Jump to content

அமெரிக்காவின் புதிய (ரோபோட்) போர்வீரர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் புதிய (ரோபோட்) போர்வீரர்கள் : ச.ச.முத்து

 

future-army-253x400.jpg

டேர்மினேற்றர் திரைப்படத்தில் அந்த காட்சி அடிக்கடி அந்த நேரங்களில்(1984) ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. அந்த காட்சிக்காகவே அந்த படமும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது.என்னதான் சுட்டாலும், வெடிவைத்து தகர்த்தாலும்,எரியும் தீச்சுவாலைக்குள் வீழ்த்தினாலும் மீண்டும் அந்த உருவம் எழுந்து இயந்திரமனிதனாக,மனிதனாக மாறி எதிரிகளை வேட்டையாடும்.ஆர்னோல்ட் ஸ்வாஸ்நேகர் இந்த பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

ரைற்றானிக்,அவ்தார் படங்களை எடுத்த ஜேம்ஸ்கமரூனின் அருமையான ஒரு பாத்திரப்படைப்புஅது. இதைப்போலவே, புதிய ரோபோ போர்வீரர்களை களங்களில் இறக்கும் ஒரு திட்டத்தை பென்ரகன் கொண்டிருப்பதாக அண்மையில் செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. அழுத்தங்களும்,தேவைகளும் ஏற்படும்போதெல்லாம் புதிய புதிய பாதைகளும் கதவுகளும் திறக்கும் என்பதே விதி.அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதனையே காட்டி நிற்கின்றன.

1993 ஒக்டோபர் 3-4ம்திகதிகளில் சோமாலியாவின் போர்குழுதலைவர் மொகமட் அய்டீயை பிடிக்க அல்லது கொல்ல என்று தலைநகர் மொகடீசுக்கு பறந்துசென்ற எம்எச்-60- எல் பிளாக்கவாக் (MH-60L-BLACKHAWK) கெலிகப்டர்களுக்கு நடந்ததும் அதன் லைபலட்டும் அதில் சென்றவர்களும் எவ்வாறு பிடித்து கொல்லப்பட்டார்கள் என்பதும்தான் அடுத்த வருடங்களில் ஆளில்லாத விமானங்களை இன்னும் கூர்மையாக்கி நடிவடிக்கைகளுக்கு ஏற்றதாக ஆக்கும் கரிசனையை அமெரிக்காவுக்கு கொடுத்தது.

புதியகண்டங்களை,புதியநாடுகளை கண்டுபிடிக்கும் கடற்பயணங்கள் நடாத்தப்பட்டது வெறுமனே சாகசங்களுக்காகவோ,மனிதகுலநன்மைக்காகவோஅல்லவே.பொருளாதாரநலனுக்காகவும்,ஆட்சியின் பரப்பை நீட்டுவதற்காகவுமே. உலகஒழுங்கு என்பது ஆதிக்கசக்திகள் வரையும் கோடுகளில்தானே இருக்கிறது-இயங்குகிறது. இப்போதைய உலகஒழுங்கு என்பது நிலத்தைதுளைத்து எவ்வளவு வளங்களை அள்ளமுடியுமோ அவ்வளத்தையும் வாருவதுதான்.

என்னதான்-ஐக்கியநாடுகள்பட்டயம்,மனிதஉரிமைகள்,நாடுகளுக்கான இறைமை என்பனவெல்லாம் சட்டவாக்கமாக எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் அதே நாடுபிடிக்கும்,காலனிகளை உருவாக்கும் ஆதிக்கமனோபாவம் கொஞ்சமும் குறையவே இல்லை-அமெரிக்கா இதில் முன்னிலையில் இருக்கிறது. என்னதான் பொருளாதாரத்தில் வானத்தை தொட்டுநிற்கும் வளர்ச்சி கண்டாலும் பலம் என்பது இல்லாதுவிட்டால் அனைத்துமே கானல்நீர்போல போய்விடும் என்பது முன்னேறியநாடுகளுக்கு நன்குதெரியும் ஒரு சேதியாகும்.

பலத்தின் மூலம் கிடைக்கும் ஒருவிதமான மேலாதிக்க அங்கீகாரமே பொருளாதாரத்துக்கு இன்றி அமையாதது என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

ஆனால் இதற்கு இடைஞ்சலாக இருப்பது உயிர்இழப்புகள்தான். மக்களது இழப்புகளை எப்போதுதான் ஆதிக்கசக்திகள் ஒரு பொருட்டாக எண்ணிணிருக்கின்றன.

அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையே அவர்களின் ராணுவவீரர்களின் உயிர்இழப்புகள்தான்.

வியட்னாம்போரில் தமது இளையோர் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட கொந்தளிப்பும்,எதிர்ப்பும்தான் அமெரிக்க தோல்வியுடன் முகம்நிறைய மண்ணுடன் திரும்பகாரணம்.

இன்றும்கூட ஆப்கானிஸ்தானில் இழப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அதற்கான தீர்ப்பை தேர்தல்களில் சந்திக்க நேரிடும் என்பதே மேற்குலக அதிபதிகளின் கவலை.

நாடுகளின் வரையறுக்கப்பட்ட வான்பரப்பு,இறைமை என்பதை எல்லாம் துலாவி எறிந்துவிட்டு அட்டகாசமாக எங்கும் புகுந்து தாக்கி திரும்ப உயிருள்ள பைலட்டுகள் இல்லாத ஆளில்லாத விமானங்கள் இப்போது இவர்களின் வானத்தை பற்றிய கவலையை சற்றே தணித்துள்ளது. வானம் அவர்கள் வசமாகிவிட்டது.

ஒரு பெரிய தொகுதி போர்விமானங்கள் செய்யும் வேலையை-அழிவை-மிக நுட்பமாக இந்த ஆளில்லாத விமானங்கள் செய்து தருவதில் பைலட்டுகள்கைது,’எவ்16 பைலட் கொல்லப்பட்டார்” பைலட்டை காணவில்லை’ போன்ற குடைச்சல்கள் ஆளும்தரப்புக்கு இப்போது இல்லை தரையில் வீட்டுக்கு வீடு சென்று சோதனைஇடும் ராணுவத்தினரும்,ரோந்து செல்லும் ராணுவத்தினருமே அதிகமாக மிதிவெடிகள்,கிளைமோர்தாக்கு,சினைப்பர்தாக்கு,தற்கொலைதாக்கு என்பனவற்றால் உயிரிழப்பதால் அமெரிக்காவில் எழும் எதிர்ப்பு நாளுக்கு நாள் கூடிய வண்ணமே இருக்கிறது..

நவீனபோர்முறையில் துருப்புகளின் எண்ணிக்கையைவிட திறமையானதிட்டமிடலும்,அதனை செயற்படுத்த மிக நவீனமான உபகரணங்களும்(ஆயுதங்கள் எட்பட) என்பனவே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அமெரிக்காவும் 2019ல் தனது படையினரின் எண்ணிக்கையை 420000 ஆக குறைக்க உள்ளதாக பாதுகாப்புவெளியீட்டு செய்தி தெரிவிக்கிறது. ஆட்களை குறைத்து அந்த இடைவெளியில் ரோபோர்ட்களை பணிக்கு (போருக்கு) அமர்த்தும் திட்டம்பற்றி இப்போது பகிரங்கமாகவே அமெரிக்கா கதைக்கஆரம்பித்துவிட்டது.

முன்னாள் அமெரிக்கபடைத்தளபதியும்,ஆப்கானிஸ்தானில் நேட்டோவின் தலைமைதளபதியுமாக இருந்த ஜெனரல் ஸ்ரான்லி மெக் க்கிறிஸ்ரல் போன்றவர்கள் இதனைப்பற்றி வெளிப்படையாகவே கருத்துக்கூற ஆரம்பித்திருப்பது அமெரிக்கா ரோபேர்ட் யுத்தத்தின் பிரகடனம் என்றே பார்க்கலாம். மனிதனால் கணடுபிடிக்குப்பட்ட அனைத்து பொருட்களும் மனிதனது கரங்களின் நீட்சி என்றே கருதலாம்.விரல்களின் நீட்சி துப்பாக்கியின் ரிகரில் விரலை வைத்தபடி எதிரிதேசத்தில் வலம்வருவதற்கு பதிலாக இப்போது அதே விரல்கள் வீட்டின்அறையிலோ முகாமின் கட்டுப்பாட்டுஅறையிலோ ரிமோற்கன்ரோலின் மீது.அவ்ளோதான். . தான் நேரடியாக எல்லாவிதமான ஆபத்துகளுக்குள்ளாகவும் மிதந்துசென்று செய்துமுடிக்க வேண்டியதை தனது கருவியின்மூலம் செய்துமுடிக்கிறான்..அதான்.

ஈராக்கிய யுத்தத்தில் வருடக்கணக்காக ஈடுபடும் ஒரு போர்வீரன் அமெரிக்காவின் ரெக்ஸாஸ் மாநிலத்தைவிட்டு புறப்பட்டதே இல்லை.எப்படி இது சாத்தியமாகிறது?அங்கிருக்கும் முகாமில் இருந்தபடியே ஆளில்லாத விமானங்களை இயக்கியஅவர் தினமும் நிறைய பறப்புகளை மேற்கொண்டு ஏராளமபேரை ஈராக்கிய தரப்பில் கொன்று,ஈராக்கிய-அல்குவைடா நிலைகளை படம் எடுத்து தரைஅணிகளுக்கு வழங்கிவிட்டு ஒரு சில நிமிடங்டகளில் தனது பிள்ளைகளின் வீட்டுபாடங்களை கவனிக்கவும் முடிவது நிச்சயமாக இந்த ரோபேர்ட் யுத்த தொழில்நுட்பத்தினாலேயே..

இப்போது அதற்காகவே ரோபோட்கள் வீதிரோந்துகளுக்கும் மற்றும் சமர் பிரயோகங்களுக்கு என்று வரப்போகிற(து).ரோபேர்ட்களை அஃறிணையாக அழைப்பதா இல்லை உயர்திணையா..அது பிறகு..)

அமெரிக்க பூர்வாங்கமாக செய்தி வெளியிடுகிறார்கள் என்றால் அதற்கு நிறைய காலத்துக்கு முன்னரேயே அதனை தமது சோதனைகள்,முயற்சிகள்,நடவடிக்கைகளில் ரகசியமாக ஈடுபடுத்தி இருப்பார்கள். பிறகு,1969களிலேயே தமது ராணுவதொடர்பாடலுக்காக அமைத்திருந்த இன்ரநெற் என்ற உலகஅதிசயத்தை எவ்வளவுகாலம் ரகசியமாகவே வைத்திருந்தார்கள்.அது பொது பாவனைக்கு வந்தது என்னவோ 80களின் இறுதியிலேயே…எவ்வளவுகாலம் இன்ரெநெற் என்ற தொடர்புமுறையை தமது ராணுவத்தேவைகளுக்காக பாவித்து அதன்பிறகே பகிரங்கமாக்கியது போலவே இப்போதும் ரோபேர்ட் யுத்தமுறை பற்றிய அமெரிக்காவின் அறிவிப்புகள் மற்றும் கருத்துபகிர்வுகள் இருக்கின்றன.

அவர்கள் இந்த துறையில் மிக ரகசியமாக மிகமிக முன்னே நிற்பார்கள் என்பது தெரிகிறது இந்த ரோபோட்களை உருவாக்கும் முயற்சியில் ஏற்கனவே 43க்கும் மேற்பட்ட நாடுகள் இறங்கியுள்ளன. சுவாரசியமானவிடயம் என்னவென்றால், ரஸ்யா,சீனா,பாகிஸ்தான்,ஈரான் போன்றவையும் அடங்கும். நாடுகள் மட்டுமல்லாமல் போராட்டஅமைப்புகளும்கூட இந்த புதியபோர்முறை-அதுதான் மனிதர்கள் நேரடியாக செல்லாமல் இயந்திரங்களை-இலத்திரனியலை உபயோகப்படுத்தும்முறையை கவனித்தே வருகிறார்கள்.

இஸ்ரேல் என்ற அங்கீகரிக்கப்பட்ட தேசத்துக்கும் தேசம்என்ற வரையறைகள்அற்ற போராட்டஅமைப்பான கிஸ்புல்லாவுக்குமான இறுதியுத்தத்தில் கிஸ்புல்லா அமைப்பு நான்குவிதமான ஆளில்லாத விமானங்களை பயன்படுத்தி இருப்பதை காணலாம். அதைப்போலவே ஜிகாட் இணையத்தில் ஈராக்கில் எங்கோ வைக்கப்பட்டிருக்கும் எல்ஈடி பொறிவெடியை அதற்கு பலபல மைல்கள் அப்பால் ஒரு அறைக்குள் இருந்து கணணிமூலம் வெடிக்கவைத்து அமெரிக்கவீரர்களுக்கு இழப்பை ஏற்படுத்திய காட்சிகளும் அடுத்த கட்ட போர்முறையை அனைவரும் கையிலெடுக்க தயாராக உள்ளார்கள் அல்லது முயற்சிக்கிறார்கள் என்பது தெரிகிறது.

ஆயினும் அமெரிக்காதான் தற்போதைக்கு இதில் முதலாவதாகவும் முன்னணியிலும் உள்ளது. ரோபேர்ட் போர்வீரர்கள் மனிதர்களுக்கு பதிலாக களமிறக்கப்படும் காலத்தில் இருக்கிறோம். போர்வீரர்களின் இழப்புகள்,அதை பயன்படுத்தி காய்நகர்த்தும் எதிர்க்கட்சி,ஆராய்ச்சிமணியை அடித்து நீதி கேட்கும் யாரோ என்ற எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் யுத்தங்களை செய்ய ரோபேர்ட்களே உகந்தவையாக ஆள்பவர்களுக்கு இருக்கிறது.

ரோபேர்ட் போர்வீரர்களில் இருக்கும் இன்னுமொரு அனுகூலம் என்னவென்றால் அது தனது பக்கத்தில்வரும் சக ரோபேர்ட்டின் இழப்பால் ஒருபோதும் ஆத்திரமடையாது.அதனால் அதற்காக பழிவாங்கவும் செய்யாது. போர்வீரனை இழந்த பெற்றோருக்கு எழுதும் அனுதாப-ஆறுதல்கடிதங்கள் இந்த ரோபோhட்களின் இழப்புகள் ஏற்படும்போது தேவையே இல்லை.

ரோபேர்ட்களின் கண்களுக்கு பாடசாலைக்கு புத்தகபையை முதுகில் சுமந்துசெல்லும் சின்னஞ்சிறுமியும் இன்னொரு யுத்தடாங்கி T-20யும் ஒன்றாகவே தெரியும் என்பதும் அதற்கான உத்தரவுகளில் பிழைகள் ஏற்படும்போது பெரியமனித அழிவுகளை அது உண்டாக்கும் என்பதும் அதனுடைய மற்றைய பக்கம்- 20ம்நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட யுத்தம்சம்பந்தமான சட்டங்கள் எதுவுமே 21ம்நூற்றாண்டில் இப்போது உருவாகிவரும் ரோபேர்ட்களுக்கு சேல்லுபடியாகுமா தெரியவில்லை.

 

american-army-robot-1-400x400.jpg

கார் உற்பத்தியில் ஏறத்தாழ 70வீதத்துக்கும் அதிகமான வேலைகளை மனிதர்களிடமிருந்து ரோபேர்ட்கள் பறித்து எடுத்துள்ளதை போன்று யுத்தத்திலும் இனி ரோபேர்ட்களே ஆதிக்கம் செலுத்தும்.

தேசஎல்லையும் யுத்தமுனையும் பல்லாயிரம் மைல்கள் வித்தியாச தூரத்தில் இருக்கும் ஆதிக்கநாடுகளுக்கு இந்த ரோபேர்ட்கள் வரப்பிரசாதம்தான்-நிச்சயமாக.

ஆனால் தனது தேசவிடுதலைக்காக-தேசியவிடுதலைக்காக போரிடும் மக்களின் தர்மமான நியாயமான லட்சியத்தை எங்கிருந்தோ ஏவிவிடப்படும் நான்கு ஐந்து ரோபேர்ட்கள் போய் அழித்துவிடலாம் என்றால் என்ன செய்வது?

யார் கண்டார்கள் வரும்காலத்தில் ஜெனீவாமனித உரிமைமண்டபத்திலும் ரோபேர்ட்களே தீர்மானங்களை சமர்ப்பித்து,விவாதித்து,வெட்டி,சுருக்கி நிறைவேற்றவும் செய்யலாம். மனிதர்கள் வெறும்பார்வையாளர்களாக இருந்தால் மட்டுமே போதுமானது என்ற ஒரு காலம் வந்தாலும் வந்துவிடும்.

http://inioru.com/?p=39022

Link to comment
Share on other sites

ரோபேர்ட்களின் கண்களுக்கு பாடசாலைக்கு புத்தகபையை முதுகில் சுமந்துசெல்லும் சின்னஞ்சிறுமியும் இன்னொரு யுத்தடாங்கி T-20யும் ஒன்றாகவே தெரியும்  :lol: 

 

இவர் ராபர்ட் செய்தால் அப்படிதான் தெரியும். நாங்கள் multi-sensory/multi-spectral packages பாவிக்கின்றோம். மேலாக contour matching/multiple perspectives இன்றைய நுட்பங்களில் எங்கள் ஆராய்ச்சி கூடங்களில் உருவாகி வருகின்றன. அதைவிட இயந்திர உலகத்துக்கான சட்ட மற்றும் பாவனை முறைகளை (moral, ethical and legal dimensions) மனித குல நலனுக்கு ஒப்பான வகையில் வடிவமைக்கும் வேலைகளை சட்ட மற்றும் தொழிநுட்பம் என்ற இரு துறையினரும் ஈடுபட்டுள்ளனர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மீள நினைவூட்டுவது வரலாற்றின் கடமை: ( மறப்பது மனிதனின் இயல்பு? )   தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது.   ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன. இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று.   - தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2007   நன்றி: Sakthy Sabaratnam
    • வணக்கம் வாத்தியார் . ........! பெண் : புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும் சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்   பெண் : பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அதுதான் தாளமோ மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள் குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்…   பெண் : வானில் தோன்றும் கோலம் அது யார் போட்டதோ பனி வாடை வீசும் காற்றின் சுகம் யார் தந்ததோ வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் வளர்ந்தாடுது இசைபாடுது வழிந்தோடுது சுவை கூடுது…....!   --- புத்தம் புது காலை பொன்னிற வேளை ---
    • நீங்கள் எப்போது இந்த காவுதலை நிறுத்தி சாதாரண நிலைக்கு வரப் போகிறீர்கள்,??? 
    • வாக்கெடுப்பு மந்த கதியில் நடைபெறுகிறது? சனங்கள் எல்லாரும் வாக்கு அளிப்பார்களோ? விடுமுறைதினம் ஆகையால், ஒவ்வொரு பாதையில்.. கோயில்/குளம்/புரட்டாதி சனி விரதகாரர்/மற்றும் கோழிக்கறி/புரியாணி உண்போர்/ஊர் சுற்றி பார்ப்போர் என ஆளாளுக்கு.. பப்பாவில் ஏற்றிய பொது வேட்பாளருக்கு நாமம் வைத்து விடுவார்களோ.
    • ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்! ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்று மாலை 4 மணி வரை மக்கள் தமது வாக்குகளை அளிக்க முடியும் இருந்த நேரத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 4 மணியாகும்போது வாக்கெடுப்பு நிலையத்தில் வரிசைகளில் நிற்கின்ற அனைத்து வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும் வரையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது இதேவேளை இன்று காலை 10 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது களுத்துறை – 32% கம்பஹா – 25% கேகாலை – 15% நுவரெலியா – 30% இரத்தினபுரி – 20% அம்பாறை- 30% மன்னார்- 29% முல்லைத்தீவு – 25% வவுனியா – 30% கொழும்பு – 20% கண்டி – 20% காலி – 18% மாத்தறை – 30% மட்டக்களப்பு – 17% குருநாகல் – 30% பொலனறுவை – 38% மொனராகலை – 21% பதுளை – 21% https://athavannews.com/2024/1400397
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.