Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

EPDPயின் தடையையும் உடைத்து தீவுக்குள் புகுந்த மாவையின் குழு

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவினர் இன்று காலை நெடுந்தீவுப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன் போது கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

நெடுந்தீவுப் பிரதேசத்திற்கு சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கக் கூடாதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் அப்பகுதி மக்களை மிரட்டியுள்ளனர் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் நடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, எஸ்.சிறிதரன் எம்.பி வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம், ஆர்னோல்ட், பசுபதிப்பிள்ளை, இந்திரராஜா ஆகியோரே அங்கு சென்றிருந்தனர். இந்த விஜயத்தின் முதற்கட்டமாக சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தலைமையில் குழுவினர் நெடுந்தீவுப் பிரதேச வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர். வைத்தியசாலையின் நிலைமைகளை அவர்கள் நேரில் பார்வையிட்டனர். வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பிலும் பொது மக்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டனர்.

தொடர்ந்து போக்குவரத்து, வர்த்தக, வாணிப, மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் தலைமையில் பிரதேசத்தில் இயங்கும் மகளிர் தையல் பயிற்சி நிலையத்திற்குச் சென்று அங்குள்ள நிலைமைகள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.

பின்னர் நெடுந்தீவு பிரதேச செயலரையும் அவர்கள் சந்தித்துப் பிரதேசத்தின் நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் அதற்கு ஏற்படுகின்ற தடைகள் அல்லது நெருக்கடிகள் தொடர்பிலும் கலந்தரையாடினர். மீன்பிடி அமைச்சர் தலைமையில் குழுவினர் அப்பகுதிக் கடற்கரையோர பிரதேச மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் தொழில் நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் தேவைகள் தொடர்பிலும் மக்கள் தமது கருத்துக்களைக் கூறினர்.

நெடுந்தீவுப் பிரதேசத்தில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் தாம் நாளாந்தம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய அப்பகுதி மக்கள் இதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் எடுத்துரைத்தனர். தம்மால் ஆன உதவிகளை கூட்டமைப்பினர் வழங்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த காலங்களைப் போலல்லாமல் இந்த முறை நடைபெற்ற தேர்தலின் மூலமாகத் தமது நிலைப்பாட்டைத் தாங்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளதால் தாம் தற்போது பெரிதும் பாதிகப்பட்டு வருகின்றனர் என்றும் அது குறித்து கூட்டமைப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரினர்.

இங்கு கூட்டமைப்பினர் இன்று விஜயம் செய்யவுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகிய பின்னர் கூட்டமைப்பினரைச் சந்திக்கக் கூடாதென அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களை ஈ.பி.டி.பியினர் மிரட்டினர் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் அப்பகுதி மக்கள் முறையீடு செய்துள்ளனர்.

ஆயினும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் தம்மைச் சந்தித்திருந்தனர் எனவும், இதேபோன்று பல அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும் தமக்கு ஆதரவாகவே மக்கள் செயற்பட்டுள்ளனர் என்றும், எனவே எத்தகைய அச்சுறுத்தல்கள், மிரட்டல்களுக்கும் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஈபிடிபியின் கருத்துக்களை அறிய முற்பட்ட வேளை எந்த ஒரு கருத்தையும் பெற முடியவில்லை  TNA-Tevu.jpg

 

TNA-Tevu01.jpg

 

TNA-Tevu02.jpg

 

TNA-Tevu03.jpg

 

TNA-Tevu04.jpg

 

TNA-Tevu05.jpg

 

TNA-Tevu06.jpg

 

TNA-Tevu07.jpg

 

TNA-Tevu08.jpg

 

TNA-Tevu09.jpg

 

TNA-Tevu010.jpg

 

TNA-Tevu011.jpg

 

TNA-Tevu012.jpg

 

TNA-Tevu013.jpg

 

TNA-Tevu014.jpg

 

Tna-Tevu.jpg

 

Tna-Tevu01.jpg

 

Tna-Tevu02.jpg

 

Tna-Tevu03.jpg

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.