Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்தார் நிகழ்வுக்கு பொதுபல சேனாவையும் இனி அழைத்தாலும் ஆச்சரியம் இல்லை! மனம் வெதும்புகிறார் அரியம் எம்.பி.

Featured Replies

ariyam%20mp%20987h46d.jpg

 

முஸ்லிம் சமூகத்தின் மிகவும் உன்னதமான விரதமாக நோக்கப்படும் நோன்புவிரதம் "இப்தார்" என புனித திருக்குர்ஆனில் கூறப்படுகிறது. இதை நான் புனித மத அனுஷ்டானமாக மதிப்பதனால்தான் எந்த ஒரு இப்தார் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வதில்லை என மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா காத்தான்குடியில் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என கேட்டபோது அது தொடர்பாக அரியம் எம்.பி. கூறியவை வருமாறு:-
 
ஒவ்வொரு மதமும் அவர்களின் மத சம்பிராயங்களுடனும் பக்தியுடனும் வழிபாட்டுடனும் நோன்பு நோத்து அந்த உன்னத விரதத்தை பூர்த்தி செய்வது அந்தந்த மதத்திற்கு உரிய தனித்துவமான, பாரம்பரியமான நடைமுறையாகும். இந்து மதத்தில் கந்தசஷ்டி, கௌரி விரதம் , விநாயகர் விரதம் , சோமவாரம், சிவராத்திரி என பல விரதங்களும், கிறிதவ மதத்தில் ஈஸ்டர், உயிர்தெழுந்த ஞாயிறு போன்ற விரதங்களும், பௌத்த மதத்தில் பூரணை தின விரதங்களும், உரிய மாதங்களில் உரிய திதிகளில் அந்தந்த மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றன.
 
அவ்வாறுதான் இஸ்லாம் மதத்திலும் நோன்பு விரதம் மிகமுக்கிய விரதமாக கடைப்பிக்கப்படுகிறது. ஆனால் அந்த விரத அனுஷ்டானங்களின் போது பிற மதத்தவர்களை அழைத்து, ஒரு களியாட்ட நிகழ்வு போன்று, அதை நடத்துவதோ, அல்லது பிறந்த நாள் விழா போன்று உணவு விடுதிகள், அலுவலகங்கள், கடற்கரைகள், பொதுமண்டபங்கள், வீதி ஓரங்கள் என்பவற்றில் பல பிரமுகர்களையும் அழைத்து "இப்தார்" நிகழ்வு நடத்துவது என்பதோ சிலவேளை முஸ்லிம் மக்களுக்கு சரியாகப்படலாம். ஆனாலும் ஓர் உன்னதமான விரதத்தை எப்போதும் மதிப்பவன் நான். பகிரங்கப்படுத்தி, புகைப்படம், வீடியோ எடுத்து, விளம்பரம் செய்து விரத அனுஷ்டானம் செய்வதை இஸ்லாம் மதம் சம்மதித்துள்ளதா என்பது எனக்குத்தெரியாது. ஆனால் வழமையாக முஸ்லிம் அரசியல்வாதிகள், முஸ்லிம் மார்க்கத் தலைவர்கள், முஸ்லிம் வர்தகர்கள், முஸ்லிம் சமூகப் பெரியார்கள் போன்றோருக்கு "இப்தார்" நிகழ்வுக்காக அழைப்பு விடுவிக்கப்படுவதைப் போல் இப்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோருக்கும் இப்தார் நிகழ்வுக்கு அழைப்பு விடுவிக்கப்படுகின்றமையையும் ஊடகங்களில் காணமுடிகின்றது.
 
எதிர்காலத்தில் பொதுபலசேனாவுக்கும் இவ்வாறு இப்தார் நிகழ்வுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை, விரதம் வேறு; விழாக்கள் வேறு. இந்துக்களின் பொங்கல்விழா, சித்திரை புதுவருடவிழா, தீபாவளிவிழா, கிறிஸ்தவர்களின் நத்தார்விழா, ஆங்கில புதுவருடவிழா, பௌத்தர்களின் சிங்கள புதுவருடவிழா, நோன்மதிவிழா போன்று இஸ்லாமிய மக்களால் மீலாத்துன் நபி, ஈதுல் பித்ர், ஈதுல் அல்ஹா என பல விழாக்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
 
இவ்வாறான விழாக்களில் வேற்று மதத்தினர்கள் கலந்து கொண்டு கொண்டாட்டம் நடத்துவதிலும் புகைப்படம் எடுத்து விளம்பரப்படுத்துவதிலும் தவறில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. ஆதியில் இருந்து முன்னோர்களான இஸ்லாம் மக்கள் இவ்வாறு விளம்பரப்படுத்தி மாற்றுமதத்தவர்களை பக்கத்தில் அமரவைத்து நோன்பு நோற்று புகைப்படம் எடுக்கவில்லை. அவர்கள் எவருமே விளம்பரம் செய்து இப்தார் அனுஷ்டிக்கவில்லை. ஆனால் இப்தார் விரதம் முடிவற்றபின் றம்ழான் தினத்தில்தான் எல்லோருக்குமான விருந்தோம்பல்களை மேற்கொண்டமையைக் காணமுடிந்தது. தற்போது சிலர் இதை அரசியலாகவும் சிலர் தங்களின் விளம்பரத்திற்காகவும் ஊடகங்களில் படம் வருவதற்காகவும் நடத்துவது போன்று உள்ளது. இதை முஸ்லிம் மார்க்கப் பெரியார்களும் முஸ்லிம் புத்திஜீவிகளும் எதிர்காலத்தில் கவனத்தில் எடுக்க வேண்டும். எனவே புனிதமான இப்தார் விரத நிகழ்வை மதிப்பவன் என்ற காரணத்தினால்தான் நான் இதுவரை எந்த இப்தார் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவும் இல்லை; இனியும் கலந்து கொள்ளப் போவதுமில்லை. - என்றார் அரியம் எம்.பி.
 
http://malarum.com/article/tam/2014/07/28/4021/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-.html#sthash.mFJPu0r4.dpuf
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.