Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2015ஆம் ஆண்டுக்கான பட்ஜட் யோசனைகள் இதோ!

Featured Replies

Mahinda_budget_14_10_24.jpg2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் 512 பில்லியன் ரூபாய் துண்டுவிழுந்துள்ளது.

 

அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1,689 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 2,210 பில்லியன் ரூபாவாகும்.

 

தனியார் ஊழியர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் சம்பளம் எடுப்பவர்களின் மாதாந்த சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு யோசனை கூறப்பட்டுள்ளது.

 

இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும், விசேட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

 

விமான நிலையப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திகளுக்காக 2015 - 2017ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 17 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.

 

அத்துடன், இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும், விசேட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

 

இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் முக்கியமான சில

 

- பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகஸ்தர்கள், வைத்தியர்கள் மற்றும் நீதிச்சேவை ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவு அதிகரிக்கப்படுகிறது.

 

வேலை வழங்குவோரினால் வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.

 

அக்ரஹார காப்புறுதிக் கொடுப்பனவு ரூ. 500,000.அதிகரித்துள்ளது.

 

அரச ஊழியர்களுக்காக ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2,200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இராணுவம் மற்றும் காவல்துறை சேவையில் பிள்ளைகள் உள்ள பெற்றோருக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 1,000 ரூபாய் எதிர்வரும் 2015 இலிருந்து வழங்கப்படுகிறது.

 

ஹோட்டல் மற்றும் சிறு, நடுத்தர கைத்தொழில்களுக்கான மின்சாரக்கட்டணம் 25 சதவீதத்தால் குறைப்படுகிறது.

 

முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்புறுதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 3000 ரூபாய் வழங்கப்படவுள்ளதுடன், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவாக மாதாந்தம் 750 ரூபாய் வழங்கப்படும்

 

முதியோர்களுக்கான கொடுப்பனவு 1,000 ரூபாயினால் அதிகரிக்கப்படுகிறது.

 

வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்வோருக்கு விசேட ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

சுயதொழிலாளர்கள் மற்றும் வீதியோர வியபாரிகளுக்கு கடன்வசதி வழங்கப்படும்.

 

பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினையை தீர்க்கும் முகமாக புதிய முறையிலான பாடசாலை மட்ட ஆசிரியர் நியமனத்திட்டம் முன்வைக்கப்படும்.

 

குழந்தைகளுக்கான பால்மா இறக்குமதி மீதான வரி நீக்கப்படுகிறது.

 

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் பிரிவு நிறுவப்படுகிறது.

 

ஊடகவியலாளருக்கு கடன் திட்டம் விரிவாக்கப்படவுள்ளதுடன், சமூர்த்தி பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

குறைந்த வருமானமுள்ள குடும்பங்களிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லமுடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்கு 50,000 புலமைப்பரிசில்கள். ஒவ்வொருவருக்கும் 3,000 ரூபாய் மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

 

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

 

ஆசிரிய உதவியாளர்களுக்கு 9,500 ரூபாய் மாதாந்தப்படி வழங்கப்படவுள்ளது.

 

மஹாபொல, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் 4000 ரூபாவினாலும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் 1500 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

 

மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த பெண்களினதும் பிள்ளைகளினதும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

 

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

 

பசும்பால் லீற்றருக்கான உத்தரவாத விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்படுவதுடன் யோகட் ஆகியவற்றின் விலை குறைக்கப்படுகிறது.

 

http://www.tamil.srilankamirror.com/news/2719-512

Edited by Kashni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.