Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்­களை வாழ வைக்­க­வேண்டும் என்று உதித்த சம­யங்­கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­து­வதில் இன்பம் காண்­கின்­ற­ன : மன்னார் ஆயர்

Featured Replies

அன்பே கடவுள் என்று எல்லா மதங்­களும் எமக்கு கற்­று­தரும் இந்­த­வே­ளையில் ஊண்­இ­யல்­பு­க­ளுக்கு அடி­மை­யா­காது மனித நேயத்தை மதித்து வாழ வேண்டும். மக்­களை வாழ­வைக்க வேண்டும் என்று உதித்த சம­யங்கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­தி இன்பம் காண்­ப­தாலும் இதன்­மூலம் தாங்கள் வளர்ச்சி காண­து­டிப்­பதாலும் ஒவ்­வொ­ரு­வரும் அமைதி இழந்து காணப்­ப­டு­கின்­றனர் என மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­டகை தெரி­வித்தார்.
 
rayappu-joseph_1.jpg
நேற்று முன்­தினம் புதன் கிழமை மன்னார் பொது­வி­ளை­யாட்டு மைதான முன்­றலில் தென் ­ப­கு­தி­யி­லுள்ள அளுத்­கம பேரு­வளைஇ தர்கா நகர் போன்ற இடங்­களில் முஸ்லிம் மக்கள் மீது கட்­ட­விழ்க்­கப்­பட்­டி­ருக்கும் வன்­செ­யலைக் கண்­டித்து இவர்­க­ளுக்­கான சர்­வ­மத பிரார்த்­தனை இடம்­பெற்­றது.
 
இந் நிகழ்வில் கிறிஸ்­தவம்இ முஸ்லிம் இந்துஇ பௌத்தம் மற்றும் திருச்­ச­பையை சாராத கிறிஸ்­தவ மதத்­த­லை­வர்­களின் சர்வ மத பிரார்த்­த­னை­களும் இடம்பெற்­றன.
 
இதைத்­தொ­டர்ந்து மன்னார் ஆயர் இரா­யப்பு யோசேப் ஆண்­டகை தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,
 
தற்­பொ­ழுது நாட்டில் நிலவும் இந்த விரோத செயல்கள் நிறுத்­தப்­பட வேண்டும். அத்­துடன் அதற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட வேண்டும். இங்கு இருக்­கின்ற எல்லா இனங்­களும் ஒரு மனப்­பட்டு நல்ல சிந்­த­னை­யுடன் வாழ வேண்டும் என்ற உயர்ந்த சிந்­த­னை­யுடன் வாழ்க்கை முறையை கண்­டு­கொள்ள வேண்டும்.
 
பேரு­வளைப் பகு­தியில் கொல்லப்­பட்­ட­வர்கள் உற்றார் உற­வி­னர்­க­ளுக்­காக அனு­தாபப்­ப­டு­கின்ற இந்த நேரத்தில் இப்­ப­டிப்­பட்ட காரி­யங்கள் எம் மத்­தியில் சமய வாதி­களை கொல்­வ­தற்கு எடுத்­தி­ருக்கும் முயற்­சி­க­ளுடன் இதற்­குமேல் இனி என்ன இருக்­கின்­றது என்­பது எமக்குத் தெரி­யாது.
 
ஆகவே மக்­களை வாழ­வைக்க வேண்டும் என்று உதித்த சம­யங்கள் இன்று மக்­களை துன்­பு­றுத்­து­வதிலும் இன்பம் காண்­ப­திலும் இதன்­மூலம் தாங்கள் வளர்ச்சி கொள்­ளலாம் என்று கோட்­டைகள் கட்­டு­வதை இக்­கா­லத்தில் நாம் பார்க்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கின்­றது.
 
ஆகவே சமயம் என்றால் என்ன எல்லா சம­யங்­க­ளுக்கும் பொது­வாக இருப்­பது என்னஎன்ற உண்­மையை தெரிந்து கொண்டு வெவ்வேறு சம­யங்­க­ளி­னூ­டாக இறைவன் மக்­களை தம்­மிடம் வரும்­படி அழைத்­துள்ளார்.
 
ஆகவே நாம் ஒவ்­வொரு சம­யத்­தையும் மதிப்­ப­த­னூ­டாக மனி­தரின் அடிப்­படை உரிமைஇ சமூக உரிமை அத்­துடன் சமய உரி­மையின் ஊடாக ஒரு மனிதன் எப்­படி வாழ வேண்டும் என்று அவர்கள் தெரிந்து கொள்­வ­தற்கு உத­வி­யாக இருக்­க­வேண்டும் என்­பதை விடுத்து மனி­தர்­க­ளுக்கு உபத்­திரம் ஊண்­ இ­யல்பு காரி­யங்­க­ளுக்கு அடி­மைப்­பட்டு இப்­ப­டிப்­பட்ட காரி­யங்­களை செய்­வது வெட்­கத்­துக்­கு­ரிய விட­ய­மாகும்.
 
ஆகவே கட­வுளால் ஆட்­கொள்­ளப்­ப­டு­ப­வர்கள் கட­வுளின் ஆவிக்கு தங்களை அர்ப்­ப­ணிப்­ப­வர்கள் வாழ்­விலே உண்­மை­யான அன்பு இருக்க வேண்டும் அப்­பொ­ழுது அங்கு அமைதி இருக்கும் சமா­தானம் இருக்கும்.
 
அத்­துடன் எல்லா வித­மான வளங்­களும் இருக்கும் பிற­ருடன் பகிர்ந்து கொள்­வ­தற்கும் ஆர்வம் காணப்­படும். ஆகவே இந்­த ­வே­ளையிலே எல்லா சம­யங்­க­ளுக்கும் அடிப்­ப­டை­யாக இருப்­பது அன்பே கடவுள் அன்பு கொண்­டுள்­ளவன் கட­வு­ளுடன் இணைந்­தி­ருக்­கின்றான் கட­வுளும் அவ­னுடன் இணைந்­தி­ருக்­கிறார் என்­ப­துதான் ஒவ்­வொரு சம­யத்­தி­னதும் சார­ாம்­ச­மாகும்.
 
கிறிஸ்­த­வத்­திலே பழைய புதிய ஏற்­பா­டுகள் என ஒரு பெரிய 72 புத்­த­கங்கள் இருக்­கின்­றன அவை கூறு­வது என்ன அன்பே கடவுள் என்­றுதான் சொல்­லு­கின்­றது. அதா­வது கடவுள் நம்­மோடு இருக்­கின்றார் நாமும் கட­வு­ளுடன் இருக்­கின்றோம்.
 
நாம் கட­வுளை கண்­ட­தில்லை ஆனால் ஒருவர் மற்­றவர் மீது அன்பு கொண்­டி­ருந்தால் கடவுள் நம் மத்­தியில் இருக்­கின்றார். இதுதான் எமக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் படிப்­பி­னைகள். இந்த அடிப்­ப­டை­யில்தான் மற்­றை­வைகள் சொல்­லப்­ப­டு­கி­றது. இத­னால்தான் ஒவ்­வொரு சம­யமும் இவற்றை ஆணி­வே­ராக கொண்­டுள்­ளது. இவ்­வா­றான அன்பு எல்லா மதங்­க­ளிலும் மலர வேண்டும். அதை­வி­டுத்து கல­வ­ரங்கள் நிகழ்­கின்­ற­போது இறை­வனை நோக்கி செபிக்­காது மனித மாண்பை மதிக்­காது இருக்­காது இறை­வனை நோக்கி குரல் கொடுக்­கவே இந்நாள் எமக்கு அறை­கூவல் விடுக்­கின்­றது. எல்லா மக்­களும் வாழ வேண்டும் எல்லா மக்­களும் மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்டும். அன்பு இல்­லையேல் அங்கு அமைதி இருக்­காது சண்­டையும் சச்­ச­ர­வும்தான் உரு­வெ­டுத்­தி­ருக்கும். அன்பு செய்யும் சக்­தியை இறைவன் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் கொடுத்­தி­ருக்­கின்றார்.
 
இறைவன் தனது சாய­லாக மனி­தனை படைத்­தி­ருக்கின்றார் என்றால் அவரின் விலை­ம­திப்­பில்­லாத அன்பின் நிமித்­தமே இவற்றை செய்­துள்ளார் என்று நாம் சிந்­திக்க வேண்டும். கடவுள் மனி­த­னுக்­காக எல்­லா­வற்­றையும் படைத்த பின் நல்­லது எனக் கண்டு மனிதன் மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்டும் என விரும்­பினார். ஆனால் மனி­தரின் பாவம் கீழ்­ப­டி­யாமை தானே சட்­டத்தை உரு­வாக்கி தான் தோன்­றித்­த­ன­மாக வாழ்­வ­தா­லேயே இன்று தீமை பெரு­கிக் ­கொண்டு வரு­கி­றது.
 
ஆகவே கடவுள் தீமைக்கு ஊற்­றல்ல நன்­மைக்கே ஊற்று ஆகவே இறை­வனை நாம் ஒவ்­வொ­ரு­வரும் எம் இத­யத்தில் இருத்திக் கொள்­ள­வேண்டும். சம­யத்­துக்கு எதி­ரான செயல்­பாட்டில் இறங்­கும்­போது அது அவர்­களின் சம­யத்தை இல்­லா­தொ­ழிக்கும் செயல்­பா­டா­கவே அமையும். ஆகவே எல்லா சம­யத்­த­வரும் ஒவ்­வொரு சம­யத்­த­வ­ரையும் மதித்து வாழ பழ­கிக்­கொள்ள வேண்டும்.
 
உட­லுக்கு உணவு எப்­படி அவ­சி­யமோ இதே­போன்று அன்பு எமது வாழ்­வுக்கு ஓர் உண­வாக அமைய வேண்டும். எமது வாழ்க்கை மிருக வாழ்க்­கை­யாக இருக்கக் கூடாது மற்­ற­வர்­க­ளுக்­காக நாம் வாழ கற்­றுக்­கொள்ள வேண்டும் என தெரி­வித்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.