Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் கலைஞரே! வரலாற்றுக் கடமையாற்ற முன் வருக! - பழ. நெடும

Featured Replies

தமிழர் வரலாற்றில் நெருக்கடி மிகுந்த காலகட்டம் பிறந்துள்ளது. சர்வதேசச் சமுதாயத்தின் வேண்டுகோளை ஏற்று மூன்றாண்டு காலத்திற்கு மேலாக அமைதிகாத்து மறுபடியும் மறுபடியும் பேச்சுவார்த்தைக்குச் சென்ற புலிகள் வஞ்சிக்கப்பட்டனர். சிங்களப் பேரினவாத வல்லரக்கரின் வஞ்சனை செஞ்சோலைச் சிறார்களின் பிணக்குவியலில் வெளிப்பட்டுள்ளது. மனிதநேயம் கொண்ட அனைவரும் பதறித்துடிக்கின்றனர்.

உலகத்தமிழர்களின் கோபமும் கொதிப்பும் பலவடிவங்களில் வெளியாகிக் கொண்டுள்ளது.

தமிழகம் ஓருருவாய் பேருருவாய் கிளர்ந்தெழுந்துள்ளது. சிற்றூர்கள் முதல் பெருநகரங்கள் வரை மக்கள் போராட்டங்கள் வெடிந்தெழுந்துள்ளன. உலகநாடுகளில் வாழும் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்கின்றன.

தாயகமண்ணில் பெரும்பகுதியை மீட்டுவிட்ட விடுதலைப்புலிகள் எஞ்சிய பகுதியையும் மீட்கும் போரில் ஈடுபட்டுள்ளனர். செஞ்சோலைச் சிறார்கள் சிந்திய இரத்தத்தின் சிவப்பு வேங்கைகளின் விழிகளில் வெளிப்பட்டு களத்தில் வீறுகொண்டு போராடவைத்துள்ளது.

களத்தில் புலிகளின் வீறுகொண்ட பாய்ச்சலுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியாத சிங்கள வீரர்கள் பின்வாங்கி ஓடுகின்றனர். சிங்களப்பேரினவாத அரசு தோல்வியால் வெறிகொண்டு அப்பாவி தமிழ்மக்களைக் கொன்று குவிக்கிறது.

சிங்கள இராணுவம் விமானங்கள் பாகிஸ்தான் விமானிகளால் ஓட்டப்பட்டு தமிழர்கள் வாழும் பகுதிகளில் நெருப்புமழை பொழியப்படுகிறது. அமெரிக்க வல்லாதிக்க அரசு கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தான் மூலமாக இலங்கைக்குக் கப்பல் கப்பலாக வந்திறங்குகின்றன.

ஆனால் தமிழர்களைக் கொன்றுகுவிக்க கொலை ஆயுதங்களை வாரி வழங்கும் அமெரிக்க அரசு அதை மறைக்க அங்குள்ள அப்பாவித் தமிழர்களைக் கைது செய்து புலிகளுக்கு ஆயுதம் வாங்க முற்பட்டார்கள் எனப் பொய்வழக்குத் தொடுத்துள்ளது.

ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்ய அமெரிக்காவோ, பாகிஸ்தானோ ஆயுதங்கள் வழங்குவதை இங்குள்ள பார்ப்பண பத்திரிகைகள் கண்டிக்கவில்லை மாறாக இந்தியா ஆயுதம் வழங்கத் தயங்கியதால்தான் இலங்கை வேறுநாடுகளை நாடிச்செல்ல நேரிட்டது. எனவே ‘இந்தியாவே ஆயுதங்களை அளிக்கவேண்டும்’ எனப்பொருந்தாவாதம் புரிந்து இந்திய அரசுக்குத்தூபம் போடுகின்றன. பரம்பரைத்தமிழ்ப் பகைவர்கள் சிங்களவெறியர்களுடன் கைகோர்க்கத் தயங்கவில்லை.

தமிழீழ விடுதலைப் போரின் இறுதிக்கட்டம் பிறந்துள்ள இந்த வேளையில் தமிழர்கள் ஒவ்வொருவரும் அதற்குத்துணையாக நிற்க வேண்டிய அவசியமும் அவசரமும் நேர்ந்துள்ளது.

நமது வாழ்நாளில் நமது கண்ணெதிரில் நடைபெறும் தமிழீழ விடுதலைப் போரில் நமது பங்களிப்பு என்னவென்பதை வரலாறு பதிவுசெய்யும் என்பதில் ஐயமில்லை. அதைப்போலவே தமிழராகப் பிறந்தும் துரோகம் செய்தவர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

வரலாற்றுக்கடமை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்படும்போது அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது வரலாற்றில் என்றும் மறைவதில்லை.

இட்லரின் நாசிசமும், முசோலினியின் பாசிசமும் உலகைக்கவ்விப் பிடிக்கத்திட்டமிட்டு உலகளாவிய போரைத் தொடங்கிய போது ஸ்டாலின், சர்ச்சில், ரூஸ்வெல்ட் ஆகிய மூவரும் ஒன்றுபட்டு நின்று தங்களின் வரலாற்றுக்கடமையை நிறைவு செய்து உலகைக் காப்பாற்றினார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் அமெரிக்க முகாம் - சோவியத் முகாம் என இரண்டாகப் பிரிந்து மூன்றாம் உலகப் போருக்கு வித்திட்ட வேளையில் புதிதாக சுதந்திரம் பெற்ற இளம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் செய்வது இன்னதென அறியாமல் தத்தளித்தன. அப்வேளையில் இரு அணிகளையும் சாராத மூன்றாவது முகாமை உருவாக்கி உலகப் போரை மூளவிடாமல் தடுத்த வரலாற்றுக் கடமையை இந்தியப் பிரதமர் நேரு செய்தார்.

நேருவிற்குப் பிறகு இந்தியா சிதறுண்டு போகும் என்ற அரசியல் ஆருடங்கள் வெளியாகிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் முதலில் லால் பகதூரையும், அடுத்து இந்திராவையும் சனநாயக முறையில் பிரதமர்களாக்கி வரலாற்றுக் கடமையை காமராசர் நிறைவு செய்தார்.

பாகிஸ்தான் இராணுவப் பேயாட்சியில் இருந்து விடுதலை பெற வங்க மக்கள் போராடிய போது அவர்களுக்கு உறுதுணையாக நின்று வங்க தேசம் தோன்றுவதற்கான வரலாற்றுக் கடமையை நிறைவேற்றினார் இந்திரா காந்தி.

கியூபா விடுதலைப் போராட்டத்தில் பிடல் காஸ்ட்ரோவின் தோளோடு தோள் நின்று போராடி சுதந்திர கியூபாவை உருவாக்கி வரலாற்றுக் கடமையை நிறைவு செய்த சேகுவேரா வரலாறாகவே இன்னமும் நிற்கிறார். வரலாற்றுக் கடமை என்பது எல்லோருக்கும் எப்போதும் ஏற்பட்டுவிடுவதில்லை. அபூர்வமாக சில நேரங்களில் உருவாகிறது. அதை உணர்ந்து கடமையைச் செய்பவர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். ஸ்டாலின், நேரு, இந்திரா, சேகுவேரா ஆகியோர் அப்படித்தான் வரலாற்று நாயகர்களானார்கள்.

அத்தகைய வரலாற்றுக் கடமை இப்போது தமிழக முதல்வர் கலைஞரை எதிர்நோக்கியுள்ளது.

தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழக முதல்வரின் பங்கு என்பது மகத்தானது. மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது தனது பங்களிப்பினை செவ்வனே செய்தார். அப்போராட்டத்திற்கு நிதி உதவி உட்பட பல வகையிலும் பேருதவி புரிந்தார். ஆனால் கால வெள்ளம் அவரை அடித்துச் சென்றுவிட்டது.

அவர் பெயரைச் சொல்லி பதவிக்கு வந்த செல்வி செயலலிதா தமிழீழப் போராட்டத்திற்கு முற்றிலும் எதிரானவராகவே செயல்பட்டார். தமிழ்நாட்டில் ஆதரவாக இயங்கியவர்களை ஒடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு தமிழினப் பகைவராகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார்.

தற்போது முதல்வராகியுள்ள கலைஞர் கருணாநிதியின் காலத்தில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய உலகத் தமிழர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தமிழர்களின் நீண்ட, நெடிய வரலாற்றில் மிக முக்கியமாக காலகட்டம் இது உலகத்தில் தமிழருக்கென்று ஒரு தனிநாடாக தமிழீழம் மலர பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும், தமிழர்களும் உயிர்த்தியாகம் உட்பட எண்ணற்ற தியாகங்கள் புரிந்து தமிழீழ மண்ணை சிவந்த மண்ணாக்கியுள்ளனர்.

தமிழீழம் மலரவிடாமல் தடுக்கப் போராடும் சிங்களப் பேரினவாதிகளுக்கு ஏகாதிபத்திய நாடுகள் துணை நிற்கின்றன.

தன்னந்தனியாகப் போராடும் தமிழீழ மக்களுக்குத் துணை நிற்க வேண்டிய கடமை தாய்த்தமிழகத்திற்கும் அதன் முதல்வர் கலைஞருக்கும் உண்டு.என்றும் இல்லாத வகையில் முதல்வர் கலைஞருக்கு மத்திய அரசிலும் அளவு கடந்த செல்வாக்கு உள்ளது. காங்கிரசுத் தலைமையிலான கூட்டணியில் மதிப்பு மிக்க மூத்தத் தலைவராக அவர் விளங்குகிறார். தமிழக மக்களும் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவாக அணி திரண்டுள்ளனர்.

இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை என்ற நிலை பிறந்துள்ளது. எனவே இந்த நல்ல வாய்ப்பினையும், காலம் அளித்துள்ள பதவியையும் பயன்படுத்திக் கொண்டு வரலாறு அளித்துள்ள கடமையைச் செய்ய முன் வருமாறு முதல்வர் கலைஞரை வேண்டிக் கொள்கிறோம்.

முதல்வர் கலைஞர் குறைந்தபட்சமாக தனது தலைமையில் அனைத்துக் கட்சித் தூதுக் குழு ஒன்றை அழைத்துக் கொண்டு தில்லி சென்று பிரதமரைச் சந்தித்துக் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கச் செய்ய வேண்டும்.

1. இந்திய அரசு இலங்கையுடன் எத்தகைய பாதுகாப்பு உடன்பாடும் செய்து கொள்ளக் கூடாது.

2. இந்திய அரசு இலங்கைக்கு எத்தகைய ஆயுத உதவியோ, இராணுவப் பயிற்சியோ அளிக்கக் கூடாது

3. இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் விமானங்கள், கப்பல்கள் ஆகியவற்றை இந்திய விமான நிலையங்களிலோ, துறைமுகங்களிலோ அனுமதிக்கக் கூடாது.

4. நார்வே நாட்டின் சமரச முயற்சியின் பேரில் இருதரப்பும் சம்மதித்துக் கையெழுத்திட்ட உடன்பாட்டை நிறைவேற்றும்படி இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்.

5. இருதரப்புப் பேச்சு வார்த்தை முடிந்து இறுதி உடன்பாடு ஏற்படும் காலம் வரையில் இலங்கை வட-கிழக்கு மாநிலத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு தமிழர் பொறுப்பில் நிர்வாகம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்கும்படி இந்திய அரசை வலியுறுத்தும் வரலாற்றுக் கடமையைச் செய்ய முதல்வர் கலைஞர் முன்வர வேண்டும். இது உலகத் தமிழர்களின் ஒரு மனதான வேண்டுகோள் ஆகும்.

http://sankathi.org/news/index.php?option=...id=306&Itemid=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.