Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையை வெளியிட்ட பி.பி.சி பொறுப்பாசிரியர் நீக்கம்

Featured Replies

jerami%206595484.jpg

 

இஸ்ரேல், பலஸ்தீனத்தின் சுயாட்சிப் பகுதியான காஸா மீது மனிதாபிமானமற்ற முறையில் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 430 குழந்தைகள் உட்பட ஆயிரத்து 800இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். குறிப்பாக இஸ்ரேலின் தாக்குதலுக்கு பயந்து மருத்துவமனைகள், ஐ.நா நடத்தி வரும் பள்ளிகள் உள்ளிட்ட மையங்களில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த இடங்களையும் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி அழித்தது. இதற்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இஸ்ரேல் தனது கொடூரத் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக ஹமாஸ் இயக்க குழந்தைகளை கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது என கூறியிருந்தது. இது குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிடும் முயற்சியில் லண்டன் பி.பி.சி நிறுவனத்தின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான பொறுப்பாசிரியர் ஜெராமிபவன் (வயது 54) ஈடுபட்டார். அதில் ஹமாஸ் இயக்கத்தினர் குழந்தைகளையோ பாலஸ்தீன அப்பாவி பொதுமக்களையோ மனித கேடயங்களாக பயன்படுத்தவில்லை. இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு குழந்தை பலியாகும் அவலம் நேர்ந்து வருகிறது என கள நிலவரம் குறித்த உண்மை தகவல்களை வெளியிட்டார்.
 
தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை எடுத்து வரும் பி.பி.சி செய்தி நிறுவனத்தால் இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் பொறுப்பாசிரியர் ஜெராமிபவன் ஹமாஸ் இயக்க ஆதரவாளராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறி அவரை பொறுப்பாசிரியர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் நடவடிக்கைகளை ஜெராமி பவன் 2005ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கண்காணித்து வருபவர். இதனாலேயே பி.பி.சி செய்தி நிறுவனத்தில் இவருக்கு அப்பிராந்தியத்தின் பொறுப்பாசிரியர் பதவியும் வழங்கப்பட்டது. மேலும் ஆர்.டி.எஸ். தொலைக்காட்சியின் சிறந்த ஊடகவியலாளர் விருதை கடந்தாண்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி நீக்கத்திற்கு பின்னணியில் இஸ்ரேல் ஆதரவு அரசியல் இருப்பதாக உலக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே இங்கிலாந்து அரசின் இஸ்ரேல் ஆதரவு நிலைக்கு எதிராக அந்நாட்டில் பெரும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அந்நாட்டின் பெண் அமைச்சர் ஒருவர் இஸ்ரேல் ஆதரவு நிலைக்கு கண்டனம் தெரிவித்து தனது பதவியையும் ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

னன்னும் என்னைப்போல் ஆட்கள் இருக்கினம் போல...

பிழைக்கத்தெரியாத அப்பாவி பத்திரிகையாளர்

யூதரைப்பகைக்கலாமா??? :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.