Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 தேசிய விருதுகளை பெறும் `தங்கமீன்கள்'

Featured Replies

408986-thanga-meengal.jpg

 

 

`தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேப்போல் மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பாலுமகேந்திராவின் `தலைமுறைகள்' நகுல் நடித்த `வல்லினம்' படத்திற்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த படங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து தேசிய விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 61 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில், ராமின் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த `தங்கமீன்கள்' திரைப்படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த தமிழ்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம் (சாதனா), சிறந்த பாடலாசிரியர் (ஆனந்த யாழை... நா.முத்துகுமார்) ஆகியோரே இவ்விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாலுமகேந்திராவின் `தலைமுறைகள்' திரைப்படம், சிறந்த ஒருமைப்பாட்டுக்கான விருதுக்கு தெரிவாகியுள்ளது. அதேபோன்று, ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், நகுல் நடித்திருந்த `வல்லினம்' திரைப்படம் சிறந்த படத்தொகுப்புக்கான விருதை பெறுகிறது. இப்படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய சபு ஜோசப்பிற்றே இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் பிற மாநில திரைப்படங்களும் தேசிய விருதுக்கு தெரிவாகியுள்ளன.

என் விருதை பாலு மகேந்திராவுக்கும் சமர்பிக்கிறேன் '

நா முத்துக்குமார்

இதனிடையே, தனக்கு கிடைத்த விருது குறித்து முத்துக்குமார் வெளியிட்ட அறிக்கையில், `` சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது. இவ்விருது, இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது.

இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ராம் நெகிழ்ச்சி

‘தங்கமீன்கள்’ திரைப்பட இயக்குநரும் நடிகருமான ராம் கூறுகையில், ``என் குருநாதர் பாலுமகேந்திராவின் படத்துடன் என் படத்திற்கும் விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி.

சாதனாவுக்கு விருது கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. என் நண்பன் நா.முத்துக்குமாருக்கு விருது கிடைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்து வந்தேன். இப்போது அதுவும் நிறைவேறிவிட்டது. இந்தப்படத்தை விருது வரைக்கும் கொண்டு சென்றது ஜே.எஸ்.கே சதீஸ்குமார்தான். அவருக்கும் நன்றி என்றார்.

http://virakesari.lk/articles/2014/04/17/3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 

 

தேசிய விருது கலைஞர்களின் நெகிழ்ச்சியான பேட்டி!

தேசிய திரைப்பட விருது பெற்ற தமிழ்பட கலைஞர்கள் தங்களின் மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள். இதோ அந்த சந்தோஷ வார்த்தைகள்.

 
இயக்குனர் ராம் (தங்க மீன்கள்)
 
விஞ்ஞானம் வளர்ந்தாலும், நாகரீகம் சிதைந்தாலும் உறவுகள் இன்னும் மாறவில்லை. அதைத்தான் இந்த விருது உணர்த்துகிறது. தந்தை மகள் உறவுக்கு கிடைத்த தேசிய அங்கீகாரமாக இந்த விருதை பார்க்கிறேன். மக்களாலும், விருதுகளாலும் தங்க மீன்கள் கொண்டாடப்படுவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது கிடைத்ததை விட என் தயாரிப்பாளர் கவுதம் மேனன், பாடலாசிரியர் நா.முத்துகுமார், குழந்தை சாதனாவுக்கு விருது கிடைத்ததுதான் பெரிய மகிழ்ச்சி. ஒரே நேரத்தில் எனக்கும் என் குருநாதர் பாலுமகேந்திராவுக்கும் விருது கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது.
 
பாடலாசிரியர் நா.முத்துகுமார் (ஆனந்த யாழை மீட்டுகிறாய்.... தங்க மீன்கள்)
 
நான் எத்தனையோ பாடல்களை எழுதியிருந்தாலும் என் மனசுக்கு நெருக்கமான பாடல் ஆனந்த யாழை மீட்டுகிறாய்... மகளை பெற்ற ஒவ்வொரு தந்தையும் நேசித்த பாடல். அந்த பாடலுக்கு விருது கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் தரமான பாடல்களை தரவேண்டும் என்கிற பொறுப்பை என் தோள் மீது சுமத்தியிருக்கிறது. இந்த விருதை இயக்குனர் ராமின் மகளுக்கும், எனது மகனுக்கும் சமர்பிக்கிறேன்.
 
தயாரிப்பாளர் சசிகுமார் (தலைமுறைகள்)
 
பசங்க படத்திற்காக முதன் முறையாக தேசிய விருது வாங்கினேன். இப்போது இரண்டாவது முறையாக வாங்கப்போகிறேன். தலைமுறையை தயாரித்ததில் என் தலைமுறைக்கே பெருமையாக நினைக்கிறேன். தலைமுறையை ஒரு படமாக பார்க்கவில்லை. ஒரு பதிவாகத்தான் பார்க்கிறேன். இந்த விருதுக்கு சொந்தக்காரர் பாலுமகேந்திரா சார்தான். அவர் உயிரோடு இருந்திருந்தால் இரட்டிப்பு சந்தோஷம் இருந்திருக்கும்.
 
எடிட்டிர் சாபு ஜோசப் (வல்லினம்)
 
ஆண்மை தவறேல் எனது முதல் படம் வல்லினம் மூன்றாவது படம். மூன்றாவது படத்திலேயே தேசிய விருது என்பது என் வாழ்வில் கிடைத்த பெரும் பாக்கியம். வல்லினம் படத்தின் கதை கூடைப்பந்து போட்டியை மையமாக கொண்டது. அதில் நான்கு விளையாட்டு போட்டிகள் வரும் நான்கும் நான்குவித சூழ்நிலையில் வரும் அதற்கேற்ப அதனை படம் பிடித்திருப்பார்கள். மொத்தம் 60 மணிநேர புட்டேஜை பார்த்து அதிலிருந்து தேவையான ஷாட்களை செலக்ட் செய்து கோர்த்தேன். கடுமையான உழைப்பு அது அந்த உழைப்புக்கான பரிசு இந்த விருது. தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சாருக்கும், இயக்குனர் அறிவழகன் சாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
குழந்தை நட்சத்திரம் சாதனா (தங்க மீன்கள்)
 
சாதனா தற்போது இலங்கையில் இருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்களில் இந்தியா வர இருக்கிறாள். அப்போது அவள் மீடியாக்களை சந்தித்து பேசுவாள் என்று தங்க மீன் டீம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த தருணத்தை என்னால் மறுக்கவே முடியாது. இந்தப்படத்தில் என்னை நடிக்க வைத்து, ஊக்கம் அளித்த இயக்குநர் ராம், தயாரிப்பாளர் கவுதம் மேனன், இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன் மற்றும் மீடியாக்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.