Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுரண்டப்படும் தமிழக கடல்வளம்: நடவடிக்கை எடுக்க மீனவர்கள் எதிர்பார்ப்பு

Featured Replies

Tamil_News_large_106567720140909011206.j

 

நாகப்பட்டினம்: தமிழக கடல் பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து, கடல் வளம் சுரண்டப்படுவதை தடுக்க, அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 1076 கி.மீ., நீளமுடைய கடலோரத்தில் 13 கடலோர மாவட்டங்களில், 591 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
தமிழக கடல் பரப்பில் ஆயிரக்கணக்கான படகுகள் மீன்பிடிப்பதால், மீன் வளத்தை காக்க ஏப்ரல், மே மாதங்களில் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு, கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு அரசு வழிவகுக்கிறது.மேலும், கடல் வளத்தை பாதிக்கும் இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளை கொண்டு மீன்பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.சுனாமிக்கு பின் கடலின் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக, தமிழக கடல் பரப்பில் மீன்கள் வரத்து குறைவாகவே உள்ளதால், பல மீனவ கிராமங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆசியோடு, அரசால் தடை செய்யப்பட்ட வலைகள் மூலமாக மீன்பிடிக்க துவங்கிய மீனவர்கள், தற்போது அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

சீர்காழி அருகேயுள்ள பழையார் மீனவர்கள், சுருக்கு மடி வலையை பயன்படுத்தியதால் கடந்த 2002 ம் ஆண்டு பழையார் மீனவர்களுக்கும், கடலுார் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டு துப்பாக்கி சூடு வரை சென்றது.அரசால் தடை செய்யப்பட்ட வலைகள் மூலமாக பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க துவங்கியதால், தமிழக கடல் பகுதியில் மீன்கள் சிக்காமல், மீன்களை தேடி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்லும்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர்.தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டால் எதிர்காலத்தில் கடலில் கடல் வாழ் உயிரினங்களே அழிந்து, மீன்பிடித் தொழில் நசுங்கி விடும் அபாயம் இருப்பதாக மீனவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மீன்வளத்துறை அலுவலர்கள் கண்டும் காணாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை என்கின்றனர் மீனவர்கள்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.