Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘தேன்சிட்டு இசைவிருது 2014′ முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘தேன்சிட்டு இசைவிருது 2014′ முல்லைத்தீவு மாவட்ட முடிவுகள்.

தேன்சிட்டு இசை விருதுக்கான முல்லைத்தீவு மாவட்ட பாடகர்களுக்கான குரல் தேர்வு 16.09.2014 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. நேசக்கரம் அமைப்பின் அனுசரணையில் தேன்சிட்டு உளவள அமைப்பின் திட்டமிடல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை யோ.புரட்சி அவர்கள் நெறியாள்கை செய்தார்.

மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூறு வரையான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பார்வையாளர்களும் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் திரு.இ.பிரதாபன் அவர்கள் ஆசியுரை கூறி சுடறேற்றினார். பிரதேச செயலக முக்கிய அதிகாரிகளும், வண பிதா ரோய் அவர்களும் கலந்து நிகழ்வைச் சிறப்பித்துக் கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வுகளை புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதேசங்களின் கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் நடத்தியிருந்தார். போட்டி நிகழ்வுகளை யோ.புரட்சி அறிமுக உரையாற்றி நடாத்தினார். மூன்று நடுவர்களும், ஒரு கௌரவ நடுவரும் கலந்துகொண்டு சிறந்த குரல்களுக்குரியவர்களை தேர்வு செய்தனர்.

நடுவர்களாக :-
1. செல்வன் சாந்தன் கோகுலன்(பாடகர்)
2. திருமதி சுதர்சன் ராதிகா(சங்கீத ஆசிரியை)
3. செல்வி ஜெயமலர்(சங்கீத ஆசிரியை)
4. கௌரவ நடுவர் பாடகர் நிமால்(இரு கால்கள் இழந்தவர்) நிமால் சிறந்த இசைக்கலைஞரும் இறுதிப்போரில் தனது இரு கால்களையும் இழந்தவராவார். தனது விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் சிறந்த கலைஞராகத் திகழ்கிறார்.
10 பாடகர்கள் முதற் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த சுற்றில் மாவட்டத் தேர்வில் மூவர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சகல போட்டியாளர்களுக்கும் பரிசுகளும், உணவும் வழங்கப்பட்டது. நிகழ்வு யாவும் புகைப்பட, காணொளி ஆவணமாக்கல் செய்யப்பட்டது.

முதல் மூன்று இடங்களை பெற்றுக்கொண்டவர்கள்:-
1.இ.வினோதினி(இனிய வாழ்வு இல்லம்)
2.க.பரணிதரன்(முள்ளியவளை)
3.ஜெ.சாந்தநேசன்(புதுக்குடியிருப்பு)
ஆகியோர் அனைத்து மாவட்ட தேர்வுக்கான வெற்றியைப் பெற்றுக் கொண்டனர்.

வருட இறுதியில் போட்டி நடைபெற்ற மாவட்டங்கள் அனைத்துக்குமான போட்டியின் மூலம் “தேன்சிட்டு 2014″ இசைவிருதுக்குரிய வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டு கௌரவிக்கப்படுவார். இறுதிச் சுற்றுக்கான கலைஞர்களை அனைத்துலகிலும் வாழும் தமிழர்கள் கலைஞர்கள் வழங்கும் ஒன்லைன் வாக்களிப்பும் சேர்த்து நடுவர்கள் தீர்ப்போடு இசைவிருது வழங்கப்படும்.

DSC00687-150x150.jpg DSC00691-150x150.jpg
DSC00704-150x150.jpg DSC00708-150x150.jpg DSC00716-150x150.jpg
DSC00717-150x150.jpg DSC00749-150x150.jpg
DSC00754-150x150.jpg DSC00760-150x150.jpg DSC00771-150x150.jpg
DSC00776-150x150.jpg DSC00797-150x150.jpg DSC00798-150x150.jpg
DSC00825-150x150.jpg DSC00829-150x150.jpg DSC00835-150x150.jpg
DSC00992-150x150.jpg DSC00995-150x150.jpg
 
DSC00999-150x150.jpg

 

http://nesakkaram.org/ta/nesakkaram.3652.html


DSC00995.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

thenchiddu1.jpg

 

thenchiddu3.jpgthenchiddu2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.