Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் யாரையும் மிரட்டவில்லை; ஊடகங்களே பொய்யுரைக்கின்றன! தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை

Featured Replies

mavaigkfnf%20xj.jpg

 

நாம் வரலாற்றில் யாரையும் மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஆனால் ஊடகங்களே தவறாக பிரசுரித்துள்ளன என தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களுக்கான பிரதிநிதிகளை நியமிக்கும் பொருட்டு கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று ஞாயிற்றக்கிழமை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்பின்னர் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
பொது எதிரணி வேட்பாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? என கேட்ட போது
 
ஒவ்வொருவரும் கருத்துக்களைக் கூறுவதற்கு ஜனநாயக உரிமை இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரினதும் கருத்துக்களும் கட்சிக் கூட்டங்களில் பெறப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படிதான் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே எந்தவிதமான குழப்பங்களுக்கும் இடமளிக்காமல் அனைத்து மக்களையும் வாக்களிக்க செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களை வாக்களிக்க செய்வதே னைவரதும் கடமை- என்றார்.
 
கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் கட்சி மாறியுள்ளனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என கேட்ட போது -
 
எமது கட்சியை சேர்ந்த ஒரு சிலர் கட்சி மாறியுள்ளனர் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று சிலரது அறிக்கைகளும் வெளி வந்துள்ளன. அவர்கள் தொடர்பாகவும் விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.
 
தமிழரசுக் கட்சியின் தலைவர் நீங்கள் அவ்வாறு இருந்தும் தொலைபேசியில் அனந்தி சசிதரனுடன் ஏன் கதைத்தீர்கள். அதனால் பிரச்சனையாகிவிட்டதே? எனக் கேட்ட போது -
 
அதில் எந்த உண்மையும் கிடையாது. அப்படி கதைத்தபோதுதான் மயக்கம் வந்தது என்று கூறுவது தவறானது. அனந்திக்கு முன்பும் இப்படி உடல்நிலை பலவீனமடைவது குறித்து வைத்தியரிடம் கூறியுள்ளார். அவர் முற்பகல் 11 மணிவரை சாப்பிடவில்லை என்பதும், அதனால்தான் மயக்கமுற்றார் என்றும் தெரியவந்தது. எங்கள் வரலாற்றில், நாம் யாரையும் இதுவரை மிரட்டியதோ, திட்டியதோ இல்லை. ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்தான் தவறானவை. - எனத் தெரிவித்தார். -
 
 
 
  • தொடங்கியவர்
அறிக்கை வெளியிட்டவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: மாவை
 
சில அறிக்கைகள் வெளியில் வந்துள்ள நிலையில் அவை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
 
வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில்   இடம்பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பணிகள் தொடர்பான கூட்டம் இடம்பெற்றதன் பின்னர் செய்தியாளர்கள் மைத்திரிக்கான ஆதரவு  தொடர்பில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இவ்விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
 
ஒவ்வொருவருக்கும் கருத்துக்கள் இருப்பதை ஜனநாயகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த கருத்து முரண்பாடுகள் கட்சி கூட்டங்களில் கதைத்து தீர்மானிக்கப்பட்டு விட்டது. அதன் முடிவில் எல்லா கருத்துக்களையும் திரட்டி எதிரணி வேட்பாளர் சிறிசேனாவுக்கு வாக்களிப்பதற்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதனால் வேறு எந்த விதமான குழப்பங்களுக்கும் இடமளியாது அனைத்து மக்களையும் வாக்களிக்க செய்கின்ற பணியில் கட்டாயமாக ஈடுபடுமாறு இன்று கூடிய கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளோம். ஆகவே 8 ஆம் திகதி மக்கள் அதிகாலையில் எழுந்து வாக்களிக்க வேண்டும்.
 
இதேவேளை ஒரு சிலர் அரசு பக்கம் தாவுகின்றார்கள் என   தகவல்கள்  எமக்கு கிடைந்துள்ளது. அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் சில அறிக்கைகள் வெளியில் வந்துள்ளது. அவை பற்றி அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டு அவர்கள் மீதும் ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 
இதேவேளை கட்சியின் தலைவராக இருந்து அங்கத்தவர் ஒருவரை எச்சரித்து அவர் மயங்கி விழுந்தாக செய்தி வந்துள்ளமை தொடர்பில் கேட்டபோது,
 
நான் அனந்தியுடன் கதைத்த போதுதான் மயங்கி விழுந்தார் என்பதில் எந்த உண்மையும் கிடையாது. இன்று காலையிலும் அந்த பிள்ளை வைத்தியரிடம் தனக்கு முன்பும் அவ்வாறு வருவதாக கூறியுள்ளார். அதைக்கேட்டு நான் ஆறுதல் அடைந்தேன்.
 
அன்றைய தினமே தொலைபேசி நின்றவுடன் பிள்ளைகளுடன் நான் மீள கதைத்தேன். அதற்கு அவர்கள் அம்மா 11 மணி வரைக்கும் சாப்பிடவில்லை என தெரிவித்தனர்.
 
ஆகவே நாங்கள் ஒரு காலமும் எங்கள் வரலாற்றில் யாரையாவது திட்டுவதோ மிரட்டுவதோ வாடிக்கையல்ல. பத்திரிகையில் வரும் செய்திகளை வைத்தே நான் அவரிடம் இவ்வாறான கருத்துக்களையும் தவிர்க்குமாறு கோரியிருந்தேன்.
 
இந்நிலையில் நான் கோரியதையும் அவர் மயங்கி விழுந்ததையும் சேர்த்து நான் சொன்னவுடன் அவருக்கு மயக்கம் வந்ததான கருத்து தவறானது மாறானது. இச் செய்திகளை கண்டிக்கின்றேன் என்றார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.