Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது ஏன் கமல்ஹாசன் வீடியோ மூலம் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாதது ஏன் கமல்ஹாசன் வீடியோ மூலம் விளக்கம்
 
201412251046363890_director-Balachander-
சென்னை

தமிழ்ப்பட உலகில், ‘இயக்குனர் சிகரம்’ என்ற பட்டத்துடன் 100-க்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்து மிகப்பெரிய சாதனைகளை செய்தவர் கே.பாலசந்தர்.

காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

அவருடைய உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ,அற்றும் நடிகர் நடிககள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். 

மாலை 3 மணிக்கு, கே.பாலசந்தரின் இறுதி ஊர்வலம் சென்னை மைலாப்பூர் வாரன் சாலையில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து புறப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். வாரன் சாலையில் இருந்து பெசன்ட்நகர் மின்மயானம் வரை 6 கி.மீ தூரம் நடந்தே சென்றார்கள். மாலை 5 மணிக்கு பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் கே.பாலசந்தரின் உடல் தகனம் நடந்தது. ரஜினிகாந்த், பெசன்ட் நகர் மயானம் வரை சென்று தன் குருவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

உத்தம வில்லன்’ பட வேலைகளுக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்ததால், பாலசந்தரின் இறுதிச்சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

கே.பாலசந்தர். முதலில் அன்னாரது உடல் இன்று இறுதிச் சடங்கு செய்யப்படுவதாக இருந்தது. எனவே, அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு வந்து நேற்று இரவு பாலசந்தருக்கு கமல் நேரில் அஞ்சலி செலுத்துவார் எனக் கூறப்பட்டது. ஆனால், தங்கள் முடிவை மாற்றிக் கொண்ட குடும்பத்தார் நேற்றே இறுதிச் சடங்கை நடத்தி முடித்தனர். இதனால் தனது சினிமா குருவாகப் பாவித்த பாலசந்தரின் உடலைக் கடைசியாக நேரில் காணும் வாய்ப்பை இழந்தார் கமல். ஆனபோதும், பாலசந்தரின் இறுதி அஞ்சலிக்குக் கூட வர முடியாத படி அவர் கற்றுக் கொடுத்த சினிமா வேலைகளில் ஈடுபட்டிருப்பதே அவருக்கு தான் செலுத்தும் இறுதி அஞ்சலி தான் என கமல் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது :-

""தமிழ் திரையுலகுக்கு தனது வாழ்நாளில் இத்தகைய தொடர் கொடையைக் கொடுத்தவர் வேறு யாரும் உள்ளார்களா என்ற கேள்விக்கே இடமில்லாமல் வாழ்ந்த ஒரு கொடை வள்ளல் கே.பாலசந்தர்.

100 படங்கள் இயக்கியதோடு அல்லாமல், பல நூறு கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்களில் நானும் ஒருவன்.

அவர் எனது வற்புறுத்தலின் பேரில் பங்கு கொண்ட "உத்தம வில்லன்' என்ற அந்தப் பதிவு என் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான பதிவாகும். வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட என் வாழ்வின் ஒரு பதிவாக அது அமைகிறது.

அதற்கு மட்டுமல்ல, நான் எத்தனை விஷயங்களுக்காக இயக்குநர் பாலசந்தருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை.  இதுவே என் அஞ்சலி... சடங்குகளில் அதிக நாட்டமில்லாத நான், அவரது இறுதிச் சடங்கில் கூட பங்கு கொள்ள முடியாமல் அவர் எனக்கு அளித்த இந்த சினிமா தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன். இதுவே அவருக்கு நான் செய்யும் அஞ்சலியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 கே. பாலசந்தரின் குரல் அவரது மாணவர்களின் கலைவழி மூலம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். அதைக் கேட்க வைப்பது என் கடமையும்கூட'' என்றார் கமல்ஹாசன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.