Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நதியின் பயணம் !

Featured Replies

river%2046984e.JPG
 
இந்தியாவின் புகழ்பெற்ற புராணங்கள் இராமாயணம் மற்றும் மஹாபாரதம். இந்த இந்த இரு புராணங்களிலும் சிந்து, கங்கை ஆகிய ஜீவநதிகள் இடபெற்றிருப்பதன் மூலம் இவற்றின் தொன்மை துலங்கும். இந்த இரு நதிகளையும் வட இந்திய மக்கள் தாய் தெய்வங்களாக எண்ணி வழிபடும் வழக்கம், ஆரியர்களின் வருகைக்குப் பிறகு பிறந்தது. குறிப்பாக கங்கையை 'கங்கா மாதா' என்று பெயர் சூட்டி அழைப்பதன் முலம், கிழக்கிந்தியாவின் தாயாகவே போற்றப்படுகிறாள் கங்கை.
 
நதிமூலம்
 
இத்தனை பெருமைக்குரிய கங்கையின் நதிமூலம் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. கங்கைநதி வட இந்தியாவின் இமயமலையில் உறைபணி அடர்ந்த ஒரு குகையிலிருந்து உற்பத்தியாகிறது. இன்னொரு பெரிய ஆச்சரியம் கங்கை உற்பத்தியாகும் இதே இமாலய மலையில் 100 கிலோ மீட்டர் வடக்கேதான் சிந்துநதி உற்பத்தியாகிறது. ஆனால் அது இந்தியா வழியே பாகிஸ்தானை வளப்படுத்தச் சென்றுவிடுகிறது. அங்கிருந்து அது அரபிக்கடலில் போய் கலந்துவிடுகிறது. கங்கையோ 2,500 கிலோ மீட்டருக்கும் மேல் நெடும் பயணம் மேற்க்கொண்டு வங்கக் கடலில் கலக்கிறது.
 
ஐந்து ஆறுகளின் சங்கமம்
 
இமயமலையில் 3,800 மீட்டர் உயரத்தில், ஒர் எருதின் வாய் போன்ற உருவம் கொண்ட குகையில் உள்ளே உறைந்திருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதன் மூலம் ஒரு சிறு வாய்க்கால்போல உற்பத்தியாகிறது. கங்கை உற்பத்தியாகும் இந்த இடத்தை கெளமுக் என்று பெயர் சூட்டி அழைத்து வருகிறார்கள். தண்ணீராக பெருக்கெடுக்கும் இந்தக் கால்வாய் குகையை விட்டு வெளியே வந்து சிற்றாறாக மாறுமிடத்தில் அதை 'பாகிரதி' என்கிறார்கள். இந்த சிற்றாறானது தொடங்கிய இடத்திலிருந்து சுமார் 200 கிலோமீட்டர்களுக்குப் பிறகு தேவப்பிரயாக் என்ற இடத்தில் ‘அலக்நந்தா’ என்ற மற்றொரு சிறு நதியுடன் இணைந்து கொள்கிறது. பிறகு இந்த இரு நதிகளும் மந்தாகினி, தௌலிகங்கா, பின்டார் என்ற மேலும் மூன்று சிறு நதிகளுடன் இணைந்து கங்கை என்னும் மகா நதியாக தன் பிரமாண்டப் பயணத்தைத் தொடங்குகிறது.
 
கங்கையின் கருணை
 
பரந்து விரிந்த இந்திய துணைக் கண்டத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்துக்கு தென்கிழக்கு திசையில் பயணம் செய்யும் கங்கையுடன் அலஹாபாத் என்ற நகரில் யமுனை நதியும் வங்கதேசத்தின் மிகப்பெரிய பிரம்மபுத்திரா நதியும் சேர்ந்து கொள்கின்றன. விசிறிபோல பரந்து காணப்படும் கங்கையும் அதின் கிளை ஆறுகளும் செழிப்பாக இருக்கும் கங்கை சமவெளிக்கு,(இந்தியாவில் நான்கில் ஒரு பகுதி வளமான நிலப்பகுதி) நீர்வளம் தருகின்றன. 10,35,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு அது நீர்பாய்ச்சி இந்தியாவிலுள்ள மூன்றில் ஒருபகுதி மக்களின் வயிறு காய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ளும் கங்கையின் கருணை அளவிடமுடியாதது.
 
முதுகையும் தரும் கங்கை
 
வேளாண்மை கொழிக்க தன் கருணையை வற்றாத நீர்பெருக்காகக் கொடுக்கும் கங்கை, தனது முதுகை நீர்ப்போக்குவரதுக்காகவும் கொடுக்கிறாள். வங்காள தேசத்தில் கங்கை மிகவும் பரந்து காணப்படுவதால், அந்த மாநிலத்தின் கடல் போல் காட்சியளிக்கிறாள். அங்கே கங்கையின் முதுகில் படகுகளில் மக்கள் பயணம் செய்கின்றார்கள். அதன்பின் பல நதிகளாகவும் சிற்றாறுகளாகவும் பிரிந்துசென்று உலகின் மிகப் பெரிய கழிமுகங்களில் ஒன்றை உருவாக்குகிறாள்.
 
நம்பிக்கையும் நவீனமும்
 
இந்தியாவில் உள்ள பல நதிகளைப் போல கங்கை மதச் சடங்குகள், பூர்வஜென்ம நம்பிக்கை ஆகியவற்றால், எரியூட்டுதல் அல்லது அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்குப் பதிலாக தனது வெள்ளப்பெருக்கில் விடப்படும் மனிதப் பிணங்களை ஏற்றுக்கொண்டு தன் உடலை கழிவாக்கிக் கொள்ளும் அவலத்தை ஹரித்துவாரிலும், வாரணாசியிலும் கங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்னொருபக்கம் தொழிற்சாலைகள் விடும் இரசாயன கழிவுகளால் மிகமோசமான கதிர்வீச்சுக்கொண்ட, நோய்களை உருவாக்கும் மீன்களை கங்கை வளர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறாள்.
 
இந்து தர்மத்தின் அடையாளம்
 
கிழக்கு ஆசியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறியே ஆரியர்கள் முதலில் சிந்து நதியை வழிபட்டனர். பிறகு அவர்கள் கிழக்கே பயணப்பட்டு கங்கை நதிக்கரையில் குடியேறியபோது கங்கையை வழிபடத் தொடங்கினார். காலங்கள் செல்லச் செல்ல கங்கை நதியின் கரையோரத்தில் அமைந்த ஹரித்துவார், அலகாபாத், வாரணாசி ஆகிய நகரங்கள் இந்து தர்மத்தின் புனித ஸ்தலங்களாக மாறின. இன்று கோடிக்கணக்கில் யாத்திரிகர்கள் இந்த ஸ்தலங்ககளுக்கு திரண்டுவந்து கங்கை நீரில் புனித நீராடிச் செல்கின்றனர். இந்து தர்மம் ஒரு சமயமாக கருக்கொண்டது சிந்துநதி தீரத்தில் என்றால் புத்த தர்மம் கங்கைக்கரையில்தான் கருக்கொண்டது. வாரணாசிக்கு அருகே இருக்கும் சாரநாத்தில்தான் புத்தபெருமான் தனது முதல் உபதேசத்தை உலகுக்கு வழங்கினார். அதுமட்டுல்ல கங்கை நதியை தனது 79 வயதில் அவர் நீந்திச் சென்றார் என்ற வரலாற்றுக் குறிப்பும் இருக்கிறது.
 
 
 

river%2046984m.JPG


river%2046984l.JPG


river%2046984k.jpg


river%2046984j.JPG


river%2046984i.JPG


river%2046984d.JPG


http://malarum.com/article/tam/2014/07/07/3460/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-i-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-i-.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.