Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா-எட்மன்டன் மாகாணத்தை கதிகலங்க வைத்த முட்டாள்தனமான பாரிய படுகொலைகள்.

Featured Replies

கனடா- எட்மன்டனில் இரு இளம் பிள்ளைகள் உட்பட்ட ஒன்பது பேர்களின் உயிர்களை குடித்த கொடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை ஒரு முட்டாள் தனமான பாரிய படுகொலை என தலைமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இப்படுகொலைகள் மூன்று இடங்களில் ஒரே நபரால் செய்யப்பட்டுள்ளது. இவை ஒரு குழு சம்பந்தப்பட்டதல்ல எனவும் மாறாக உள்நாட்டு வன்முறையான சோக சம்பவம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

திங்கள்கிழமை இரவு ஒரு பெண் எட்மன்டன் தெற்கில் உள்ள வீடொன்றில் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சில மணித்தியாலங்களின் பின்னர் ஒரு இளம் பெண் மற்றும் பையன் இவர்களுடன் இரு ஆண்களும் 3-பெண்களும் நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப் பட்டனர்.அன்றய தினம் மாலை அதிகாரிகள் ஒரு தற்கொலை முயற்சிக்கான ஆண் சம்பந்தப்பட்ட அறிக்கை ஒன்றை கவனித்துள்ளனர்.

செவ்வாய் கிழமை காலை குறிப்பிட்ட மனிதனின் அடையாளங்களை ஒத்த மனிதன் ஒரு உணவகத்தில் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உணவக இடத்தில் இறந்து கிடந்தவர் வெளிப்படையான தற்கொலை என தோன்றுவதாக ஆர்சிஎம்பியினரால் தெளிவுபடுத்த கூடியதாக இருந்ததென கூறப்பட்டுள்ளது.

பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவர்களிற்கிடையிலான தொடர்புகளும் தெரியவரவில்லை.

பொது மக்களிற்கு அபாயம் எதுவும் இல்லை எனவும் பொலிசார் வேறு சந்தேக நபர்களை தேடவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

திங்கள்கிழமை மாலை 7-மணியளவில் பொலிசாருக்கு ஒரு மனிதன் வீடொன்றிற்குள் நுழைந்து துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு ஓடியதாக கிடைத்த தகவலுடன் அனைத்தும் ஆரம்பமாகியது. நடுத்தர வயது பெண் சம்பவ இடத்தில் இறந்து விட்டார்.

இச்சம்பவத்தை பொலிசார் கையாளும் சமயத்தில் பொலிசாருக்கு வீடொன்றில் மன அழுத்தத்துடன் தற்கொலை மனிதன் காணப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் எதுவும் காணப்படவில்லை. நடு இரவிற்கு பின்னர் பொலிசாருக்கு புதிய தகவல் கிடைத்து அங்கு சென்ற போது அங்கு அவர்கள் ஏழு பேர்களின் உடல்களை கண்டுள்ளனர்.

பிள்ளைகளின் வயதுகள் வெளியிடப்படவில்லை. அவர்கள் மிகவும் இளவயதினர் என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் அவர்கள் 2 மற்றும் 6-வயதுடையவர்கள் என ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் இந்த நாடகம் வோட் சஸ்கற்சுவான் நகரில் ஒரு விஎன் எக்ஸ்பிரஸ் ஏசியன் உணவகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு முன்னய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் தற்கொலை மனிதன் சம்பந்தப்பட்ட கறுப்பு நிற SUV வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு தந்திரோபாய அணியினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதி சுற்றி வழைக்கப்பட்டது. உணவகத்தின் முன்பகுதி வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு சிதைக்கப்பட்டிருந்தது. அங்கு தான் பொலிசாரால் தேடப்பட்ட தற்கொலை மனிதனின் உடல் கண்டுபிடிக்கப் பட்டது.

விசாரனைகள் தொடர்கின்றன.

இந்த நாள் எட்மன்டனுக்கு ஒரு பெருந்துயரமான நாள் என கூறப்பட்டுள்ளது.

mass.jpg

mass1.jpg mass2.jpg mass3.jpg mass4.jpg

 

- See more at: http://www.canadamirror.com/canada/36121.html#sthash.CEi1Igqo.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.