Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தல் – அதன் வரலாற்றுப் பின்னணி

Featured Replies

காரைதீவு கோமணகிருஷ்ணன் எழுதிய மூலக்கட்டுரையை சில திருத்தங்களுடன் காரைதீவு தமிழ்வேந்தன் அவர்கள் அனுப்பிவைத்துள்ளார்.  இன்று ஊடகங்களில் பிரதானமாகப் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனைத் தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயம் காணப்படுவதால் அது குறித்த வரலாற்றுப் பின்னணியை இச் சந்தர்ப்பத்தில் வெளிக் கொணர்வது அவசியம்.

கல்முனை மற்றும் கல்முனைக்குடி என்பன இரு வௌ;வேறு தனிக்கிராமங்களாகும். மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள பதிவேடுகளின் படி கல்முனைப்பட்டினமானது ஆரம்பத்தில் நூறு வீதம் தமிழர்களையே கொண்டிருந்தது. கல்முனைப்பட்டினமானது வடக்கே தமிழ்க்கிராமமான பாண்டிருப்பையும் தெற்கே முஸ்லிம் கிராமமான கல்முனைக்குடியையும் கிழக்கே கடலையும் மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லையாகக் கொண்டு விளங்கிற்று. கல்முனைப்பட்டினத்தின் வடக்கு எல்லை ‘தாளவட்டுவான்’ வீதியும் தெற்கு எல்லை ‘தரவைப்பிள்ளையார் கோயில்’ வீதியும் ஆகும். கல்முனைப்பட்டினம் மூன்று கிராமத்தலைவர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கல்முனையையும் கல்முனைக்குடியையும் பிரிக்கும் எல்லையாகச் சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த தரவைப்பிள்ளையார் கோயிலின் முன்னால் கடற்கரையை நோக்கிச் செல்லும் ‘தரவைப்பிள்ளையார் கோயில்’ வீதியே விளங்கிற்று.

அக்காலத்தில், பொதுமராமத்து இலாகாவினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனைப் பெயர்ப்பலகை முன்பு தரவைப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் இருந்த இப்பெயர்ப்பலகை அப்போதைய கல்முனைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரின் (முஸ்லிம்) அனுசரணையுடன் திட்டமிட்ட முறையிலே தெற்கு நோக்கி கல்முனை ஸாகிராக் கல்லூரி வளவுக்கு முன்னால் நகர்த்தப்பட்டது. கல்முனைக்குடியைக் கல்முனையுடன் இணைத்து எதிர்காலத்தில் முஸ்லிம் பெரும்பான்மைக் கிராமமான கல்முனைக்குடியையும் கல்முனையின் பகுதியாகச் சித்தரித்துக் கல்முனைப் பட்டினத்தில் தமிழர்களைச் சிறுபான்மையாக்கும் திட்டத்தின் முதல் அங்கமே மேற்கூறப்பட்ட பெயர்ப்பலகை நகர்த்தப்பட்ட நிகழ்வாகும்.

கல்முனைப்பட்டினம் 1892ம் ஆண்டின் 18ம் இலக்கக் கட்டளைச் சட்டத்தினால் நிறுவப்பட்ட உள்ளூர்ச்சபையொன்றினால் நிருவகிக்கப்பட்டது. 1947 வரை கல்முனை மூன்று கிராமசேவையாளர் பிரிவுகளைக் (குறிச்சிகளை) கொண்டிருந்தது.

இம்மூன்று குறிச்சிகளும் (1ம், 2ம், 3ம் குறிச்சிகள்) தமிழர்களையே கொண்டிருந்தன. பின்பு 1946ம் ஆண்டின் 3ம் இலக்க பட்டினசபைகள் சட்;டத்தின் பிரகாரம் இற்குப் பதிலாகக் கல்முனைப் பட்டினசபை உருவாக்கப்பட்ட போது கல்முனைக்குத் தெற்கே நான்கு பிரிவுகளைக் (குறிச்சிகளைக்) கொண்டிருந்த கல்முனைக்குடிக் கிராமமும் கல்முனைப் பட்டினத்துடன் இணைக்கப்பட்டது.

அதேவேளை கல்முனைக்கு மிக அண்மித்ததாக அமைந்த பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை போன்ற தமிழர்வாழ் கிராமங்கள் கல்முனைப் பட்டினசபையின் கீழ் கொண்டுவரப்படவில்லை. கல்முனைப்பட்டினசபையில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் திட்டத்தின் அடுத்த அங்கமே இது.

மேலும், கல்முனைப் பட்டினசபைக்குரிய வட்டாரங்கள் பிரிக்கப்பட்ட வேளைகளிலும் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். வட்டாரங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழர் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்காகக் கல்முனை 3ம் குறிச்சியை ‘மாரியன் வீதி’ எனப்படும் வீதியால் இரண்டாய்ப் பிரித்து வடக்கே உள்ளவர்களைக் கல்முனை 2ம் குறிச்சியுடன் சேர்த்து 2ம் வட்டாரம் எனவும், தெற்கே உள்ளவர்களைக் கல்முனைக்குடியின் 3ம் குறிச்சியுடன் சேர்த்து 3ம் வட்டாரம் எனவும் அமைத்தார்கள். இதனால் கல்முனை 3ம் குறிச்சித் தமிழர்கள் இரண்டு வட்டாரங்களில் பங்கு போடப்பட்டார்கள். கல்முனைப் பட்டினசபையில் தமிழ் உறுப்பினர்களைக் குறைக்கும் திட்டமே இது. இதனால் கல்முனைப் பட்டினசபையின் 7 வட்டாரங்களுள் 2 வட்டாரங்கள் தமிழ்ப் பெரும்பான்மையாகவும் 5 வட்டாரங்கள் முஸ்லிம் பெருமபான்மையாகவும் வருமாறு திட்டமிட்டு அமைக்கப்பட்டன.

முன்பு கல்முனைக்குத் தெற்கே ‘தரவைப்பிள்ளையார் கோயில்’ வீதிக்கும் தற்போது ‘செயிலான்’ வீதி என அழைக்கப்படும் வீதிக்கும் இடைப்பரப்பில் பிரதான வீதியை அண்டி தரவைப்பிள்ளையார் ஆலயத்திற்கான மடமும் அதற்குரிய வளவும் அதனைச் சுற்றி சுமார் 100 தமிழ்க் குடும்பங்களும் இருந்தன. இப்பகுதியில் வாழ்ந்தோருக்குக் கல்முனை 3ம் குறிச்சிக் கிராமத்தலைவரே கடமைகள் செய்து வந்தார்.

முதலாவதாக நடந்த கல்முனைப்பட்டின சபைத் தேர்தலின் போது கட்டவிழ்த்து விடப்பட்ட காடைத்தனத்தினால் ‘தரவைப்பிள்ளையார் கோயில்’ வீதிக்கும் ‘செயிலான்’ வீதிக்கும் இடையில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுப் பயத்தினால் இடம் பெயர்ந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் மன்னாருக்குச் சென்று குடியேறினர்.

கல்முனைப் பட்டினசபையின் முதலாவது நடவடிக்கை தமிழ்க்குறிச்சியான கல்முனை 2ம் குறிச்சியில் அமைந்திருந்த கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் கடற்கரையோரம் 2 ஏக்கர் நிலம் முஸ்லிம் மையவாடிக்கு ஒதுக்கப்பட்டது. முஸ்லிம் கிராமமான கல்முனைக்குடியில் கடற்கரையோரம் நிலம் இருக்கும் போதுதான் இது தமிழர்களுக்கு எதிராக வேண்டுமென்று செய்யப்பட்டது. மட்டுமல்லாமல் கல்முனைக்குடியில் முஸ்லிம்களுக்கென்றிருந்த சந்தையை 1950 இல் மூடிவிட்டு முஸ்லிம் உறுப்பினர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப் பட்டினசபையின் அனுசரணையுடன் தமிழர்களின் கல்முனைச் சந்தையில் முஸ்லிம்கள் ஊடுருவி அங்கிருந்த தமிழ், சிங்கள வர்த்தகர்களை இடம் பெயரச் செய்தார்கள்.

உண்மையில் ‘கோப்பை உடைத்தான் சந்தி’ என முன்னர் அழைக்கப்பட்டதும் தற்போது ‘செயிலான் வீதி’ என அழைக்கப்படுவதுமான இடத்திலிருந்துதான் கல்முனைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசம் வடக்கு நோக்கி இருந்தது. ஆனால் காலவரையில் அப்பகுதியை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துக் கொண்டதாலேயே தமிழர்களின் பிரதேசம் ‘தரவைப்பிள்ளையார் கோயில்’ வீதி (தற்போது கடற்கரைப்பள்ளி வீதி) வரை தள்ளப்பட்டது.

1967ம் ஆண்டு கல்முனை 1ம் குறிச்சியைச் சேர்ந்த கடற்கரைப் பகுதியின் அரசகாணிகளில் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்கள் அத்துமீறிக் குடியேற்றப்பட்டு இப் பகுதிக்குக் ‘காரியப்பர்புரம்’ என்றும் பெயரிடப்பட்டது. தமிழர்கள் இதனை எதிர்த்தார்கள். அதனால் ஏற்பட்ட கலவரத்தின் போது கல்முனையின் தென் எல்லையான கல்முனை 3ம் குறிச்சியைச் சேர்ந்த தமிழர்கள் தாக்கப்பட்டும், பொருட்கள் நாசமாக்கப்பட்டும், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும் அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதால் அம்மக்கள் அகதிகளாகி அண்மைய தமிழ்க்கிராமங்களில் தஞ்சமடைந்தனர். கலவரம் அடங்கிய பின் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பிய தமிழர்கள் பலர் பயத்தின் காரணமாகக் குறைந்த விலைக்கு முஸ்லிம்களுக்குத் தங்கள் வீடு,வளவுகளை விற்றுவிட்டு வேறு இடங்களுக்குச் செல்லலாயினர். இவ்வாறு இடம் பெயர்ந்த சிலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையைச் சேர்ந்த கறுவாக்கேணியில் குடியேறி வாழத் தொடங்கினர்.

சுமார் 250 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் கல்முனையில் மட்டுமல்ல கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய இ;;டங்களிலும் பரந்து முஸ்லிம் மக்களிடையே வாழ்ந்தனர். 1960 இல் சாய்ந்தமருது (கரவாகு தெற்கு) கிராமசபை தேர்தலொன்றை அடுத்தும் பின்னர் 1967 இல் ஏற்பட்ட கலவரங்களையடுத்தும் கல்முனைக்குடியிலும் சாய்ந்தமருதுவிலும் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் அனைத்தும் இப்பகுதியலிருந்து இடம் பெயர்ந்தன. இப்பகுதிகளில் இன்றும் காணப்படும் இந்து ஆலயங்களின் இடிபாடுகள் இதற்குச் சான்றாகும். இன்று பிரபல கல்லூரியாக விளங்கும் பதியுதீன் மஃமுத் மகளிர் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் முன்பு அரசாங்க தமிழ்க்கலவன் பாடசாலையொன்று அமைந்திருந்தது. கல்முனையில் கலவரங்கள் ஏற்படவும், தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாயிருந்தது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப்பட்டினசபையின் ஒருதலைப்பட்சமான உருவாக்கமும் அப்பட்டினசபை மேற்கொண்ட தமிழர் விரோத நடவடிக்கைகளுமேயாகும்.

இந்தப் பின்னணியிலேதான் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு கல்முனைப்பட்டினசபையை இரண்;டாகப் பிரித்துத் தென்பகுதியை முஸ்லிம் பெரும்பான்மைப் பட்டினசபையாகவும் வடபகுதியைத் தமிழ்ப் பெரும்பான்மைப் பட்டினசபையாகவும் உருவாக்குமாறு கல்முனைத் தமிழர்கள் 1960 களிலிருந்தே கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

1970 க்குப் பின் கல்முனை நகரை அண்டியதாய் அமைந்திருந்த சிறியநீர்ப்பாசனக் குளங்களின் படுக்கைகள் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம் வர்த்தகர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டு அவை மண் நிரப்பப்பட்டுக் கடைத்தொகுதிகள் நிர்மாணிக்கப்பட்டன. நீர்ப்பாசனத் தேவைக்காகவும் மழைக்காலத்தில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்பட்ட இச்சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முஸ்லிம் வர்த்தகர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. கல்முனை நகரை முஸ்லிம் மயப்படுத்தும் நோக்கமே இது. அரசியல் செல்வாக்கும் பொருளாதாரபலமும் அற்றிருந்த தமிழர்களால் இதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
1977 – 1989 காலப்பகுதியில் ஜனாப் ஏ. ஆர். மன்சூர் அவர்கள் கல்முனைத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். இக்காலத்தில் கல்முனை 1ம் குறிச்சியில் வாடிவீடு, கிறவல்குழி மற்றும் சவக்காலையை அண்டிய பகுதிகள் உள்ளடங்கிய பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு இக்குடியேற்றப் பிரிவுக்கு ‘இஸ்லாமாபாத்’ எனவும் பெயரிடப்பட்டது. அதேபோன்று கல்முனை நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்குப் பின்னால் தேவாலயத்திற்குச் சொந்தமான பள்ளப்பூமி (இப்பூமியில் முன்பு இல்லச் சிறுவர்களுக்கான உணவுத் தேவைக்காக வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு வந்தது). சுவீகரிக்கப்பட்டு இ.போ.ச. அலுவலகம் மற்றும் மடுவம், அரச அலுவலகங்கள் அமைக்கப்பட்டதுடன் கல்முனை – மணல்சேனை வீதியையும் கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியையும் இணைத்துப் பாதையொன்று நிர்மாணிக்கப்பட்டு அதற்குக் ‘ஹிஜ்ரா’ வீதி எனப் பெயரிடப்பட்டது. இவ்வாறு திட்டமிட்டு அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முஸ்லிம் மயப்படுத்தப்பட்ட கல்முனைதான் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தகநிலையங்களை அதிகளவில் கொண்டு விளங்குகிறது.
பிரதேச சபைகள் அமுலுக்கு வருமுன்னர் முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் கரவாகு தெற்குக் (சாய்ந்தமருது) கிராமசபை, கல்முனைப் பட்டினசபை, கரவாகு வடமேற்குக் (சேனைக்குடியிருப்பு) கிராமசபை, கரவாகு வடக்குக் (பெரியநீலாவணை) கிராமசபை ஆகிய உள்ளூராட்சி அலகுகளை உள்ளடக்கியிருந்தது. 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் பட்டினசபைகளும் கிராமசபைகளும் இல்லாதொழிக்கப்பட்டுப் பதிலாக பிரதேசசபைகள் அறிமுகம் செய்யப்பட்டபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு கரவாகுப்பற்றுப் (கல்முனை) பிரதேசசபை எனும் பெயரில் தனியானதொரு உள்ளூராட்சி அலகாக ஆக்கப்பட்டது, இப்பிரதேசசபை அமைக்கப்பட்ட பின்னரும் கூட கரவாகுப்பற்றுப் பிரதேசசபையை தரவைப்பிள்ளையார் கோயில் வீதியை பிரிக்கும் எல்லையாகக் கொண்டு இரணடாகப் பிரித்து தென்பகுதியைக் கரவாகு தெற்கு எனும் பெயரில் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேசசபையாகவும் வடபகுதியைக் கரவாகுவடக்கு எனும் பெயரில் தமிழ்ப் பெரும்பான்மைப் பிரதேசசபையாகவும் உருவாக்கித் தரும்படி கல்முனைத் தமிழர்கள் பல பொது அமைப்புக்களினூடாக அரசை வற்புறுத்தி வந்துள்ளனர். குறிப்பாக ‘அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கம்’ 1988 இல் இருந்தே இதுவிடயமாகத் தொடர்ந்து முயற்சிகளை எடுத்தது.
இதே போன்றுதான் பழைய நிர்வாக அலகான பிரிவுக் காரியாதிகாரி முறை நீக்கபட்டுப் பதிலாக உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் நிர்வாக அலகுகளாக அறிமுகம் செய்யப்பட்டபோது முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவு எனும் பெயரில் தனியானதொரு நிர்வாக அலகாக ஆக்கப்பட்டது. முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியையும் உள்ளடக்கிய கல்முனை உதவி அரசாங்க அதிபர் பிரிவினை (தற்போது பிரதேச செயலகப்பிரிவு என மாற்றம் பெற்றுள்ளது) கல்முனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு தென்பகுதியானது 100 மூ முஸ்லிம்களைக் கொண்டதாகவும் வடபகுதியானது தமிழர்களைப் பெரும்பான்மையாகவும், தமிழர், முஸ்லிம், சிங்களவர் மூவின மக்களையும் கொண்டதாகவும் இரண்டு தனித்தனி நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமென்பதே 1988 இலிருந்து கல்முனைத் தமிழர்களால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும். இக்கோரிக்கையினை ‘அம்பாறை மாவட்டத்தமிழர் மகாசங்கம்’ 1988 நடுப்பகுதியில் முன்னெடுக்க ஆரம்பித்தது.
1988 இன் பிற்பகுதியில் கல்முனைப் பகுதிக்கு அப்போது விஜயம் செய்த முன்னால் அமைச்சர் காலஞ்சென்ற ரஞ்சன் விஜயரட்னாவைச் சந்தித்து இது சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடாத்தி ஜனாதிபதிக்கு முகவரியிட்ட மகஜர் ஒன்றையும் அச்சங்கம் கையளித்தது. இதன் பயனாக கல்முனைத் தமிழ்ப் பிரிவொன்றைத் (சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவை திறப்பதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை பணித்திருந்தது. எனினும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டினால் அது நடைபெறாமல் தடுக்கப்பட்டது. அப்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த சிங்கள அரசின் எடுபிடியான தேவநாயகம் இந்த உதவி அரசாங்க அதிபர் பிரிவை அமைக்க எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை

இதனைத் தொடர்ந்து 1989 பெப்ரவரியில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்னர் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் உபதலைவர் காலஞ்சென்ற திரு.கே.கணபதிப்பிள்ளை (கவிஞர் பாண்டியூரன்) தலைமையில் கல்முனைத் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட சாத்வீக மறியல் போராட்டம் ஏற்படுத்திய அழுத்தங்கள் காரணமாகக் கல்முனைத் தமிழ்ப் பிரிவுக்கெனத் தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு (உப) அலுவலகம் ஒன்று 12.04.1989 இல் திறக்கப்பட்டு மேலதிக உதவி அரசாங்க அதிபராகத் தமிழர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். ஆனால் இவ்வலுவலகப் பிரிவு எல்லைகள் வகுக்கப்பட்டதாகவோ வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதாகவோ முழுமையான அதிகாரங்களும் நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டதாகவோ அல்லாமல் ‘கல்முனைத் தமிழ்ப் பிரிவு’ எனும் பெயர்ப் பலகையுடன் பெயரளவிலேயே இயங்கி வந்தது.

இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தினர் தொடர்ந்து எடுத்துக் கொண்ட பெருமுயற்சிகள் காரணமாக 28.07.1993 அமைச்சரவைத் தீர்மானத்தின்படி கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது. இத்தீர்மானத்தின்படி நாடளாவிய ரீதியில் கல்முனைத் தமிழ்ப் பிரிவு உள்ளடங்கலாகத் தரமுயர்த்தப்பட்ட 28 பிரதேச செயலகப் பிரிவுகளில் கல்முனைத் தமிழ்ப்பிரிவு தவிர்ந்த ஏனைய பிரிவுகள்யாவும் நிறைவேற்றப்பட்டன. மேற்படி அமைச்சரவைத் தீர்மானமும் வழமைபோல் அம்பாறை மாவட்ட முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் தலையீடு காரணமாக அமுல் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது.

பின்னர் கடந்த பொதுஜன ஐக்கிய முன்னனி அரசாங்க காலத்திலும் 30.03.1998 இல் புதிய பிரதேச செயலகங்கள் சம்பந்தமாக அமைச்சரவையில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதும் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் அரசியல் செல்வாக்குப் பிரயோகம் காரணமாக கல்முனைத் தமிழ்ப் பிரிவு முற்றாகப் புறக்கணிக்கப்பட்டது. முழுக்கல்முனைத் தேர்தல் தொகுதியும் அடங்கிய நிலப்பரப்பு நடைமுறையில் தனியானதொரு பிரதேச செயலகப்பிரிவாகவும், தமிழ்ப்பிரிவானது அதிகாரமற்றதோர் உபபிரதேச செயலகப் பிரிவாகப் பெயரளவிலேயே கல்முனைத் தமிழர்களுக்குக் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இயங்கி வந்தது.
ஆனாலும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தினர் தங்கள் முயற்சிகளைக் கைவிடாது தொடர்ந்தும் செயற்பட்டனர். ஆனாலும் இச்சங்கத்தில் இருந்த கோமணகிருஷ்ணன் போன்ற சிங்கள பேரினவாதிகளின் அடிவருடிகளால் இவை அனைத்தும் தடைப்பட்டு போயின.

இதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின்பு, கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலகத்தைத் தனிப்பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துமாறு கோரி கல்முனைத் தமிழ் பிரதேச கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 24.01.2001 இலிருந்து 31.01.2001 வரை கல்முனைத் தமிழர்களால் உண்ணாவிரதப் போராட்டமொன்றும் நடைபெற்றது. 2000ம் ஆண்டின் ஆரம்பத்திலும் அம்பாறை மாவட்டத் தமிழர் மகாசங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனைத் தமிழர்கள் இதே கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடாத்தியுமிருந்தனர்.

கல்முனைத் தமிழர்களுடைய நீண்ட காலக் கோரிக்கைகளான தனியான பிரதேச சபைக் கோரிக்கையும் கல்முனை உபபிரதேச செயலகப் பிரிவைப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தும் கோரிக்கையும் கிணற்றுக்குள்ளே போட்ட கல்லாகக் கிடக்க, கல்முனைப் பிரதேச சபையானது 11.06.1999 இலிருந்து அமுலுக்கு வருமாறு 1998.12.11 திகதியிட்ட 1057ஃ16 இலக்கமுடைய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ‘கல்முனை நகரசபை’ எனும் பெயரில் நகரசபையாக்கப்பட்டுப் பின் 15.04.2002 இலிருந்து மாநகரசபையாக்கப்பட்டு விட்டது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவு துண்டாடப்பட்டு 100 வீத முஸ்லிம்களைக் கொண்ட ‘சாய்ந்தமருது பிரதேசசெயலகம்’ 2001 இல் உருவாக்கப்பட்டது. தமிழர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கும், முஸ்லிம்களின் தமிழர்களுக்கு எதிரான நியாயமற்ற கோரிக்கைகள் கூட நிறைவேற்றப்படுவதற்கும் காரணியாக அமைந்திருப்பது ‘அரசியல் செல்வாக்கு’ என்ற ‘துரும்பு’ தான் என்பது காலம் கற்றுத்தந்துள்ள பாடமாகும்.

கிழக்கு மாகாணத் தமிழர்களைப் பொறுத்த வரை குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்களைப் பொறுத்தவரை பிள்ளையான் குழு போன்ற அரசுடன் சேர்ந்திருக்கும் ஒட்டுக்குழுக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக பொருளாதார அரசியல் பாரபட்சங்களைத் தடுத்து நிறுத்தக் கூடிய வல்லமை அற்றிருந்தார்கள் என்பதே உண்மை மட்டுமல்ல அதற்கான உளப்பாங்கும் இந்த ஒட்டுக்குழுக்களிடம் இருக்கவில்லை.

‘தமிழ் பேசும் மக்கள்’ என்று கூறிக் கொண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் இந்த ஒட்டுக்குழுக்கள் நடந்து கொண்டமை தமிழர்களுக்கு விரோதமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு செல்வதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு மறைமுகமான ஊக்கியாக அமைந்தது. மேலும் தமிழர்கள் அபிவிருத்தியைப் புறக்கணித்து விடுதலைப் போராட்ட அரசியலில் மட்டுமே முனைப்புக் கொண்டிருந்த காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுடன் இணைந்து அமைச்சர்கள் உட்பட பல பதவிகளைப் பெற்றுத் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார்கள்.

ஆயுதப்போராட்டம் முடிந்த பின் சிங்கள பேரினவாத அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்ட பிள்ளையான் குழு போன்ற ஒட்டுக்குழுக்கள் பதவி நாற்காலிகளைப் பற்றிக் கொள்வதற்காகத் தேர்தல்களில் வாக்குச் சேகரிக்கும் தந்திரோபாயங்களை செய்தார்களே தவிர அவர்களை அறிவூட்டவில்லை.

பிரதேசவாதத்தை கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் விதைத்து கிழக்கு மாகாணத்தை சிங்கள முஸ்லீம்களிடம் பிள்ளையான் குழு போன்றவர்கள் தாரை வார்த்தார்கள்.

முதலமைச்சர் பதவி என்ற பட்டுவேட்டிக் கனவுலகில் சஞ்சரித்த பிள்ளையான் குழு இன்று இடுப்பிலே கட்டியிருந்த கோவணத்தையும் இழந்து நிற்கிறார்கள். அதில் ஒருவர்தான் இந்த கோவணகிருஷ்ணனும்.

தரமுயர்த்தப்படவுள்ள கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலக எல்லைக்குள் முஸ்;லிம்களின் வர்த்தக நிலையங்கள் உள்ளடங்குகின்றன என்பதால் அவை முஸ்லிம்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாம். இம்முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள இடப்பரப்பு முன்பு தமிழர்களுக்குச் சொந்தமானவையாக இருந்து பின்னாளில் முஸ்லிம் மயப்படுத்தப்பட்டவை என்பதையும் இவ்வர்த்தக நிலையங்கள் கல்முனைத் தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள் அமைவது பூகோள ரீதியாகத் தவிர்க்கமுடியாதது என்ற யதார்த்தத்தையும் முஸ்லிம் காங்கிரஸ் உணர்ந்து செயற்பட வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள்ளும்; மண்முனைவடக்கு பிரதேச செயலக எல்லைக்குள்ளும் முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள் அமைத்திருப்பது போன்றுதான் இதுவும் பூகோள ரீதியாகத் தவிர்க்க முடியாதது.

முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கும் மற்றுமொரு காரணம் தரமுயர்த்தப்படவுள்ள கல்முனைத் தமிழ் உபபிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் நிலத்தொடர்பற்ற முறையிலே முஸ்லிம்கள் அடங்குவது தமிழ்-முஸ்லிம் முரண்பாட்டை ஏற்படுத்துமாம். இது ஆதாரமற்ற வெறும் குதர்க்க வாதமாகும்.

கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவு தெற்கே கலமுனைத் தரவைப்பிள்ளையார் கோயில் வீதியை (கடற்கரைப் பள்ளி வீதி) எல்லையாகக் கொண்டு வடக்கே பெரிய நீலாவணைக் கிராமம் வரை அதாவது வடக்கு எல்லையாக மட்டக்களப்பு மாவட்டமாகவும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே கிட்டங்கி வாவியையும் எல்லைகளாகக் கொண்டு அமையும் போது நிலத்தொடர்பற்ற என்ற பேச்சுக்கே இடமில்லை. அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவு எல்லைக்குள் பல தமிழ்க்கிராமங்கள் அமைந்திருப்பதும், அதேபோல் சம்மாந்துறை முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் எல்லைக்குள் பல தமிழ்க் கிராமங்கள் அமைந்திருப்பதும், இறக்காமம் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மாணிக்கமடு எனும் தமிழ்க்கிராமம் அமைந்திருப்பதும், அட்டாளைச்சேனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் திராய்க்கேணி எனும் தமிழ்க்கிராமம் அமைந்திருப்பதும், நிந்தவூர் முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச செயலகப்பிரிவின் கீழ் அட்டப்பள்ளம் எனும் தமிழ்க் கிராமம் அமைந்திருப்பதும், காரைதீவு தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு போன்ற முஸ்லிம் கிராமங்கள் அமைந்திருப்பதும் போன்றதுதான் உத்தேச கல்முனைத் தமிழ்ப் பெரும்பான்மை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் மருதமுனை, நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத் எனும் முஸ்லிம் வாழ்விடங்கள் அமைய இருப்பது. இது தமிழ் – முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுக்குமே தவிர ஊறுவிளைவிக்க மாட்டாது.
இவ்விடயத்தைத் தமிழ் – முஸ்லிம் முரண்பாடாகக் கற்பிதம் செய்வது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவறான கண்ணோட்டத்தையும் தமிழர் விரோத மனப் போக்கையுமே வெளிப்படுத்துகிறது.

நிறைவாக, இன்று எழுந்துள்ள பூகோள அரசியல் – பிராந்திய அரசியல் – கிழக்கிலங்கை அரசியல் சூழ்நிலைகளின் பின்புலத்தில் பார்க்கும் போது கிழக்கு மாகாணத்தமிழர்கள் பிள்ளையான் குழு போன்ற சிறிலங்கா பேரினவாதிகளுடன் இணைந்திருக்கும் ஒட்டுக்குழுக்களை நிராகரிக்க வேண்டும்.

நடைமுறையில் எந்த உருப்படியான நிகழ்ச்சித் திட்டமும் இல்லாமல் வெறுமனே சிங்கள பேரினவாதிகள் வீசும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்கப்போட்டு கொண்டிருக்கும் பிள்ளையான் குழு போன்ற ஒட்டுக்குழுக்களை இனங்கண்டு நிராகரிப்பது மட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வடக்கு கிழக்கு இணைப்பிற்காகவும் உழைக்க வேண்டும். அதுவே கிழக்கு மாகாண தமிழர்களுக்கு இருக்கும் ஒரேஒரு பாதுகாப்பு

 

http://www.thinakkathir.com/?p=55435

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.