Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

900 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை எங்கே? : தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி வேண்டுகோள்

Featured Replies

Tamil_News_large_1063356.jpg

 

சென்னை: தமிழகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்ட, 900 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை குறித்து, தகவல் அறிந்தவர்கள், தெரிவிக்கும்படி, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து, பல ஆண்டுகளாக கலைப்பொருட்கள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு பணத்திற்காக விற்கப்படுகின்றன. சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் அவ்வாறு ஆஸ்திரேலியாவிற்கு விற்கப்பட்ட, ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த நடராஜர் சிலை மற்றும் விருத்தாசலம் அர்த்தநாரீஸ்வரர் சிலை ஆகியவை, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நடவடிக்கையால் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த, 900 ஆண்டு கள் பழமையான மற்றொரு நடராஜர் சிலை, வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருப்பதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட இந்த நடராஜர் சிலை, ௯௦௦ ஆண்டு கள் பழமையானது. 68 செ.மீ., உயரம் உள்ள இந்த சிலையின் திருவாசியில், 32 அக்னி பிழம்புகள் உள்ளன. தற்போது இதை வெளிநாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகம் பெருந்தொகைக்கு வாங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த சிலை திருட்டு தொடர்பாக, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட, காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கவில்லை.

சிலை குறித்து விவரம் அறிந்தோர், 'ஏ.ஜி.பொன்மாணிக்கவேல், ஐ.பி.எஸ்., காவல் துறை துணைத்தலைவர், சிலை திருட்டு தடுப்பு சி.ஐ.டி., பிரிவு, சி -48, 3வது தளம், தமிழ்நாடு வீட்டு வசதி வளாகம், 2வது அவென்யூ, அண்ணாநகர், சென்னை-40' என்ற முகவரிக்கோ, 98405 8729, 044-2622 0332 என்ற தொலைபேசி எண்களிலோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் விவரங்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

 

http://www.dinamalar.com/district_detail.asp?id=1063356

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.