Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருடுவதற்காக நகல் சாவி தயாரிக்க வருபவர்களும் உள்ளனர்: நகல் சாவி தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஜே ஏ. எம். அன்சார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-சிலாபம் திண்ணனூரான்-

 

தன் அதிநுட்ப உழைப்பால் எத்தனையோ மனிதர்ளை சந்தோஷப்படுத்தும் வகையில் சாவி தயாரிப்பவர் ஜே ஏ. எம். அன்சார். கொழும்பு, கொம்பனி வீதியைச் சேர்ந்த அன்சாரை சந்திப்பதற்காக பாமர மனிதர்கள் முதல் பெரும் செல்வந்தர்கள், உயர் அதிகாரிகள் என பல்வேறு தரப்பினை இவர் சாவி தயாரிக்கும் ஸ்தானத்திற்கு வருவதை காண முடியும். 

 

சேர் சிற்றம்பலம் கார்டினர் மாவத்தையில் இலங்கையின் பிரபல புகைப்பட நிறுவனம் ஒன்றின் முன்றலிலேயே இவரின் தொழில் நடைபெற்று வருகின்றது. உல்லாசப் பயணிகளுக்கான வழிகாட்டியாக ஆரம்பத்தில் தொழில்புரிந்த அன்சார், தனது இருபதாவது வயதில் தனது நண்பரோடு இணைந்து சாவி தயாரிப்புத் தொழிலை பழகியுள்ளார்.

108Untitled-1.jpg

பின்னர் 1991இல் சவூதி அரேபியாவுக்குச் சென்று அங்கும் சில மாதங்கள் மாற்று சாவி வெட்டும் நிறுவனத்தில் தொழில் புரிந்துள்ளார். அன்சாரின் உழைப்பை பெற்ற நிறுவனம் முறையாக  சம்பளம் வழங்காமையினால் நாடு திரும்பி மீண்டும் சுயதொழிலாக மாற்று சாவி தயாரிப்புத் தொழிலை ஆரம்பித்தார்.

 

சாவி எனப்படும் திறவுகோல் மனிதனின் வாழ்க்கையோடு இணைந்தது. சக மனிதனை மனிதன் நம்பமாட்டான். அதனால் தான் இரும்பினால் தயாரிக்கப்பட்ட பூட்டை மனிதன் நம்புகின்றான். வீட்டுக்குள் கோடிக்கான பணமும் பெறுமதியான பொருட்களும் காணப்படலாம். வீட்டை விட்டு வெளியே வெளியேறுகையில் பூட்டைப்போட்டு பூட்டிவிட்டே வெளியேறுவார்கள். பூட்டிய பூட்டின் சாவியை தொலைந்து விட்டால் அந்நேரத்தில் மனிதர்கள் படும் அவஸ்த்தையை சொல்லவே இயலாது. அவ்வாறான நேரத்தில் சாவியை தொலைந்தவர்கள் பலர் அன்சாரையே நாடுகின்றனர். இத்தொழிலில் கொழும்பில் அன்சார் மிகவும் பிரபல்யம் பெற்றவராவார். 

 

வீடுகளுக்கான திறப்பு மட்டுமின்றி அனைத்து வாகனங்களுக்குமான திறப்புக்கள் தயாரிப்பதிலும் கை தேர்ந்தவர் அன்சார். அனைத்திலும் முக்கியமாக திண்டுக்கல் பெட்டகம் மட்டுமல்லாமல், இன்றைய நவீன ரக பெட்டகங்களையும் எவ்வித பழுதும் இல்லாது திறப்பதில் நாடறிந்தவராவார். 29 வருடமாக  ஒரே இடத்தில் இத்தொழிலை செய்து வருவதுடன் தன்னை நாடி வரும் வாடிக்கையாளரை திருப்திபடுத்துவதில் மிகத் திறமைசாலி இவர்.

108DSC05757.jpg

அசல், நகல் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாது சாவிகளை தயாரிக்க வேண்டும். ஒரு நூல் அளவு வித்தியாசப்பட்டாலும் இரு சாவிகளும் ஒன்றோடு ஒன்று இணையாது. இத்தொழிலால் ஏதும் பிரச்சினைகளை கண்டுள்ளீர்களா? என அன்சாரை நோக்கி கேள்வியைத் தொடுத்தோம். 

 

இத்தொழிலில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மிகவும் நுட்பமாக செயல்பட வேண்டும். வீடுகளை உடைத்து திருடுபவர்கள், வாகனங்களை கடத்துபவர்களும் என்னிடம் வருவார்கள். அகத்தில் அழகு முகத்தில் தெரியும். திருடர்களின் முகம் மற்றும் அவர்களின் வார்த்தைகள் மூலமாக திருடர்களை அடையாளம் கொள்ளலாம். அவர்களின் உடல் மொழில் முக்கியமாக காட்டிக் கொடுத்துவிடும். சிலர் சவர்காரத்தில் சாவியின் அச்சை பதிவு செய்து கொண்டு வருவார்கள். இன்னும் சிலர் களிமண் அல்லது களிபசையில்  (கிளே) சாவிகளின் அச்சை பதித்து கொண்டு வருவார்கள் இவர்களில் பலர் வில்லங்கத்தோடு வருபவர்கள். இவர்களை தட்டிக் கழித்துவிட்டு உரியவர்களுக்கு தகவல்களை வழங்கிவிடுவேன். இது எனது சமூக கடமையாகும். 

 

திருடன் வாகனத்தை கடத்தி வாகனத்தை விற்க தடுமாறுவான். வாகனத்தை இழந்தவர் எந்தளவு கஷ்டப்பட்டு வாகனத்தை கொள் முதல் செய்து இருப்பார். அவரின் தடுமாற்றத்தை நான் நினைக்கையில் அவரின் முழுக்குடும்பமும் ஆடிப் போயிருக்கும்' என்கிறார்  அன்சார். 

 

'சாவிகளின் கைகளாலும் வெட்ட இயலும். இயந்திரத்தின் மூலமாகவும் வெட்ட முடியும். சாவிகள் இல்லாது பூட்டை மட்டுமே கொண்டு வந்தால் பூட்டை முமுமையாக கழற்றி சாவிகளை தயாரித்து கொடுப்பேன். பெட்லொக் எனப்படும் தகவுகளுடன் இணைக்கப்படும் பூட்டுக்களுக்கு சாவி தயாரிப்பதற்கு பெட்லொக்கை முழுமையாக கழற்றவேண்டும். இல்லையேல் கம்பி மூலமாகவும் திறக்கலாம். இத்தொழில்நுட்பம் எங்களுக்கு மட்டுமே தெரியும் இதற்காக சிலர் அவர்களின் வீடுகளுக்கும் எங்களை அழைத்துச் செல்வார்கள். இவ்வாறான தொழில்நுட்பத்தை சில திருடர்கள் தெரிந்து வைத்துள்ளனர்.

108DSC05762.jpg
 சில திருடர்கள் கோட், ரை அணிந்துகொண்டும் என்னிடம் வருவார்கள். இவர்கள் மீது மிகவும் கண்காணிப்பாக இருக்க வேண்டும். சில திருடர்கள் ஆயுதங்களுடனும் வீடுகளுக்கு வருவார்கள். அத்தகையவர்களை அவர்களின் முகபாவனை காட்டிக் கொடுக்கும். இவ்வாறானவர்கள் பெரும் விலை மதிப்புகொண்ட பெட்லொக்குகளை நாசப்படுத்தி விடுவார்கள். அதை திருத்திக் கொடுக்க பெரும் கஷ்டப்படுவோம்' எனவும் அன்சார் தெரிவித்தார். 

 

'பெரிய கம்பனிகள் பலவற்றின்  பெட்டகங்களையும் திறந்து கொடுத்துள்ளேன். இத் தொழிலில் நேர்மை நம்பிக்கை அவசியம். என்னை பல கம்பனிகளின் பெட்டகங்களை திறப்பதற்காக பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  அவ்வாறு என்னை நம்பி வரும் அதிகாரிகளிடம் பேரம் பேசும் தன்மை என்னிடம் இல்லை. அவர்கள் சாவிகளை தொலைந்த பின்னர் பெரும் பதற்றத்துடன் கவலைகளை சுமந்தவாறு வருவார்கள். முதலில் அவர்களை தைரியப்படுத்தி அவர்களை பதற்றத்திலிருந்து வெளிவர வைப்பதே எனது முதலாவது செயற்பாடாகும். எப்போதும் எந்த தொழிலும் மனிதாபிமானம் நிலைக்க வேண்டும்' என்று கூறும் அன்சாரின் வாழ்க்கையில் பல மறக்க முடியாத அனுபவங்கள் உள்ளன.

 

ஐந்து வருடங்களுக்கு முன்னர் பொத்துவிலுக்கு அரச நிறுவனம் ஒன்று என்னை அழைத்துச் சென்றது. அந்நிறுவனத்தின் சம்பளப்பணம் பெட்டகத்தினுள் இருந்தது. பெட்டகத்திற்கான பொறுப்பாளாரான அதிகாரி சாவிகளை எப்படியோ தொலைந்து விட்டார். அன்றைய தினம் சம்பளம் வழங்கும் தினம். சாவியை காணவில்லை என்றவுடன் அந்த அலுவலகமே பதறிப்போனது.

 அவர்கள் நாடிய சாவி திருத்துவோர் அனைவரும் கைவிட்ட நிலையில் நான் போய் பெட்டகத்தை திறந்து கொடுத்தேன். அதிகாரிகள் வியந்துபோக அவர்களின் முகத்தில் சந்தோச ரேகைகள் படர்ந்தன.   எனக்கு அன்று பதினோராயிரம் ரூபாவை அதிகாரிகள் சம்பளமாக வழங்கினார்கள். எனக்கு பணத்தை விட அவர்களின் சந்தோசமே பெரிதாக அப்போது தெரிந்தது.

 

இதே போன்று சிலாபத்தில் இயங்கும் வெளிநாட்டுத் தனியார் நிறுவனம் ஒன்றின் இரண்டு நவீனரக பெட்டகங்களை நான் திறந்துக் கொடுத்துள்ளேன். அவை இரண்டும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பெட்டகங்கள். இது நவீன முறையில் இயங்குபவை. இப்பெட்டகங்களின் சாவிகள் அவர்கள் வசம் இருந்தன. ஆனால் சாவிகளை பெட்டகத்தின் திறப்பு வழியாக செலுத்தியப் பின் பெட்டகத்தில் இணைக்கப்பட்டுள்ள இலக்கங்களை சரியாக சுழற்ற இயலாமல் தடுமாறிப் போய்விட்டனர். பதிவு செய்யப்பட்டுள்ள இலக்கங்களையும் சுழற்றுவதன் மூலமே அப் பெட்டகத்தை திறக்க இயலும். பெட்டக பொறுப்பாளர் இரகசிய இலக்கப்பதிவை மறந்து விட்டார். ஆனால். பத்தே நிமிடத்தில் பெட்டகத்தை நான் திறந்துக் கொடுத்தேன். இவ்வாறான பெட்டகங்களை திறக்க சில இடங்களில் பல மணித்தியாலங்கள் செல்லும். அல்லது இரண்டு நாட்களுக்கு மேலும் செல்லும். அன்று பதினான்கு ஆயிரத்தை அமெரிக்கர் வழங்கினார். 

 

இதேபோன்று; நாட்டின் சவூதி அரேபியாவின் டமாம் நகரில் நான் தொழில்புரிகையில் அவ்வூரைச் சேர்ந்த ஒருவர் தனது நான்கு வயது ஆண் பிள்ளையை காருக்குள் வைத்து சாவியையும் வெளியே எடுக்காது கதவை மூடிவிட்டார். பிள்ளை பதற்றத்துடன் சத்தமிட கதவை திறக்க இயலாது தடுமாற்றினார். இதனைக் கண்ட நான் எனது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார் கதவைத் திறந்து பிள்ளையைக் காப்பற்றினேன். அன்று எனக்கு அவர் ஐம்பது ரியால்களை சன்மானமாகக் கொடுத்தார். இவ்வாறு என் தொழிலில் பல மறக்க இயலாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன' என அருமையான தகவல்களை அன்சார் வழங்கினார். 

108_key-cutting.j.a.m.-anzar1.jpg

'நான் தொழில் பழகிய காலத்தில் மிகவும் சிரமத்திற் மத்தியிலேயே பயிற்சியைப் பெற்றேன். இன்று அந்த நிலை இல்லை. கீ கட்டிங் மெஷின் எனும் சாவி வெட்டும் இயந்திரங்கள் இன்று சந்தையில் விற்பனைக்கு உள்ளன. வெளியூரிலிருந்து பலர் இறக்குமதி செய்கின்றனர். அன்று நாம் கைகளிலேயே அரத்தைக் கொண்டு சாவிகளை வெட்டினோம். இன்று இயந்திரம் மூலமாக சாவிகளை வெட்டுகின்றோம். இருந்தும் சில சாவிகளை அரத்தின் மூலமாகவே வெட்டி செதுக்க வேண்டியுள்ளது. 

 

சாவிக்கு சாவியும் சாவிகள் இல்லாத பூட்டுக்களை முழுமையாக கழற்றி செய்யவும் பெட்டகங்களை அலுமாரிகளை திறக்கவும். கார் சுவிட்ச்களை கழற்றி சாவிகள் வெட்டவும் என என்னிடம் வரும் பல்வேறு வேலைகளுக்கும் அந்தந்த வேலைக்கு ஏற்றவகையில் எனது கூலியைப் பெறுவேன். 

 

என்னிடம் பல்வேறு தரங்களைக் கொண்ட பலரும் வருவார்கள். இதனால் பலரின் அறிமுகம் கிடைக்கின்றது. இவர்களே என்னை நாட்டின் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். பண்புள்ளவர்களையும் அன்புள்ளவர்களையும் எனது முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்களையும் நண்பர்களாகக் கொண்டுள்ளேன். நட்புக்காகப் பழகுகிறவர்கள் நண்பர்கள். பணத்துக்காக பழகுபவர்கள் பகைவர்கள் என்பது என் வாழ்வில் நான் கற்றறிந்த பாடங்களாகும்' என பெருமையுடன் தெரிவித்தார் அன்சார். 

 

'உங்களின் தொழில் மிகவும் சிக்கல்களை கொண்ட தொழில் எனத் தெரிவித்தீர்கள். இந்தத் தொழிலில் திருப்தி கொண்டுள்ளீர்களா' என கேட்டோம்.

 

'எனது வாழ்க்கையின் அச்சாணியே இத்தொழிலாகும். மனப்பூர்வமான திருப்தியைக் கொண்டுள்ளேன். இத் தொழிலின் மூலமாகவே எனது நான்கு பிள்ளைகளையும் கல்வி கற்க வைத்தேன். மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக இத் தொழிலே என்னை வாழ வைக்கின்றது. ஏனையத் தொழிலைப் போன்று உடலுக்குத் தொல்லையும் உடலை வறுத்தியும் இத்தொழிலை செய்யத் தேலை இல்லை. மூளைக்கும் கண்ணுக்கும் கைக்குமே இத்தொழிலில் வேலை அதிகம். கண் மூடும் வரை இத்தொழிலை என்னால் திருப்தியோடு செய்ய இயலும்' என  அன்சார் கூறியபோது, அவருக்கருகில் தனியார் வங்கி முகாமையாளர் ஒருவர் காரை நிறுத்தியதும் உடனே காரை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பிக்க, அவரிடமிருந்து நாமும் விடைபெற்றறோம் மனத்திருப்தியோடு. 

 

(படங்கள்: கே.பி.பி. புஷ்பராஜா)

- See more at: http://www.metronews.lk/feature.php?feature=108&display=0#sthash.zV45go5C.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.