Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலஸ்தீனமும் நாமும்: புதிய திசைகள்

Featured Replies

newdirections.jpg
பாலஸ்தீன மக்கள் மிருகத்தனமாக தாக்கி அழிக்கப்படுவதும் அத்தாக்குதலின் தன்மை, அளவு, நேரம், காலம் என்பனவற்றை வைத்து இதை எதிப்பவர்கள் ஆதரிப்பவர்கள் தத்தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதும் ஒரு அரசியல், சமூக வழக்கமாகி விட்டது. ஏன் ஒருவகையில் அது ஒரு சடங்காக் கூட ஆகிவிட்டது. எதிரி வீழ்த்தப்படுவது தொடர்பான நம்பிக்கைகள் தெளிவில்லாத போது போராட்டங்களும் எதிர்ப்புகளும் சடங்காகின்றன. இது போராடுபவர்களின் தவறல்ல! இன்று உலக மக்களை கேட்பாரற்ற நிலையில் அழித்தொழித்துக் கொண்டிருக்கும் உலக அதிகார சக்திகளின் எல்லையில்லா அட்டூழியங்களின் எதார்த்த நிலைதான்.

பாலஸ்தீனர்களின் எதிரிகள் அவர்களை விட பல மடங்கு ஆயுத பலமானவர்கள். இஸ்ரேல் என்னும் தேசம் யூத இன, மத அடிப்படைவாதத்தில் உருவான சியோனிச தேசமாகும். மத அடிப்படையில் உருவான ஒரு வரலாற்று புரட்டின் அப்பட்டமான தேசிய அழிப்பு, தேசிய ஆக்கிரமிப்பு வடிவந்தான் இஸ்ரேல். இஸ்ரேலிய அரசு பாலஸ்தீன மக்கள் மீது போடும் குண்டு என்பது ஒரு அமெரிக்க, ஐரோப்பிய குண்டு என்பதும் ஒரு இஸ்ரேலிய உயிர், பலமடங்கு பாலஸ்தீனிய உயிர்களுக்கு சமன் என்பதும் உலகு நன்கறிந்த விடயங்கள் தான்.

உலகில் உள்ள அரசுகள் பெரும்பாலும் உலக ஆதிக்க அரசுகளின் தொங்கு தசைகளாக இருந்துவர, உலக ஆளும் குழுமங்களின் ஒடுக்குமுறைகள் தற்காலங்களில் மிக அப்பட்டமாக நடைபெறுகிறது. அவர்களுக்குள் உள்ள அதிகார போட்டிகளில், வீழ்ச்சியில் இருந்து காத்துக்கொள்வதில் இருக்கும் மூர்க்கத்தனம் உலக மக்கள் முன் அவர்களின் ஒடுக்குமுறையை அம்மணமாக்குகின்றது. மூலதனத்தின் ஏற்றத்தாழ்வுகளின் இடைவெளிகள் அகலமாவைதைப்போல், ஒடுக்குமுறைக்கும் அதை எதிர்க்கும் சக்திகளுக்குமான இடைவெளிகளும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

நாம் வரலாற்றில் அறிந்து கொண்ட சூழ்ச்சி, பிரித்தாளுதல், ஆக்கிரமித்தல், அடிமைப்படுத்தல், மதத்திற்கான யுத்தம், இன அழிப்பு என்பன அனைத்தும் இன்றும் நம் கண்முன் அதே வடிவில் சில இடங்களின் சற்று மாறுபட்ட வடிவிலும் நடந்துதானே வருகிறது. இவையனைத்திற்கும் இன்று நாம்தான் வரலாற்று சாட்சிகள்.

சியோனிசத்தின் குரூர தேசிய ஒடுக்குமுறைக்குள் பாலஸ்தீன மக்கள் அகப்பட்டு தவித்துவர, சிங்கள பெளத்த பெருந்தேசிய இன ஒடுக்குமுறைக்குள் இலங்கயில் தமிழ் பேசும் தேசிய இன மக்கள் அகப்பட்டு தவித்து வருகிறார்கள். முஸ்லீம் மதத்தை பயங்கரவாத மதமாக்கி, முஸ்லீம் மக்களை உலக மக்களின் எதிரியாக்க கடும் பிரயத்தனம் எடுத்துவரும் அமெரிக்க, மேற்கத்தய அரசுகளின் கோர முகங்கள் வெட்ட வெளிச்சமானவை. மறுபக்கம்; வர்க்கம், தேசம், இனம், பிராந்தியம் அனைத்தையும் கடந்து முஸ்லீம் மார்க்கத்தவர் என்ற ரீதியில் உலகு தழுவிய ரீதியில் ஒரு இணைவை காண முனையும் ஓர் போக்கு வளர்ந்து வருகிறது. இது ஒடுக்கு முறையின் எதிர்வினையாக இருக்கின்ற போதும் ஆபத்தானது தான்.


ஒரு சமூகம் தனக்குள் அதீத ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்கின்றது என்றால் அது தனக்குள் அதிகமான பிளவுகளை உடையது என்றுதான் பொருள். அரபு உலகத்தை அமெரிக்கா பந்தாடுவதும், அல்கைதா, தலிபான், ஐஸிஸ் என அமெரிக்க, மேற்கத்தைய அரசுகள் இஸ்லாமிய கூலிப்படைகளை உருவாக்குவதும்; தேவையான போது பயன்படுத்திவிட்டு பின் பயங்கரவாதிகளாக உலகிற்கு அறிவித்து அவர்கள் செய்யும் கொடூரங்களை வைத்தே முஸ்லீம் மக்களை உலக மக்களின் எதிரியாக்க முனைவதும் நிகழ்கிறது.

ஹமாசின் தவறுகளை வைத்து பாலஸ்தீன மக்கள் மீதான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதும் இஸ்ரேலிய அரசை ஆதரிப்பதென்பது சமூக விரோதிகளின் அரசியல். ஐஸிஸ் இன் ஷியா முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மீதான காட்டு மிராண்டித்தனத்தை அவர்களும் முஸ்லீம்கள் என்கின்ற ஒரே காரணத்திற்காக கண்டிக்கத்தவறும் முஸ்லீம்கள், பாலஸ்தீன மக்களின் உரிமைகாக குரல் கொடுக்கும் உரிமையை இழந்துவிடுகிறார்கள்.

பாலஸ்தீன மக்கள் ஹமாஸ் பயங்கரவாதிகள்; தமிழ்மக்கள் புலி பயங்கரவாதிகள்; இலங்கை முஸ்லீம் மக்கள் மதவாதிகள்; மலையக மக்கள் இந்திய கைகூலிகள்; என உரிமைப் போராட்டங்களை சிறுமைப்படுத்துவதற்கு என ஒடுக்குமுறையாளர்கள் உருவாக்கும் தோற்றப்பாடுகள் நாம் அறிந்தவைதான். ஒடுக்குமுறையாளர்களின் வகைப்படுத்தல்களை உண்மையாக்குபவர்களாக அல்லாது எமது மக்களின் சரியான. நியாயமான உரிமைப்போராட்டங்களை தெளிவான, சரியான அரசியலினூடாக எடுத்துச்செல்ல வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும்.

ஒடுக்குபவர்கள் பலமாக இருந்தாலும் ஒடுக்கப்படும் நாம் தான் பெரும்பான்மையானவர்கள்; அதுதான் எங்கள் பலம். எங்கள் போராட்டங்கள், எதிர்ப்பு குரல்கள் ஒடுக்கும் சக்திகளுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் அடக்கப்படாது அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கட்டமைப்பது தொடர்பாக போராடும் சக்திகள் சிந்திக்க தொடங்க வேண்டும். உலகில் எந்த மூலையில் மக்கள் ஒடுக்கப்படும் போதும் நாம் எழுப்பும் எதிர்ப்பு குரல் என்பது எமது கடமை என்பதுடன் எமது மக்களின் உரிமைப்போருக்கான ஒரு அடித்தளமாகவும் அமையும் என்பதே வரலாறு எமக்கு தந்திருக்கும் பாடம்.

புதிய திசைகள்

http://www.kural.co.uk/news/2014/palestine

Edited by எம்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.