Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தேன்சிட்டு இசைவிருது 2014′ மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘தேன்சிட்டு இசைவிருது 2014′ மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள்.

எமது கலைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் நேசக்கரம் உப அமைப்பான தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் மாவட்டம் தோறும்

‘தேன்சிட்டு இசைவிருது 2014′ தேர்வு நடைபெற்று வருகிறது.

thenchiddu.jpg

02.08.2014அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது தேர்வு இடம்பெற்றது. இந்நிகழ்வானது தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் அனுசரணையுடன் ஏறாவூர்பற்று பிரதேச கலாசார பேரவையின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் நாட்டாரியல் பாடல் தேர்வு போட்டியில் நூற்றிற்கு மேற்பட்ட கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர். வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வினை பிரதேச செயலாளர் உதயசிறீதர் அவர்கள் தலைமையேற்றிருந்தார்.

கௌரவ விருந்தினர்களாக மாவட்ட கலாசார இணைப்பாளர் மலர்ச்செல்வன் , ஓய்வுநிலை கலாசார உதவிப் பணிப்பாளர் திரு.சி.தெய்வநாயகம் , செங்கலடி அரவணைப்பு அபை;பின் தலைவர் அருணன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலந்து சிறப்பித்த கலைஞர்களால் நாட்டார்பாடல் ,கூத்துப்பாட்டு , குமாரர் காவியம் ,வசந்தன் பாடல்கள், அம்மன் காவியம் ,ஒப்பாரி ,தாலாட்டு ,அம்மானை , எண்ணச்சிந்து ,சுனாமிப்பாடல் ,சூறாவளிப்பாடல் ,கோலட்டம் , கும்மி ,மீனவர்பாடல் என பலவகையான பாரம்பரிய கலாசார பாடல்கள் பாடப்பட்டன. இப்பாடல்களுக்கான இசைக்கருவிகளும் பாரம்பரிய கருவிகளே பயன்படுத்தப்பட்டன.

போட்டியாளர்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 3பேர் சிறந்த பாடகர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள். அம்பிளாந்துறையைச் சேர்ந்த ஆசிரியர் க.பரமானந்தம் அவர்கள் முதலாவது இடத்தையும் , கிரான்குளத்தைச் சேர்ந்த திருமதி.மனோன்மணி செல்வநாயகம் இரண்டாவது இடத்தையும் , கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த ப.சிவதர்சன் குழுவினர் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர். வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எங்கள் கலைஞர்களின் திறனை உலகிற்கு எடுத்துச் செல்லும் இம்முயற்சியில் எமது கலைஞர்களுக்கு எங்களது ஆதரவுகளை வழங்கி அவர்களை கௌரவிப்போம்.

IMG_3596-150x150.jpg IMG_3598-150x150.jpg IMG_3601-150x150.jpg

IMG_3628-150x150.jpg IMG_3631-150x150.jpg IMG_3634-150x150.jpg

IMG_3637-150x150.jpg IMG_3655-150x150.jpg IMG_3670-150x150.jpg

IMG_3672-150x150.jpg sittandy-nithy-6-150x150.jpg sittandy-nithy-7-150x150.jpg

sittandy-nithy-9-150x150.jpg sittandy-nithy-17-150x150.jpg sittandy-nithy-22-150x150.jpg

sittandy-nithy-31-150x150.jpg sittandy-nithy-32-150x150.jpg thenchiddu-150x150.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://nesakkaram.org/ta/nesakkaram.3631.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.