Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிமாச்சலில் 24 ஹைதராபாத் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

Featured Replies

xhimachal_tragedy1_1940592h.jpg.pagespee

 

 

ஹிமாச்சலப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 மாணவர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

ஆந்திர மாநிலம் வி.என்.ஆர். பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குலுமனாலிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். பீஸ் நதிக்கரையில் மாணவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அபோது லார்ஜி நீர்மின்நிலையத்திட்டம் செயல்படும் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய 6 மாணவிகள், 18 மாணவர்கள் உள்பட மொத்தம் 24 பேரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்: "பீஸ் நதியில் வெள்ளம் ஏற்பட்ட போது பொறியியல் கல்லூரி மாணவர்கள் 48 பேர் உள்பட 61 சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் இருந்துள்ளனர். இவர்களில் 6 மாணவிகள் உள்பட 24 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அடித்துச் செல்லப்பட்டவர்கள் உடல்களை மீட்கும் வகையில் மாண்டியில் உள்ள அணையில் மதகுகள் மூடப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளுக்காக மாண்டி - மனாலி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது" என்றார்.

மாணவி கதறல்:

உடன் வந்த நண்பர்கள் கண் முன்னரே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டத்தை செய்தியாளர்களிடம் விவரித்து கதறி அழுதார் பிரத்யுஷா என்ற மாணவி. தாங்கள் அனைவரும் கடந்த 3-ம் தேதி சுற்றுலாவுக்கு புறப்பட்டதாகவும். சிம்லா செல்லும் வழியில் குலுமனாலியை சுற்றிப் பார்க்க இறங்கியபோதே சம்பவம் நடந்ததாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், சில மாணவர்கள் நதித் கரையிலும் சிலர் நீரிலும் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அபோது திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நீரில் நின்ற மாணவர்களால் உடனடியாக கரை திரும்பமுடியவில்லை. எங்கள் கண் முன்னரே எங்கள் நண்பர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர் என்றார். மேலும், ஹிமாச்சல அரசு அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்த உதவியும் வரவில்லை என தெரிவித்தார்.

அமைச்சர் உறுதி:

இதற்கிடையில், இத்துயரச் சம்பவத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்தார். ஹிமாச்சல மாநில அரசின் கல்வித்துறை அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசி மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடக் கூறியுள்ளதாக தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6096890.ece?homepage=true

 

india44141.jpg

 

மணாலி: ஐதராபாத்தில் இருந்து இமாச்சல் பிரதேசம் சென்ற இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் 25 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து இழுத்து செல்லப்பட்டனர். மந்தியில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் உள்ள பீஸ் நதியின் கரையில் ஒருசேர நின்று ரசித்து கொண்டிருந்தனர். தண்ணீர் கண்ட மகிழ்ச்சியில் சுற்றுலாவை இன்பமாக கழித்து கொண்டிருந்த போது இந்த கொடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆற்றில் சென்ற மாணவர்கள் உடல்கள் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர்., விக்னன் ஜோதி இன்ஜினியரிங் கல்லூரியை சேர்ந்தவர்கள் இமாச்சல் பிரதேசததிற்கு 3 நாள் டூர் புறப்பட்டு சென்றனர். இங்குள்ள நதியில் சிலர் குளித்தபடியும், சிலர் நதியின் நீர் ஓட்டத்தை தங்களின் மொபைலில் படம் எடுத்தப்படியும் இருந்தனர். இந்நேரத்தில் ஹைட்ரோ பவருக்கென தண்ணீர் திறந்து விடப்பட்ட போது லார்ஜி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் படுவேகமாக அளவுக்கு அதிகமாக வந்தததால் இந்த மாணவர்கள் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். சில நிமிடத்திற்குள் அனைவரும் தண்ணீரில் மாயமாயினர்.

உரத்த குரலில் எச்சரித்தேன் : இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு மாணவன் ரவிக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், " அனைவரும் நதியில் மகிழ்ச்சியாக நின்று கொண்டிருந்தோம். திடீரென தண்ணீர் வெள்ளமாக வருவதை நான் பார்த்தேன், நண்பர்களிடம் உரத்த குரலில் எச்சரித்தேன். ஆனால் நதி நீர் வந்த ஒலியில் எனது குரல் யாருக்கும் கேட்காமல் போனது. 5 முதல் 6 நிமிடத்திற்குள் அனைவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்படுவதை பார்த்து என்னால் கதறத்தான் முடிந்தது. சிலரை காப்பாற்ற முயற்சித்தேன் பலன் எதுவும் கிடைக்கவில்லை” என்றார் கண்ணீருடன்.

6 மாணவிகளும் மாயம்: இந்த சம்பவத்தில் 6 மாணவிகளும், சுற்றுலா அழைத்து சென்ற டூர் மானேஜர் கிரன் என்பவரும் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.தண்ணீர் திறந்து விடும் போது எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என இந்த பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட நிர்வாகத்தை குறை கூறினர். இது குறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் கூறுகையில் உரிய அபாயச்சங்கு எழுப்பப்பட்டது. ஆனால் இதனை மாணவர்கள் என்ன என்பதை அவர்களால் புரிய முடியாமல் போனதுதான் துரதிருஷ்டம் என்றார். 

உள்துறை அமைச்சர் கவலை: இந்த சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவீட்டரில் இந்த துயரச்சம்பவம் கேள்விப்பட்டு மிக துயரப்பட்டேன். வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதமாக நடத்த அதிகாரிகளை கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=994404

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.