Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தசரா விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலி

Featured Replies

பாட்னா: பாட்னாவில் காந்தி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரியவந்துள்ளது.
 
பீகார் தலைநகர் பாட்னா காந்தி சவுக் பகுதியில் உள்ள காந்தி மைதானத்தில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடைசி நாளான இன்று ராவண வதம் நிகழ்ச்சியை காண ஏராளமானோர் கூடியிருந்தனர். நிகழ்ச்சியை முடித்து விட்டு மக்கள் வீடுகளுக்கு திரும்பும் போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 32 பேர் பலியாகியுள்ளனர். இந்த தகவலை பீகார் உள்துறை செயலாளர் அமீர் சுபானி உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் பாட்னா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த பாட்னா அரசு உத்தரவிட்டுள்ளது.
 
 
கூட்ட நெரிசலுக்கு காரணம் குறத்து தெரியவில்லை எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட மாஜீஸ்திரேட் கூறியுள்ளார்.
 
மின்சார வயர் அறுந்து கிடப்பதாக, அங்கு எழுந்த புரளியை அடுத்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பிரதமர் நிவாரண உதவி: பாட்னாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பீகார் முதல்வரை தொடர்பு கொண்ட பிரதமர் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
 
பீகார் அரசு உத்தரவு: பாட்னாவில் தசரா திருவிழாவின் போது ஏற்பட்டகூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியான சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில உள்துறை செயலாளர் கூறியுள்ளார். மேலும் அவர், இந்த சம்பவத்தில்,32 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.32 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
 
அறிக்கை கேட்கிறது உள்துறை: பாட்னாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி, பீகார் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் முதல்வரை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
 
தலைவர்கள் இரங்கல்: பாட்னாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 32 பேர் பலியான சம்பவம் குறித்து தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற வேண்டும் என கூறியுள்ள சோனியா, பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
இந்த சம்பவம் அதிர்ச்சி தருவதாகவும், மாநில அரசுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் எனவும், மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். 
 
ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களில் இருந்து மாநில அரசு பாடம் கற்கவில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுவதாக கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை நடத்திஉரிய நடவடிக்கை எடுக்கும் என ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.
gallerye_022009240_1084071.jpg
 
WR_20141004021553.jpeg
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.