Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் முடிவினால் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது சிறிலங்கா இராணுவம் – சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sarath_uni.jpg

தனது எதிர்ப்பையும் மீறி மகிந்த ராஜபக்ச அறிவித்த போர்நிறுத்தத்தினால், 2009 ஜனவரி இறுதியில், விடுதலைப் புலிகளுடனான போரில் தோல்வியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டதாக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

ஜனநாயக கட்சியின் தலைவரான அவர், செசல்வத்தையில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 

2009 ஜனவரி 31ம் நாள் அறிவிக்கப்பட்ட இரண்டு நாள் தற்காலிக போர்ஓய்வை அடுத்து, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 500 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். 

சிறிலங்கா அதிபர் 48 மணிநேர போர்ஓய்வை அறிவித்த போது நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். 

இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகளால், பின்தள்ளப்பட்ட விடுதலைப் புலிகள், இதனைப் பயன்படுத்திக் கொண்டு மீள இணைந்து கொள்வார்கள் என்று நான் உணர்ந்தேன். 

சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளை விடுதலைப் புலிகள் தகர்த்துக் கொண்டு முன்னேறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக, எதிர்பார்த்த போதும், போர்ஓய்வுக்கு இணங்க கட்டாயப்படுத்தப்பட்டேன். 

புலிகளின் தாக்குதலினால் நாம் நிலத்தையும், இராணுவ கருவிகளையும் அப்போது இழந்தோம். 

நிலங்களைக் கைப்பற்றி முன்னேறத் தொடங்கிய பின்னர், இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக, நாம் நிலங்களை இழந்து பின்வாங்கினோம். 

பிரபாகரனை எல்லாப் பக்கங்களிலும் இருந்து நாம் தாக்கிக் கொண்டிருக்கிறோம் என்று, சிறிலங்கா அதிபர்  2009 பெப்ரவரி 4ம் நாள் உரையாற்றிய போது, உண்மையில் நாம், நிலங்களை இழந்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தோம். 

அப்போது சிறிலங்கா இராணுவம் போரை இழந்து விடும் தோல்வியின் விளிம்பில் இருந்தது. 

ஆனால், பெருமளவு தியாகங்களினாலும், பல உயிர்களை இழந்தும் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து போரில் வெற்றியீட்டினோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

http://www.puthinappalakai.com/view.php?20140223110014

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.