Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது வரலாற்றை ஆவணப்படுத்துவதன் மூலமே இனத்தின் இருப்பை தக்கவைக்க முடியும்! – மாகாணசபை உறுப்பினர் கஜதீபன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
gajatheepan-200-news.jpg

எமது இனத்தின் வரலாற்றையும் தனித்தன்மையையும் உரிய முறையில் ஆவணப்படுத்துவதன் மூலமே எமது இனத்தின் இருப்பை தக்கவைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில் அதிபர் திருமதி.கமலராணி கிருஸ்ணபிள்ளை தலைமையில் இடம்பெற்ற தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

   

ஒரு இனத்தின் இருப்பை, அதன் பண்பாடுகளை , கலாசார விழுமியத்தை அழிக்க வேண்டுமெனில் முதலில் அவ்வினத்தின் அறிவுக்களஞ்சியங்களை அழிக்க வேண்டும். இவ்வாறான கபட நோக்கத்துடனேயே 1981 ஆம் ஆண்டு தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான , தெற்காசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாகத் திகழ்ந்த எமது யாழ்.பொது நூலகம் தீயவர்களால் தீ வைக்கப்பட்டது. அவ்வாறானவர்களே இன்றும் எமது இனத்தின் இருப்பை அழிக்கும் கபட நோக்கத்துடனேயே எமது கலாசார விழுமியங்களை அழிக்க முயன்று வருகின்றனர். இவற்றைத் தடுத்து எமது வரலாற்றை உரியமுறையில் ஆவணப்படுத்த வேண்டும்.

அன்று எமது முன்னோர்கள் இந்த இராமநாதன் கல்லூரியின் வரலாற்றை ஆவணப்படுத்தியதால் தான் நாம் இன்று அதன் வரலாற்றையும், பெருமைகளையும், சிறப்புக்களையும் அறிய முடிகின்றது. இதே போன்று எம்மினத்தின் வரலாறும் பண்பாட்டுக் கலாசார எச்சங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இதன்மூலம் நாம் எம்மினத்தின் இடையறாத வரலாற்றுப் பாரம்பரியங்களை நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும். இல்லாவிடில் ஆக்கிரமிப்பாளர்களின் வரலாறே எமது வரலாறாகி விடும். எமது இனத்தின் வரலாற்றையும் தனித்தன்மையையும் உரிய முறையில் ஆவணப்படுத்துவதன் மூலமே எமது இனத்தின் இருப்பை தக்கவைக்க முடியும்.

கடந்த காலத்தில் இந்த இராமநாதன் கல்லூரியின் நூலகமும் இலக்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களும் அழிவைச் சந்தித்திருந்தமையையும் மறந்து விடமுடியாது. இவ்வாறான நிலையில் வரலாற்றை ஆவணப்படுத்தும் இந்த “இராம ஒளி” இதழானது காலத்தின் தேவை கருதிய சிறந்த முயற்சியாகும். பாடசாலை மாணவர்களாகிய நீங்கள் உலகின் மூத்த மொழியான எமது தமிழ்மொழியையும் எம்பண்பாடு கலாசார விழுமியங்களையும் அழிக்க முயற்சிப்போரிடமிருந்து காப்பாற்றி அழிந்து போன எம் வரலாறுகளையும் உயிர்ப்பூட்ட முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் பிரதம விருந்தினராகவும்.உடுவில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் தி.தர்மலிங்கம் மற்றும் சுன்னாகம் வாழ்வகத் தலைவர் ஆ.ரவீந்திரன்,சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர். ‘இராம ஒளி’ நூலை வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் வெளியிட்டு வைக்க முதற் பிரதியை மிலேனியம் ரெஸ்ரோரண்ட் உரிமையாளர் எஸ்.சுகுமாரன் பெற்றுக் கொண்டதுடன். கௌரவப் பிரதியை யாழ்.மாவட்ட பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் பொ.கெங்காதரன் பெற்றுக் கொண்டார்.

நூலின் வெளியீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொ.பாலசுந்தரம்பிள்ளை ஆற்றியதுடன் நயப்புரையை கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆசிரியர் ந.குகபரன் நிகழ்த்தினார். நிகழ்வில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், தேசியவாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவிகள்,மற்றும் விசேட தேவையுடைய மாணவிகளிடையே நடாத்தப்பட்ட பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு இடம்பெற்றது.விருந்தினர்கள் பரிசில்களை வழங்கினர்.

 

library-day-chunnakam-261014-seithy%20(1

 

 

library-day-chunnakam-261014-seithy%20(2

 

 

library-day-chunnakam-261014-seithy%20(3

 

 

library-day-chunnakam-261014-seithy%20(4

 

 

library-day-chunnakam-261014-seithy%20(5

 

 

library-day-chunnakam-261014-seithy%20(6

 

http://www.seithy.com/breifNews.php?newsID=119432&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.