Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாறு காணாத வரட்சி

Featured Replies

கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாறு காணாத வரட்சி ஏற்பட்டுள்ளதால் விவசாய உற்பத்திகள் அடியோடு கருகி அழிந்து போயுள்ளதுடன்  குடிநீருக்காக மக்கள் அலைந்து திரியும் நிலையேற்பட்டுள்ளதால்  இம்மக்களின் வாழ்வாதார, பொருளாதார இழப்பிற்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ சேவைகள் அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. எஸ். சிறீதரன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது தொடர்பில் ஸ்ரீதரன் எம்.பி. அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

 

கடந்த நாற்பது வருட காலங்களில் என்றுமில்லாதவாறு கிளிநொச்சி மாவட்டம் வரலாறு காணாத வரட்சி நிலையைக் கொண்டுள்ளதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்டத்தின் திருவையாறு, சாந்தபுரம், கனகாம்பிகைக்குளம், ஆனந்தபுரம், தொண்டமான்நகர், பொன்நகர், பாரதிபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம், விவேகானந்தநகர், ஜெயந்திநகர், உருத்திரபுரம்,  வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடு, தர்மபுரம், பிரமந்தனாறு, முரசுமோட்டை, கண்டாவளை, தட்டுவன்கொட்டி, ஜெயபுரம், விநாயகபுரம், முழங்காவில், பூநகரி உட்பட்ட கிராமங்களில் வரட்சியால் ஏற்பட்ட அழிவுகள் சொல்லிலடங்காதவை. இக்கிராமங்களில்  உள்ள பல்லாண்டுப் பொருளாதாரப் பணப் பயிர்களான தென்னை மரங்கள் முற்றாக அழிந்துள்ளன.  2009 களில் யுத்தத்தால் மீள்குடியேறி நாட்டிய சிறிய தென்னம்பிள்ளைகளும் முற்றான அழிவை அடைந்துள்ளன. ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டத்தில்  2012 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சிறுபோக நெற்செய்கை அழிவு, அதன் பின்னர் 2012 இன் இறுதியில் பெய்த கடும்மழை காரணமாக  2013 ஆம் ஆண்டின் ஆரம்பகால காலபோக அறுவடையும் முற்றாக இழந்த நிலையில், இந்த நெல் அழிவுக்கு எந்த வெள்ள நிவாரணமும் வழங்கப்படாத சூழலில் 2013 ஆம் ஆண்டின் இறுதியில் இல்லாமல் போன மழை 2014 இன் இன்றுவரை இம்மக்களைச் சொல்லொண்ணாத் துன்பத்திற்குத் தள்ளியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பெருங்குளமான இரணைமடு வற்றி வரண்டு போன நிலையில் சிறிய அளவு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய அக்கராயன், வன்னேரிக்குளம், கல்மடுக்குளம், பிரமந்தனாறுக்குளம், புதுமுறிப்புக்குளம், கரியாலை, நாகபடுவான்குளம் என்பனவும் அடியோடு வற்றிவிட்டன. இதைவிட கிளிநொச்சி மாவட்டத்தின்  நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய குளங்களெல்லாம் வற்றி நிலம் வெடித்து வானம் பார்க்கிறது. இந்தச் சூழலில் மக்கள் குடிநீருக்காக மாவட்டம் முழுவதும் அலையாய் அலைகின்றனர்.

 

கிளிநொச்சி மாவட்டத்தின் நெல்லுக்கு அடுத்த பொருளாதார சீவியப் பயிரான இலட்சக்கணக்கான தென்னைமரங்கள் வரட்சி தாங்க முடியாமல்  வட்டோடு சாய்ந்து கருகியுள்ளன. பயன்தரு வாழை மரங்கள் அடியோடு நாசமாகியுள்ளன. பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள் வரட்சி காரணமாக குடி தண்ணீர் தேடி அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் தாங்கள் விரைந்து செயற்பட்டு இம்மக்களின் வாழ்வாதார இழப்பிற்கு நிவாரணம் கிடைக்க ஆவன  செய்வதுடன், பொருளாதார இழப்பினை ஈடுசெய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன். -

 

http://thinakkural.lk/article.php?article/bspmyemv4r4900b9cfe8b60410202wdfxw2cf759dc4c0cccb27a6737qudbq#sthash.mtasJRZM.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.