்தவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு மூலை: தடுப்பால வந்தவன்
நந்தி முனி
 
 
வன்னியப்பு ஆஸ்பத்திரிக்குப் போனவர். திரும்பி வரேக்க சைக்கிள் காத்துப் போயிற்று. கிட்ட இருந்த சைக்கிள் திருத்தும் கடைக்குள் நுழைந்தார். அங்கே கிளாக்கர் அமர்ந்திருந்தார். அவருடைய மோட்டார் சைக்கிளுக்கு காத்துப்போயிற்று. திருத்துநர் யாரோ ஒரு பொடியனின் சைக்கிளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். வன்னியப்புவுக்கு அந்தப் பொடியனை எங்கேயோ கண்ட மாதிரி இருந்தது. வன்னியப்பு யோசித்துக் கொண்டே கிளாக்கருக்குப் பக்கத்தில் அமர்ந்தார். திருத்துநர் பொடியனிடம் சைக்கிளைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தார்.... கிளாக்கர் வன்னியப்புவைப் பார்த்து எதையோ சாடையால் உணர்த்தினார்...

வன்னியப்பு: என்ன கிளாக்கர் அந்தப் பொடியன விடாமல் பார்க்கிறியள்...

கிளாக்: ஓமப்பு... ஆளத் தெரியுதே...

வன்னியப்பு: இல்லையே.

கிளாக்: உங்கட இடத்தில இருந்து வந்த பொடிதான். முந்தி பெரிய ஆள். பிக்கப்பில.. ரெண்டு பொடிகாட்டோட வருவார்...

வன்னியப்பு: ஓ.... இப்ப தடுப்பில இருந்து வந்திட்டாரோ...

கிளாக்: ஓமோம்... ஒரு முன்னாள் போராளி... இப்ப சைக்கிள்ல திரியிறார்...

வன்னியப்பு: முன்னாள் போராளியோ...அப்ப இன்னாள் போராளி எண்டும் இருக்குதே.. என்ன கதை இது... போராளி எண்டது ஒரு குணம். அது ஒரு தொழில் இல்ல...

கிளாக்: ஓமோம். தொழில் இல்லத்தான்.... ஆனா இப்ப அவர் வேற தொழில் செய்யிறபடியால் தான்... அப்பிடிச் சொன்னான்.

வன்னியப்பு: என்ன தொழில?

கிளாக்: மற்றவயைளோட திரியிறார்... அவயள் இவற்ற வீட்ட வந்துபோயினம் எண்டு சனங்கள் சொல்லுது.

வன்னியப்பு: மற்றவயளே... ஆரது. அந்த ஆக்களே...

கிளாக்: ஓமோம். அவையள்தான். இவர் இப்ப அவயின்ர ஆளாம்.

வன்னியப்பு: சும்மா சொல்லக்கூடாது... அவங்கள் தடுப்பில இருந்த பொடியள் அப்ப அவங்கட தொடர்புகள் இருக்கும்தானே... மற்றது அவங்களும் இவங்களச் சும்மாவிடமாட்டாங்கள். எப்பவும் பின்னுக்குத் திரிவாங்கள். அதவச்சு இப்பிடிக் கதைக்கப்படாது... நாக்கு அழுகிப்போயிடும்.

கிளாக்.: இல்லயப்பு.. இவ சண்டையில செத்திருந்தா சனம் இப்பிடிக் கதைக்காது. சாகாமற் தப்பினதுதான் பிரச்சனை.

வன்னியப்பு: எடக் கடவுளே.. அவங்கள் என்ன வேள்விக்கு நேர்ந்துவிட்ட கிடாயளே... சாகிறதுக்கெண்டு பிறந்தவங்களே...

கிளாக்: அவயள் சாகத்துணிச்சு போனதாலதான் நாங்கள் அவயளிட்ட எங்கட தலைவிதியக் குடுத்திட்டு அவயள் சொன்ன எல்லாத்தயும் கேட்டனாங்கள்... ஆன இப்ப சாகாமல் தப்பி வந்தது இளப்பம் தானே...

வன்னியப்பு: கிளாக்கர், அப்பிடிச் சொல்லாதையுங்கோ... அவங்களக் கடவுளாக்கிப் போட்டு நாங்கள் பக்தர்களா பேசாமல் ஒதுங்கி நிண்டதும் பிழைதான்.. இப்ப அவங்கள கைகழுவி விட்டதும் பிழை தான்...

கிளாக்: சாகத் துணிஞ்ச படியால தானே கடவுளாக்கிக் கும்பிட்டனாங்கள்...

வன்னியப்பு: அது சுயநலம். நாங்கள் சாகாமலிருந்து கொண்டு ஆற்றயும் பிள்ளையச் சாகக் குடுக்கிறது சுயநலம்.. அதுபோல இப்ப அவங்களக் கண்டால் ஒதுங்கிறதும் சுயநலம்தான். நாங்கள் அவங்கள நெருங்கிபோகப் பயப்படுறம் எண்டது தான் உண்மை... ஏனெண்டால் அவங்கள் பின் தொடரப்படுகிறாங்கள்... அதால அவங்களோட பழகப் பயந்திட்டு பிறகு அதுக்கு இப்பிடி விளக்கம் குடுக்கக் கூடாது....

கிளாக் : நாங்கள் சாகப் பயந்து உண்மதான். ஆனா இப்ப நாங்களும் அவயளும் ஒண்டுதான். ஏனெண்டா சாகப் பயந்தவனும் சாகேல... சாகத்துணிஞ்சவனும் சாகேல...

வன்னிப்பு: கிளார்க்கர் இப்பிடி குதர்க்கம் கதைக்கக்கூடாது. நீங்களும் அவங்களும் ஒண்டில்ல. அவங்கள் பின் தொடரப்படுகிறவங்கள். நீங்கள் அப்பிடியில்ல. நீங்களும் 95ஆம் ஆண்டு வன்னிக்கு வந்திருந்தால் இது விளங்கியிருந்திருக்கும். நானொண்டு கேக்கிறன் பதில் சொல்லுங்கோ பார்ப்பம்.

கிளாக்: கேளுங்கோ...

வன்னியப்பு: நீங்கள் ஏன் 95 இல வன்னிக்குப் போகேல...

கிளாக்: ஏன்ர வீடு யாழ்ப்பாணத்திலதானே இருக்கிது.

வன்னியப்பு: வீடு எங்க இருந்தது எண்டதில்ல பிரச்சனை... மனம் எங்க இருந்தது எண்டது தான் பிரச்சனை. உங்கட மனம் போராட்டத்தோட இருக்கேல... அப்பிடித்தானே...?

கிளாக்: அப்பிடிச் சொல்லேலாது. வன்னிக்கு வராதவனெல்லாம் போராட்டத்தோட இல்ல எண்டு எப்பிடிச் சொல்லுவியள்...?

வன்னியப்பு: நல்ல கேள்வி. அப்பிடித்தான்... வன்னியில இருந்து வந்தவனெல்லாம் மற்றவையளோட தொடுப்பு எண்டு எப்பிடிச் சொல்லுவியள்...? இந்தப் பிள்ளயள் சுயநலமாச் சிந்திக்கேல... அதுகள் சாகச உணர்வோட சிந்திச்சுதோ இல்லையோ சாகத்துணிச்சதுகள்.... கோழைத்தனமா முடிவெடுக்கேல்ல. நீங்கள் வன்னிக்கு வராதது உங்கட தெரிவு. அவங்கள் சொன்னத எல்லாம் செய்தனீங்கள் எண்டால் நீங்கள் ஏன் வன்னிக்குப் போகேல்ல? அந்த நேரம் வன்னிக்குப் போனது ஒரு வீரமான முடிவு.... அப்பிடி முடிவெடுத்தவங்களப் பார்த்து நீங்கள் இப்பிடிச் சொல்லுறது சரியே...?

2009இக்கு முன்னம் வீரர்களாத் தெரிஞ்சவங்கள் இப்ப கைதியாக வரேக்க நீங்கள் அவங்கள நிறுக்கப் பார்க்கிறியள். சிலருக்கு ஏதும் தொடர்புகள் இருக்கலாம்.... அதுக்காக எல்லாரயும் அவங்களோட சேர்த்து பாக்கேலாது. உங்கட பிள்ளயள் பத்திரமா இருக்கு. நீங்களும் பத்திரமா இருக்கிறீயள். ஆனா ஆற்றயும் பிள்ளயள் செத்துத்தான் அதுகளிண்ட வீரத்தயும், விசுவாசத்தயும் எண்பிச்சிருக்க வேணும் எண்டு எதிர்பார்க்கிறது ஆகப்பெரிய சுயநலம்.....

கிளாக்: அப்பு நீங்களும் அங்கயிருந்து வந்தனீங்கள்... அதுதான் அவங்களுக்குச் சப்போர்ட் பண்ணுறீங்கள்...

வன்னியப்பு: முந்தி வீரமா முடிவெடுக்காதவனெல்லாம் இப்ப எழும்பி நிண்டு ஆடுறான்... பாவம் அந்த புள்ளயள்.. கூனிக்குறுகித் திரியுதுகள்.. அதுகள் செய்த முதற் குற்றம் சுயநலமாச் சிந்திக்காதது. ரெண்டாவது குற்றம் கோழைத்தனமாச் சிந்திக்காதது. மூண்டாவது குற்றம் சாகாமல் தப்பி வந்தது. இப்ப உங்கள மாதிரி ஆக்கள் எல்லாம் கேள்வி கேக்கிற காலம்...ம்....

வன்னியப்பு சினந்தபடி எழுந்தார். தோளிலிருந்த துவாயை வெறுப்போடு உதறித் தோளில் போட்டுக் கொண்டு சைக்கிளை ஒட்டாமலே உருட்டிக்கொண்டு நடந்தார்... எதிரே இருந்த காவலரண் முகப்பில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.... ''ஒரே நாடு ஒரே தேசம்'
 
http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=11&contentid=342bb9e6-91f0-4bfe-bd0c-e7a484122ce9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.