Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவ பரிசோதனை! - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திருமணத்திற்கு முன் மணமக்களுக்கு மருத்துவ பரிசோதனை! - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு. 
[sunday 2014-09-14 09:00]
 
திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விவகாரத்து வழக்குகள் அதிகரிப்பதால், திருமணத்துக்கு முன் ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனையை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்கின் சிறப்பு விசாரணை விடுமுறை தினமான நேற்று ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதி கிருபாகரன் முன் நேற்று நடந்தது. அப்போது மூத்த வக்கீல்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர், பெற்றோர், பாதிக்கப்பட்டோர் என பல தரப்பினரும் ஆஜராகினர். அப்போது வக்கீல்கள், நீதிபதிகளிடம் கூறியதாவது:
 
பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் திருமணத்திற்கு முன் ஆண் பெண் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மரபணு மற்றும் ரத்த பரிசோதனை சான்று அளித்தால் திருமணம் பதிவு செய்யப்படும். தற்போதுள்ள நடைமுறைகளில் பரிசோதனை செய்வதன் மூலம் ஆண்மைக்குறைவை கண்டறிய முடியாது. தமிழகத்தில் பழங்காலத்தில் திருமணத்தின்போது பாரம்பரிய சடங்கு முறைகள் இருந்தது. இவற்றின் மூலம் ஆண்மை குறைபாட்டை பரிசோதிக்கும் நடைமுறை இருந்தது.
 
நாகரீகத்தின் வளர்ச்சியால் இந்த நடைமுறை இல்லாமல் போய் விட்டது. இந்த பிரச்னைக்கென பல சட்டங்கள் இருந்தாலும் அவை அமலாகவில்லை. எனவே இதற்கென தனியாக சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். சட்டரீதியாகவும், கவுன்சலிங் மற்றும் மருத்துவ ரீதியாக தீர்வு காண்பது குறித்து பரிசீலிக்க வேண்டும். தற்போது முழு மருத்துவ பரிசோதனை செய்யும் நடைமுறை வந்து விட்டது. அதன் மூலம் உறுதிபடுத்துவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
 
இதேபோல் பாதிக்கப்பட்ட இரு பெண்களின் பெற்றோரும் நீதிபதி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். நீதிபதி முன் கண்ணீர் விட்டு அழுதனர். ‘எங்கள் மகளை திருமணம் செய்து கொடுத்தோம். ஆண்மைக்குறைவு பிரச்னையால் அவர்கள் மிகுந்த சித்ரவதைக்கு ஆளாகினர். இது போன்ற பிரச்னை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர். இதனை கேட்ட நீதிபதி பிரச்னைகளை மனுவாக எழுதிக் கொடுக்கும்படி கேட்டார். அவர்கள் மனுவாக எழுதிக்கொடுத்தனர்.
 
கோர்ட்டுக்கு வந்திருந்த டாக்டர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘திருமணத்திற்கு முன் தகுதி பரிசோதிப்பதற்கு கூடுதல் செலவாகும். ஆனால், ஒருவர் உடல்ரீதியாக ஆண்மை பலம் பெற்றிருந்தாலும், மனரீதியாக பாதிக்கப்படவில்லை என கூற முடியாது. இதற்கு பாலியல் கல்வி தேவை. திருமணத்திற்கு முன் இருவருக்கும் கவுன்சலிங் அளிக்க வேண்டும்‘ என்றார். மனநல மருத்துவர் ராமசுப்பிரமணியம் கூறுகையில், ‘திருமணத்திற்கு முன் கவுன்சலிங் கட்டாயம். வெளிநாடு செல்வோருக்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் குறைகள் ஏற்படுகிறது. இவற்றை கவுன்சலிங் மூலம் சரி செய்யலாம். பாலியல் ஒவ்வாமை காரணமாக 60 சதவீத திருமண முறிவு ஏற்படுகிறது.
 
இதனை தடுக்க திருமணத்திற்கு முன்பே ஆலோசனை கூறக்கூடிய கவுன்சலிங் மையங்களை ஏற்படுத்தி, ஆலோசனை வழங்கவும் வக்கீல், டாக்டர், தொண்டு நிறுவனம் அமைந்த மையங்களை அமைக்க வேண்டும்‘ என்றார். ஓய்வுபெற்ற நீதிபதி ராஜா சொக்கலிங்கம் கூறுகையில், ‘நான் விசாரித்த பல வழக்குகளில் ஆண்மைக்குறைவு காரணமாக வந்த வழக்குகளே அதிகம். ஆபாச படம் பார்த்து அதுபோல் மனைவி நடக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இதற்கு அந்த பெண் மறுப்பதால் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் இல்லறத்தில் திருப்தியற்ற நிலை ஏற்படுகிறது. சிலர் சமூகத்தை விட்டு ஒதுங்கி இருப்பதால் நாட்டம் இல்லாமல் இருந்து விடுகின்றனர்‘ என்றார்.
 
இதுபோல் பலர் நீதிபதி முன் ஆஜராகி தங்களது கருத்துகளை தெரிவித்ததுடன் மனுவாகவும் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட நீதிபதி, தமிழக அரசு தன்னுடைய கருத்தை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, செப். 18ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.http://www.seithy.com/breifNews.php?newsID=116773&category=IndianNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.