Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

palasintern-01.jpg

 

palasintern.jpg

 

இன்று (10/1/14) அன்புத் தம்பி பாலச்சந்திரனின் 16வது பிறந்தநாள்.. தமிழீழ தேசத்தின் மீது இனவெறியர்களும், ஏகாதிபத்தியங்களும் நடத்திய போரில் இனவிடுதலை கோரிக்கையான தனித்தமிழீழ கோரிக்கையை மனதில் ஏந்தி போரிட்டு வீரமரணம் அடைந்த போராளிகள் மற்றும் தமிழீழ மக்களின் உருவகமாக இருப்பவன் பாலச்சந்திரன்.. இனப்படுகொலைக்கு ஆளான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சாட்சியாக இருக்கின்றான் பாலச்சந்திரன். பால் முகம் மாறாத அந்த பாலகனின் முகம் இங்கு தூங்கி கிடந்த அண்ணன்களை வீறு கொண்டு எழவைத்திருக்கின்றது வீரம் தெறிக்கும் அவனது விழிகள் ஈழச்சுடரை எமது கைகளில் திணித்து இனத்தின் விடுதலையை நோக்கி ஓடவைத்திருக்கின்றது. பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு அவன் சுட்டு கொல்லப்பட்ட காட்சிகள், பாதுகாப்பான இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களை நோக்கி ஓடி வந்த எம் மக்கள் குண்டு மழையால் கொடூரமாக கொல்லப்பட்டதை நினைவுபடுத்துகின்றது. அவன் மார்பை துளைத்த ஒவ்வொரு குண்டுகளும் இனத்தை அழிக்க துடித்த இனவெறியர்களையும், எம் மண்ணனை சுரண்ட நினைத்த ஏகாதிபத்தியங்களையும்(அமெரிக்கா,இந்தியா,சீனா,ஜப்பான்) எங்களுக்கு நினைவுபடுத்துகின்றது. தான் கொல்லப்படப்போவது தெரிந்தும் மாறாத உறுதியை கொண்டிருந்த அவன் விழிகள், இறக்கப்போவது தெரிந்தும் இனவிடுதலைக்காக போரிட்டு உயிர்நீத்த என் போராளிகளை நினைவுபடுத்துகின்றது. எம் மக்கள் மிகுந்த உவகையுடன் கொண்டாடிய உனது பிறந்தநாள் இன்று ஓட்டுமொத்த தமிழனத்தின் விடிவுநாளாக மாறியிருக்கின்றது. அன்புத் தம்பி, பாலச்சந்திரா! உன் சாட்சியாக, உனது அண்ணன்களாகிய நாங்கள் இன்றொரு சபதத்தை ஏற்றுக்கொள்கின்றோம், ”எமது வாழ்நாள் முழுவதும் உண்மையாகவும், உறுதியாகவும், நேர்மையுடனும் எம் இனத்தின் விடுதலைக்காக தனித்தமிழீழத்திற்காககளமாடுவோம்எள்ளளவும் என் இனத்திற்கு இழுக்கு ஏற்படும் அளவுக்கு எமது செயல்கள் அமையாது என்றுஆயிரம் கைகளை ஒன்றிணைத்த வீர விழியே.. உன் வழி நின்று ஈழம் மீட்போமடா.., பாலச்சந்திரா!

 

—–பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்.

  • 2 weeks later...

தம்பி,

ஒரு சில காலம் உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கையை இந்த கணத்திலே நினைத்து பார்க்கிறேன்.

உன்னை தோளில் தூக்கிய நாட்களில் இருந்து மிடுக்காக நடந்துவரும் காலம் வரை நினைத்து பார்க்கிறேன்.

துடிப்பான உனது குழப்படிகளை உன் அம்மா என்னிடம் சொல்லும்போது உன் முகத்தை பார்க்கிறேன். எந்த உணர்வுகளுமே காட்டாத உன் முகத்தில் உன் தந்தையை மிஞ்ச உன்னால் மட்டும் தான் முடியும்.

உன் அக்காவை சீண்டும் குழப்படிகளை உன் அக்கா அடுக்கி செல்லும்போது இல்லை என்ற ஒற்றை வரி மறுப்பு மட்டுமே உன்னிடம் இருந்து வருகிறது.

படிக்கும் நேரத்தில் விளையாட கூடாது என்று உன் அம்மா சொன்ன காரணத்தினால் விடியற்காலை 4 மணிக்கு எழும்பி, கணனியில் சுட்டு விளையாட என்னை எழுப்பியதை இன்றும் கனவாகவே பார்க்கிறேன்.

சாப்பாட்டை கொண்டுவந்து தந்துவிட்டு சாப்பிடும் வரை என் முகத்தை பார்க்கும் உன் கருணை உள்ளத்தை பார்க்கிறேன்.

உந்து உருளியில் இரணைமடு குளக்கரையில் நாங்கள் பயணித்த நாட்களை மகிழ்வாக காண்கிறேன்.

அணி நடையில் சக தோழனின் தொப்பியை சரி செய்த வருங்கால தளபதியை உன்னில் கண்டேன்.

கையில் வைத்திருந்த சுடு கருவியின் சுடு குழல் மேல் நோக்கி இல்லாமல், இன்னொருவரை நோக்கி இருக்கிறது என்று சரி செய்த ஒரு வீரனை உன்னில் கண்டேன்.

..........

..........

..........

இறுதி நேரத்திலும் கலங்காத உன் விழிகள் இப்பொது என்னை கலங்க வைக்கிறது.

கடைசி வரை உன் கூட வராமைக்காக இன்றும் வருந்துகிறேன்.

உனக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உன்னை கொன்றவர்களுக்கான முடிவு காலம் தொலை தூரத்தில் இல்லை அன்பு தம்பியே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.