Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலிமுகத்திடலுக்கு அருகில் 233 ஏக்கர் கடற்பரப்பை நிரப்பி கொழும்பு துறைமுக நகரம் ஒன்று1337 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது.

Featured Replies

காலிமுகத்திடலுக்கு  அருகில் 233 ஏக்கர் கடற்பரப்பை நிரப்பி கொழும்பு துறைமுக நகரம் ஒன்று1337 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவுள்ளது.இந்த திட்டத்தினால் உயர் குடிமக்களும் அரசியல் செல்வாக்குள்ளவர்களும்  பயனடைவர்.

445_content_21_09_20.jpg

 

இனப்பிரச்சினை  தீர்வு என்பதை விட  இனப்பிரச்சினையை வைத்துக் கொண்டு கட்சிஅரசியலையும் ஆட்சிஅதிகாரத்தையும் தக்க வைக்கின்ற செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்ஷ  அரசாங்கத்திடம் மாத்திரமல்ல இலங்கை  சுதந்திரமடைந்த  காலம் முதல் பதவியில் இருந்த அரசாங்கங்களிடம்  இந்த  பண்பை  காணமுடியும். அபிவிருத்தி என்ற பெயர்ப் பலகையுடன் ஆட்சிக்கு வருகின்ற  கட்சிகள்  குறிப்பாக ஜனாதிபதிகள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய  மாற்றங்கள் தொடர்பாக  சிந்தித்ததாக இல்லை.மக்கள்  அபிவிருத்தி  என்ற பெயரில் உயர் குடிமக்கள், முதலாளிகள், அரசியல் செல்வாக்குடையவர்கள், அமைச்சர்களின்  ஆதரவாளர்கள், உறவினர்கள்  ஆகியோரின் சுகபோக வாழ்க்கைக்கான  ஏற்பாடுகள்  மாத்திரமே  இடம்பெறுகின்றன.  

 

வெவ்வேறு பிரச்சினைகள்

 

ஆனைப் பசிக்கு சோளப் பொரி போல் சாதாரண குடி மக்களின் பசியைத் தீர்க்க அவ்வப்போது  ஏதோ வீசப்படுகின்றன. இலங்கையின்  அரசியல் பிரச்சினைகளுக்கு  அப்பால்  வடக்குகிழக்கு  உள்ளிட்ட  25 மாவட்டங்களிலும்  வெவ்வேறு  விதமான  பிரச்சினைகள்   உண்டு. அவற்றில்  சுகாதாரம், குடிநீர்,  வீட்டு  வசதி  பிரச்சினைகள் முக்கியமானதாகும். மக்களின் அடிப்படை வாழ்வுக்கு தேவையான உணவு, உடை, உறையுள் என்ற மூன்று  அம்சங்களும் சரியான முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றதா  என்பது  கேள்வியாகும்.

 

வரவு செலவுத் திட்ட  அறிக்கையில்  அபிவிருத்தி  வளர்ச்சிகள் தொடர்பாக காண்பிக்கப்பட்டிருக்கும்  வளர்ச்சி வீதங்கள் தொடர்பான சந்தேகங்களை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த வருட அறிக்கைகளுடன்  ஒப்பிட்டு நோக்கும்  போது  புள்ளி விபரங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள்  இருப்பதையும்  அவதானிக்கலாம். உதாரணமாக  கடந்த  ஆண்டு மத்திய வங்கியின்  அறிக்கை  ஒன்றில் பொருளாதார வளர்ச்சி  6 சதவீதம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் கடந்த நவம்பர்  மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையில்  பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதம் என்றும் இது கடந்த  2012 ஆம் ஆண்டை விட இரண்டு சதவீத வளர்ச்சி எனவும் கூறப்பட்டிருந்ததாக ஐக்கிய தேசிய  கட்சியின்  பொருளாதார நிபுணர் ஹர்ஷா டி சில்வா  சுட்டிக்காட்டியிருந்தார்.

 

அத்துடன் ஒவ்வொரு அமைச்சுகளும்  தங்களுடைய  அபிவிருத்தி  செயற்பாடுகள் பற்றி வெளியிட்டுள்ள  அறிக்கையும்  மத்திய  வங்கியின்  அறிக்கைக்கும் இடையே முரண்பாடுகள்  இருப்பதாகவும்  அவர்  கூறியிருந்தார். இவ்வாறான  முரணான   அறிக்கைகளினால் மொத்தத் தேசிய உற்பத்தி பற்றியும் சாதாரண  மக்களின்   பங்களிப்புடன்  பெறப்பட்ட உள்ளூர் வருமானங்கள்  குறித்தும் சரியாக அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

 

தரவுகள் தகவல்கள்

 

   தரவுகள் தகவல்கள்  எதற்காக  மூடி முறைக்கப்படுகின்றன என்பது தொடர்பாக  பல்வேறு  சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டாலும் அதற்கு ஆளும் தரப்பு  மாத்திரமல்ல  எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய தேசிய கட்சியும்  பொறுப்புக்  கூறியாக வேண்டும். ஏனெனில்  அவர்களும் ஆளும்  கட்சியாக  இருந்தவர்கள். 1978 ஆம் ஆண்டில்  இருந்து 1995ஆம் ஆண்டு வரை 17 வருட  ஆட்சியின்போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமும்  முன்வைத்தஅறிக்கைகள் முன்னுக்குப்பின் முரணாகவே இருந்தன.  

 

ஐக்கிய  தேசிய  கட்சிஅரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த அமரர்  ரொனி டி மெல் சந்திரிகா  அரசாங்கத்தில் கட்சிமாறிஅமைச்சுப் பதவியை  ஏற்ற  போது ஐக்கிய தேசிய  கட்சி அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி பற்றிய சில தகவல்கள் தவறானவை  என்று  கூறியிருந்தார். ஐக்கிய தேசிய கட்சிஆட்சியில் 11 வருடங்கள்  நிதியமைச்சராக  இருந்த  ஒருவர் அவ்வாறு கூறும்போது அரசாங்கம்  பற்றிய நம்பகத்  தன்மைகளில் கேள்விகள்  எழுகின்றன.  அதேவேளை,  2014 ஆம்  ஆண்டுக்கான ஜூலை மாதம் வரையான மத்திய வங்கியின்  இடைக்கால அறிக்கையில் 180 மில்லியன் அமெரிக்க டொலர் மிகுதி வருமானமாக கிடைக்கவுள்ளது என்றும்  இதனால் இலங்கையின் வெளிநாட்டு நிதியிருப்பில் பற்றாக்குறை  ஏற்படாது  எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை காரணமாக ரூபாவின் பெறுமதி  உயர்வடைந்துள்ளதாகவும்   அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால் இந்த  ஆண்டில்   கடந்த  ஆறு  மாதகாலத்தில்  பெறப்பட்ட   கடன்  அதற்கான வட்டி  வீதம் பற்றி   அந்த   அறிக்கையில் விபரங்கள் இல்லை. ஆகவே, அபிவிருத்திச்  செயற்பாடுகள்  பற்றிய தரவுகள் தகவல்கள்  சரியானவையாக இல்லை என்பது தெரிந்த நிலையில் சாதாரண  மக்களின்  வாழ்வில்  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை எந்த அடிப்படையில்  நோக்குவது? மக்களின் சொந்த முயற்சி, வெளிநாட்டில் உள்ள  உறவினர்கள்  அனுப்பும்  பணம் என்பவற்றை அடிப்படையாகக்  கொண்டு வடக்குகிழக்கு  மக்கள் தங்கள் வாழ்வில் கணிசமான ளவு  முன்னேற்றத்தை  காண்கின்றனர்.

 

மத்திய கிழக்கில் பணியாற்றும்  பெண்களின்  வருமானத்தை  அடிப்படையாகக் கொண்டு தென்பகுதியில்  சில  குடும்பங்கள்  தங்கள்  வாழ்வின் தரத்தை குறைந்தளவு  மட்டத்தில்  உயர்த்தியுள்ளன.  

 

மொத்தத் தேசிய உற்பத்தி வருமானம்

 

ஆனால், மொத்தத்  தேசிய  உற்பத்தி  வருமானமும் அந்த வருமானத்தை கொண்டு சாதாரண  கிராம மக்களின் வாழ்வில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள்  குறித்த  விபரங்கள்  சரியானவையாக இல்லை. மொத்தத் தேசிய  உற்பத்தி  ஒவ்வொரு  கிராமங்களிலும் சரியாக  கணிப்பிடப்படுவதில்லை  என   ஐக்கிய  தேசிய  கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்கா  பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற  விவாதம் ஒன்றில் கூறியிருந்தார்.

 

ஆகவே, கிராமப்புறமக்களின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய  அபிவிருத்தித்  திட்டங்கள் இல்லை என்பது வெளிநாட்டு கடன்கள் மூலமான  வருமானத்தை  கொண்டே  மொத்தத் தேசிய உற்பத்தியும் கணிக்கப்படுகின்றது  என்பதை அவதானிக்க முடிகின்றது.  இந்த நிலையில்  சீனாவின்  உதவியுடன் கொழும்பு துறைமுகத்திற்கும்  காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள  கடலில் சுமார் 233 ஏக்கர்  கடற்பரப்பை  நிரப்பி  கொழும்பு  துறைமுக  நகரம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான வேலைத்  திட்டங்கள் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இலங்கை  ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோர் கடந்த  புதன்கிழமை  ஆரம்பித்துவைத்தனர்.

 

இத் திட்டத்திற்கு  சுமார்  1337 அமெரிக்க  மில்லியன் டொலரில் செலவாகும்  எனவும்  சீன  அரசின்  உதவியுடன்  இத் திட்டம் மேற்கொள்ளப்படும்  என்றும்  கூறப்பட்டுள்ளது. இங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், வர்த்தக  நிலையங்கள், தொடர் மாடி வீடுகள், விளையாட்டு மைதானங்கள், பொழுது போக்கு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.   1337 அமெரிக்க மில்லியன்  டொலரில் ஆரம்பிக்கப்படவுள்ள  இந்த  அபிவிருத்தித் திட்டத்தில் சாதாரண கிராமப் புற மக்கள் அடையப் போகும் நன்மை  என்ன? உயர்  குடி  வர்க்கத்தையும்  அரசியல் செல்வாக்குள்ளவர்களையும் மையப்படுத்தியதாகவே  அபிவிருத்தித்  திட்டங்கள் கூடுதலாக அமைகின்றன.  கிராமப் புறங்களில்  வீதி  அபிவிருத்திகள்,  சுயதொழில் வாய்ப்புகளுக்கான  உதவிகள்  வழங்கப்படுகின்றன.

 

ஆனால் உயர் குடி மக்களையும்  அரசியல்  செல்வாக்குள்ள வர்த்தகர்களையும் மையப்படுத்தி  செய்யப்படும்  அபிவிருத்தியின் அளவு கிராமப்புறங்களில்  இல்லை.

 

 பாராளுமன்றத்தில் கூறியது.

 

சீனா  உட்பட  மேற்குல  நாடுகள்  மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கிகள், உலகவங்கிகள்  வழங்கும்  உதவிகள் கிராமப் புற மக்களுக்குரியது என்று அமைச்சர்  சரத்  அமுனுகம  கடந்தவாரம் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற  ஏற்றுமதி  இறக்குமதி  சட்ட மூலம் தொடர்பான  ஒழுங்கு விதிகள் பற்றிய பிரேரணையைச் சமர்ப்பித்து  உரையாற்றியபோது  கூறியிருந்தார். ஆனால்,  வெளிநாட்டு உதவிகளில்  சுமார்  70 சத வீதமானவை உயர் குடிமக்களையும்   அரசியல்  செல்வாக்குள்ளவர்களையும் மையப்படுத்தியதாக  உள்ளது என   ஹர்ஷா டி சில்வா  அந்த  விவாதத்தில் பதிலுரையாற்றியபோது  சொல்லியிருந்தார்.

 

 

http://thinakkural.lk/article.php?article/tjjbeauwy07279f75dddd1e715003ljxfz9826a219cb0bec217dc096jrdcx#sthash.Ck1GAU5o.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.