Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு ஆவணபடத்தின் கதை....

Featured Replies

Tamil_News_large_1001589.jpg

 

gallerye_174536451_1001589.jpg

 

அந்த ஆவண படத்தை பார்த்து முடித்த போது மனம் இரண்டு விஷயங்களில் கனத்து போயிருந்தது.

மனம் முதலில் கனத்து போனதற்கு காரணம் ஆவண படம் ஏற்படுத்திய தாக்கம்.

இரண்டாவது காரணம் அரங்கில் பெரும்பாலும் காலியாக இருந்த இருக்கைகள்.

ஆவண படம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றியது

இப்போது இருப்பவர்கள் இலக்கியத்தில் சினிமாத்தனத்தை காட்டும் நிலையில் சினிமாவில் இலக்கியத்தனத்தை காட்டிய மாபெரும் கவிஞர்.

எனது முதல்வர் நாற்காலியை தாங்கிப்படிக்கும் மற்ற மூன்று கால்கள் எது என்பது எனக்கு தெரியாது ஆனால் நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எனக்காக எழுதிய பாடல்கள்தான் என்று எம்ஜிஆரால் பராட்டப்பெற்றவர்.

பாட்டாளி மக்களின் வேர்வையையும்,விவசாயகூலிகளின் வேதனையையும்,கிராமத்து மக்களையும்,மண்ணையும் அப்படியே மணம் மாறாமல் குணம் குறையாமல் வடித்திட்ட கவிஞன்.

தூங்காதே தம்பி தூங்காதே:

 

இருபத்தியொன்பது வயதில் யாரும் எதிர்பாராமல் இறந்துபோனவர்.கடைசிவரை எளிமையாக வாழ்ந்திட்டவர்.

தூங்காதே தம்பி தூங்காதே முதல் திருடாதே பாப்பா திருடாதே வரையிலான ஒவ்வொரு பாடல்களுமே மனதில் நல்ல எண்ணத்தை விதைத்தவையே.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி பலவிதமான புத்தகங்கள் உள்ளன, வலைத்தளங்கள் உள்ளன. ஆனால் அவரைப்பற்றி சில படங்கள் மற்றும் பாடல்களை வைத்துக் கொண்டு கல்லூரி பேராசிரியர் சாரோன் தயாரித்துள்ள இந்த ஆவண படம், சிறந்த படங்களில் ஒன்று.

ஏழு வருடமாக கல்லூரி வேலையை விட்டுவிட்டு, கடன் பட்டு, மிகவும் சிரமப்பட்டு எடுத்த அவரது உழைப்பை இரண்டரை மணி நேர ஆவணபடமாக கடந்த வாரம் சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் பார்த்தபோது பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்த படத்தில் கவிஞரின் மகன் குமரவேல் பேசும்போது ஏற்பட்ட தாக்கத்தைவிட, கவிஞரின் மனைவி கௌரவம்மாள் பேசும்போது ஏற்பட்ட தாக்கத்தைவிட, திரையிடல் மேடையில் இயக்குனர் சாரோன் இந்த படத்திற்காக பட்ட சிரமத்தை விவரித்த போது ஏற்பட்ட தாக்கம் பெரிதாகப்பட்டது.

கவிஞரின் மகன், மனைவியைவிட அதிக காலம் அதாவது ஏழு ஆண்டுகாலம் படத்திற்காக பட்டுக்கோட்டையாருடன் சாரோன் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். என் தந்தை என்னைத் தோளில் போட்டு தட்டிக் கொடுத்து பாடிய தாலாட்டு பாடல்கள் எல்லாம் பட்டுக்கோட்டையார் பாடல்களே என பின்னால் தெரியவந்தபோது பட்டுக்கோட்டையாருக்காக ஏதாவது செய்யவேண்டுமே என்ற என் எண்ணத்தின் விளைவுதான் இந்த படம்.

நினைவு சின்னம்:

 

பட்டுக்கோட்டையார் வாழ்ந்த சென்னை வீட்டை ஒரு நினைவு சின்னமாக மாறவேண்டும் என்பதே என் விருப்பம்,இந்த விருப்பம் நிறைவேற என் படம் சின்ன காரணமாக இருந்தால் கூட போதும் என் சிரமமெல்லாம் சந்தோஷமாக மாறும் என்றார்.

பொதுவாக குறும்படமோ, ஆவணப்படமோ, திரைப்படமோ ரசிகர்களை உட்காரவைப்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆவண படம் கடைசி நிமிடம் வரை பட்டுக்கோட்டையார் பற்றி புதுப்புது தகவல்களை தந்தபடி சுவராசியமாக பயணிக்கிறது.

இந்த படத்தை பார்க்க கவிஞரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை இயக்குனரே கவிஞர் பிறந்த கிராமத்தில் இருந்து பார்வையாளரின் கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.

பட்டுக்கோட்டையின் பாடல்களை ரசித்தவர்கள் நிச்சயம் அவரது இந்த ஆவணபடத்தையும் ரசிப்பீர்கள் காரணம் இதில் அவரது வாழ்க்கையின் பல்வேறு பரிணாமங்கள் முன் வைக்கப்படுகிறது.

வறுமையை நினைத்து பயந்து விடாதே என்று பாடியவர் உண்மையிலேயே பல நேரங்களில் அப்படித்தான் இருந்திருக்கிறார்,வாழ்ந்திருக்கிறார்.

பார்க்க வேண்டிய படம்

 

: படத்தில் இடம் பெற்ற விஷயங்களை இரண்டொன்றை சொன்னால் கூட அதற்கு இரண்டாயிம் மூவாயிரம் கீ தேவைப்படும்.அப்படியும் படத்தில் சொன்னதை எழுத்தில் எழுதிவிட முடியாது.

படத்தை பார்க்கும் முன் ஒரு எண்ணம் ஓடியது அவரது பாடல்களை கேட்டால் போதாதா? அவரது வாழ்க்கை வரலாற்றை பார்த்து என்னவாகப் போகிறது என்றுதான் தோன்றியது ஆனால் படத்தை பார்த்து முடித்த பிறகு தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது என்றே தோன்றியது.

காரணம் பட்டுக்கோட்டையாரின் வார்த்தைகள் மட்டுமல்ல அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் கூட நம் வாழ்க்கைக்கான பாடம்தான்.

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய இந்த ஆவண படம் பற்றிய விசாரணைக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர் இயக்குனர் சரோன்: 9444285103.

- எல்.முருகராஜ்

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1001589

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.