Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் பெயரால் ஒரு மோசடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கடவுள் பெயரால் ஒரு மோசடி
 
மு.கு 1: இது மிக சீரியஸான பதிவு. போரடிக்கும் என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன்
மு.கு 2: இங்கே கடவுள் என்ற பதம் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, குறிப்பிட்ட கடவுளை மட்டும் குறிக்கவில்லை. 
 
god-detail2.jpg
 
கடவுள். என்ன ஒரு உன்னதமான ஒரு சொல்!! நம்புபவன், நம்பாதவன் எல்லோருடைய எண்ணங்களுமே இவரை சுற்றியே பெரும்பாலும் இருக்கிறது. உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கடவுள் என்ற சொல்தான் மிக மிக சர்ச்சைக்குரிய ஒரு சொல். உலகிலேயே அதிகம் பாராட்டப்பட்டவர் கடவுள். அதிகம் இகழப்பட்டவர் கடவுள், அதிகம் விமர்சிக்கப்பட்டவரும்  கடவுள்தான். இப்படி எங்கும் நிறைந்திருப்பதால்தான் அவரை கடவுள் என்கிறார்களோ என்னவோ? இப்போது நான் சொல்வது கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை பற்றிய ஆராய்ச்சி அல்ல. இருக்கிறாரோ இல்லையோ, அவரை வைத்து பல்வேறு மோசடிகள் நடக்கின்றன. அதைப்பற்றித்தான்.
 
g2.jpg
 
இறை மறுப்பாளர்கள் என்பவர்கள் காலந்தோறும் இருந்து வருகிறார்கள். இவர்களிடம், "உங்களுக்கு ஏன் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது?", என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில், "கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவர் கருணை வடிவானவராக இருந்தால், மனிதர்களுக்கு ஏன் இவ்வளவு கஷ்டங்கள்? கவலைகள்? நோய் எதற்கு? வறுமை எதற்கு? ஏற்றத்தாழ்வுகள் எதற்கு?", என்று கேட்பார்கள். "கடவுள் என்ற நம்பிக்கை மனிதனை சோம்பேறி ஆக்கும் ஒரு விஷயம். அவனது போராடும் குணத்தை மந்தப்படுத்தும் ஒரு விஷயம்." என்றும் சொல்வார்கள். மேலும், "கடவுள் என்பது கயவர்களின் கண்டுபிடிப்பு. மக்களை ஏமாற்றி பிழைக்க சில அயோக்கியர்களால் கண்டு பிடிக்கப்பட்டவரே கடவுள். கடவுளின் பெயரை சொல்லி எத்தனை சாமியார்கள் மக்களின் பணத்தை பறிக்கிறார்கள்? பெண்களின் கற்பை சூறையாடுகிறார்கள்? அப்படியானால் கடவுள் மோசடி செய்பவர்களை தண்டிக்க வேண்டுமே? தண்டிக்கிறாரா? இல்லையே? பின்னே என்ன கடவுள்?", என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துவார்கள்.
 
parting-red-sea.jpg
 
உண்மைதான் கடவுள் பெயரால் பல மோசடிகள் உலகில் நடந்து வருகிறதுதான். அதற்கு கடவுள் எப்படி பொறுப்பாக முடியும்? செய்யும் தப்பை எல்லாம் செய்துவிட்டு, "கடவுளுக்கு சக்தி இருந்தால் தடுக்கச்சொல் பார்க்கலாம்?", என்று சொல்வது எந்த வகை பண்பு? நியூட்டன் சொன்னது போல எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு எதிர் விளைவு உண்டு. இதுதான் பலாபலன். இதுதான் விதி. "நாம் கண் முன்னே ஒருவன் தவறு செய்கிறான் என்றால் அதை கண்டும் காணாமல் சென்று விடு.", என்று எந்த கடவுளும் சொல்லவில்லை. கடவுளை பொறுத்தவரை எல்லா செயல்களுக்குமே சமமான எதிர்விளைவுகள் உண்டு. இதை தவிர்க்கவே முடியாது. ஆனால் அது எந்த வழியில் வரும், யார் மூலமாக வரும் என்பதுதான் யாருக்கும் புரியாத சூட்சமம். 
g3.jpg
 
சரி இறைநம்பிக்கையாளர்கள் எல்லோரும் சோம்பேறிகள்தான். பலர் மோசடிக்காரர்கள்தான். இது உண்மையானால், இறை மறுப்பாளர்கள் எல்லோருமே நல்ல பண்பாளர்களாக, நேர்மையாளர்களாக இருக்க வேண்டுமே? சமீபத்தில் ஒரு வலைத்தளத்தில் பெரியார் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அவர் எழுதிய அந்த கட்டுரையை அச்சு பிசகாமல் அப்படியே வெளியிட்டிருந்தார்கள். அது சமகாலத்துக்கும் பொருந்தும் என்ற நோக்கம் அதில் தெரிந்தது. அந்த கட்டுரையின் சாராம்சம் இதுதான். நம் தேசம் கடவுள் நம்பிக்கையால் இன்னும் முன்னேறாமல் இருக்கிறதாம். நாம் தினமும் பயன்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மேலை நாட்டவர் கண்டுபிடித்ததாம். அதை எல்லாம் நாம் பயன்படுத்திக்கொண்டே, கடவுளை கொண்டாடி மூட நம்பிக்கையில் உழன்று கொண்டிருக்கிறோமாம். இந்த கட்டுரை மட்டுமல்ல, இதே போன்ற கருத்தை பல்வேறு நண்பர்களும், கருத்துரை மூலமாகவோ, பதிவுகள் மூலமாகவோ கூறி வருகின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இது சரி என்றே தோன்றுகிறது. 
 
1+%252855%2529.JPG
 
இந்த கட்டுரையை படித்தவுடன் எனக்கு இரண்டு சந்தேகங்கள் தோன்றின. முதலாவது, மேலை நாட்டில் கடவுள் நம்பிக்கை கிடையாதா? இல்லை இந்த மாதிரி அறிவியல் அறிஞர்கள் எல்லோருமே இறை மறுப்பாளர்களாக இருந்தார்களா? இந்த கேள்விக்கு உண்மையான பதில், இல்லை என்பதுதான். உலகமெங்கும் கடவுள் நம்பிக்கை என்பது நீக்கமற நிறைந்திருக்கிறது. அதே போல, அறிவியல் அறிஞர்களில் தீவிர இறை மறுப்பாளர்களும் உண்டு, அதீத கடவுள் பக்தி கொண்டவர்களும் உண்டு. இதற்கு சிறந்த உதாரணம் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். கடைசி வரை அவர் கடவுளை நம்பினார் . இரண்டாவது சந்தேகம், இந்தியாவில் அறிவியல் அறிஞர்களே கிடையாதா? இல்லை அவர்கள் சொல்வது போல இந்தியா அறிவியலுக்கு எந்த பங்களிப்பும் தரவில்லையா? இந்த கேள்விக்கு பதில் வேண்டுமானால் List of Indian Scientists என்ற பெயரில் இணையத்தில் தேடிப்பாருங்கள். இவர்கள் அனைவருமே இறை நம்பிக்கையாளர்களும் இல்லை. மறுப்பாளர்களும் இல்லை. ஆக ஒரு நாடு முன்னேறாமல் போனதற்கு மூட நம்பிக்கைகள் மட்டுமல்ல, வேறு பல காரணங்களும் உண்டு. நம்மூர் பகுத்தறிவாளர்கள்தான் சைக்கிள் கேப்பில் ஆட்டோ என்ன, கப்பலே ஒட்டுவார்களே? ஒரு குறிப்பிட்ட சாதி துவேசத்தை தூண்டும் பொருட்டு, இந்த விஷயத்தில் கடவுள் என்ற வஸ்துவை கையில் எடுத்திருக்கிறார்கள் அவ்வளவே. 
 
0a.Lord-Rama-and-Lord-Shiva.jpg
 
உடனே மற்றவர்கள், "அவர்கள் எல்லோரும் போலி நாத்திகர்கள், நாத்திகத்தை கொள்கையாக அல்லாமல் ஒரு தொழிலாக கொண்டவர்கள். அவர்களை வைத்து பகுத்தறிவை எடைபோடக்கூடாது." என்று கூறுவார்கள். மிக மிக குறைந்த சதவீதம் மக்கள் தொகையை கொண்டவர்களுக்குள்ளேயே போலிகள் இருக்கும்போது, மிக மிக அதிக மக்கள் தொகையை கொண்ட இறை நம்பிக்கையாளர்களுள் போலிகள் என்பது மிக சாதாரணம்தானே?  இன்னொரு நண்பர் இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து, "நான் கடவுள் நம்பிக்கையை குறை சொல்லவில்லை, ஆனால் அதை ஒரு பொது விதியாக்கி, மற்றவர்களுக்கும் கற்பிப்பதுதான் தவறு." என்று கூறினார். சரிதான், என் நம்பிக்கையை என் குழந்தைக்கும் நான் விதைப்பது தவறுதான். ஆனால் இதையேதானே பெரும்பாலான இறை மறுப்பாளர்களும் செய்கிறார்கள்? தங்கள் குழந்தைகள் கடவுள் சம்பந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ளக்கூடாது என்று நினைக்கிறார்கள்? இதுவும் தவறுதானே? கடவுள் நம்பிக்கை வைத்திருப்பவன் எல்லோரும் அயோக்கியன், மூடன், காட்டு மிராண்டி, என்று பரிகாசம் செய்கிறார்கள்? இதுவும் ஒரு வகை கருத்து திணிப்புதானே?
 
g1.jpg
 
ஒரு சிலரை தவிர பெரும்பாலான மனிதர்கள் தன் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் நாத்திகனாக மாறுகிறான். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. வாழ்வில் ஏற்பட்ட விரக்தி, தான் கற்ற கல்வியின் ஆதிக்கம், பிற ஊடகங்களின் பாதிப்பு என்று நிறைய விஷயங்கள் அவர்களது மனதை ஆக்கிரமிக்கிறது. இந்த காலகட்டத்திலேயே கடவுள் குறித்த உண்மையான தேடல் தொடங்குகிறது. இதை சரியான வாய்ப்பாக பயன்படுத்தும் மோசடி பேர்வழிகள் இவர்களை மூளை சலவை செய்ய தொடங்குகிறார்கள். விரக்தி அடைந்தவரை கடவுள் பக்கமும், கல்வி கற்று பொருளாதார ரீதியாக பலமாக இருப்பவரை நாத்திகம் பக்கமும் இழுப்பது மிக சுலபம். இரண்டுமே மோசடிதான். இரண்டு பக்கமுமே சில பல உண்மைகள் திரித்தே சொல்லப்படுகிறது. இவர்களின் நோக்கம் மக்களை நல்வழிப்படுத்துவது அல்ல. தன் பக்கம் கூட்டம் சேர்ப்பது. ஆகவே மனிதர்கள் கடவுளை தேட தங்களின் பகுத்தறிவை பயன்படுத்துவது முக்கியம். ஆனால் பெரும்பாலானவர்கள் அடுத்தவரின் பகுத்தறிவை தன்னுடையது என்று நினைத்துக்கொள்வதாலேயே ஏதோ ஒரு பக்கம் கண்மூடித்தனமாக சாய்ந்து விடுகிறார்கள்.ஒரு அப்பட்டமான குற்றச்சாட்டை இங்கே வைக்கிறேன். பெரும்பாலான இளைஞர்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதில்லை. இதன் முக்கிய காரணம், இந்த கால கட்டத்தில் பணம்தான் கடவுள் என்கிற விஷயம் அவர்கள் மனதில் ஆழ வேரூன்றி விடுகிறது. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் தலை தூக்கி விடுகிறது. மேலும் ஏதேனும் ஒரு மதத்தை சார்ந்திருப்பது, தனது சுதந்திரமான செயல்களுக்கு இடைஞ்சல் தரும் என்பதாலேயே கடவுள்கள் மீது ஈடுபாடு இல்லாமல் போய் விடுகிறது. மற்றபடி கொள்கைரீதியாக கடவுள் மறுப்பு உள்ளவர்கள் மிக சொற்பமே. அதிலும் இதை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பவர்கள் ஒரு சிலரே.  
 
vivekananda.jpg
 
என்னை பொறுத்தவரை, கடவுளை புகுத்துபவனும், மறுப்பவனும் மோசடிக்காரர்களே. கடவுளை தேடுபவனே உண்மையான பகுத்தறிவாளன்.
 
balapakkangal.blogspot.com

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.