Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளியான இளைஞன் சிற்பாச்சாரியார் ஆனது எப்படி? அவரே மனம் திறக்கிறார் இப்படி

Featured Replies

sitpam%20ffffva%20rf9887848.jpg

 

ஓர் இனத்திற்கு என தனித்துவமான பண்பாடுகளும் கலைகளும் உண்டு. ஓர் இனத்தின் தொல்லியலையும் அதன் பாரம்பரியங்களை பறைசாற்றி நிற்பதில் சிற்பக்கலைக்கு பெரும் பங்குண்டு. அந்த வகையில் தமிழர் வாழ்வியலில் சிற்பக்கலை தொன்றுதொட்டு தனிச்சிறப்பு பெற்றுள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
 
இந்தியாவை எல்லோரும் திரும்பிப் பார்ப்பதற்கு அங்குள்ள பண்டைய சிற்பங்களும் தற்போது எழுச்சி பெற்று வரும் சிற்பங்களுமே காரணம். ஆனால் இந்தியாவில் இருந்து சிற்பக் கலைஞர்கள் வந்து செல்கின்றனர்.
 
 
 
sitpam%20ffffva%20rf9887844.jpg
அதன் அயல்நாடான இலங்கையில் அந்த நிலை இல்லை என்ற கவலை சிற்பாச்சாரியர்களிடம் நிறைந்தே உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில் வவுனியா, நொச்சிமோட்டையில் ''ஸ்ரீ கிருஸ்ணன் சிற்பாலயத்தில்'' சிறப்பக்கலையில் ஈடுபட்டு வரும் தர்மலிங்கம் தர்மரட்ணம் என்பவர் தனது அனுபவத்தை ''மலரும்'' இணையத் தளத்துடன் பகிர்ந்து கொண்டார். அழகழகான சிற்பங்கள், இந்து கடவுள்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், சிற்பங்களுக்கு மெருகூட்டும் வர்ணப்பூச்சுக்கள் என அவரது சிற்ப வேலைத்தளத்தை அலங்கரித்தன.
 
இந்த வனப்புக்கு மத்தியில் இருந்து சிவன், பார்வதி சிலையை செதுக்கிக்கொண்டிருந்தார் தர்மரட்ணம். அவரை அணுகி, தங்கள் தொழில், சிற்பக்கலை ஆர்வம் பற்றி கேட்கமுற்பட்டோம்.
 
அவரது கருத்தில் பல உண்மைகள் மறைந்திருந்தன அத்துடன் ஏக்கங்களும் நிறைந்திருந்தன. இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வந்து இலங்கையில் பல சிற்பங்களை செய்து வருகின்றனர். அங்கிருந்துதான் சிற்பக்கலை வந்ததாக நான் அறிந்திருக்கிறேன். ஆனால் இன்று வரை இலங்கையில் அதனை மேம்படுத்த எவரும் முன்வருவதில்லை என்பது அவரது குற்றச்சாட்டாக இருந்தது.
 
வவுனியா, ஓமந்தை வண்ணாங்குளத்திலுள்ள அரசர்பதி கண்ணகை அம்மன் கோவிலில் சிற்ப வேலைக்காக இந்தியாவில் இருந்து வந்திருந்த மாரியப்பன் ஆச்சாரியாரிடம் ஏதேச்சையாக சிற்பக்கலையை கற்ற முயன்று, இன்று நானாகவே சிற்பங்களை செய்து பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்கிறேன் என்கிறார் தர்மரட்ணம்.
 
ஓமந்தை, நெல்வெலிக்குளம் கிராமத்தில் பிறந்து ஓமந்தை மத்திய கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை கற்ற இவர் யுதத்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளுக்குள் அகப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினராக சிறிது காலம் செயற்பட்டிருந்தார்.
 
யுத்த நிறைவின் பின்னர் புனர்வாழ்வு முகாமில், 2 ஆண்டுகள் தன் இளமையை கழித்த இந்த இளைஞன் அங்கிருந்து விடுதலையான பின்னர், மல்லாவியில் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாராம். இந்தக் காலப்பகுதியில் ஒரு நாள் ஓமந்தை, வண்ணாங்குளம் அரசர்பதி கண்ணகை அம்மன் கோவிலுக்கு வழிபட வந்துள்ளார் தர்மரட்ணம்.
 
அப்போது ஆலய திருத்த வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது. 1997 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு அரசர்பதி கண்ணகை அம்மன் கேவிலுக்கு வந்த இவர், அங்கு இடம்பெற்ற சிற்ப வேலைகளைக் கண்டு, அதன்பால் உந்தப்பட்டு, இந்தியாவில் இருந்து வந்த சிற்பக்கலைஞர்களுடன் கூலியாளாக பணியாற்றவும் ஆரம்பித்துள்ளார். பொறுமை, நேரம் தவறாமை, தொழிலுக்கு மதிப்பு என்பவற்றை தன் தாரக மந்திரமாக கொண்டு சிற்பக்கலைஞர்களுக்கு உதவிய இவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிற்பங்களை செய்யும் நுட்பத்தை கலைஞர்களிடம் இருந்து கற்றும் இருக்கின்றார்.
 
sitpam%20ffffva%20rf9887847.jpg
 
தான் வேலைக்கு சேரும்போது, கோபுர முடியில் இருந்து தவறி விழும் சிமெந்து கரண்டியை மேலே இருந்து இறங்கி வந்து எடுத்து மீண்டும் மேலே ஏறி அதனை சிற்பாச்சாரியரிடம் கொடுப்பதே வேலையாம். இவ்வறான முயற்சியே தன்னை இன்று தனித்து ஒரு சிற்பக்கலைஞனாக மிளிர்வதற்கு காரணமாக்கியது என்று பெருமிதம் கொள்கிறார் அவர்.
 
எதிர்கால சந்ததி தொழிலுக்காக அலையும் நிலை மாற வேண்டும் என்பதுடன் தொழில் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதுதான் தனது கருத்து என்றும், சமூகத்துக்குப் புத்திமதி கூறுகிறார் தர்மரட்ணம். பொறுமையும், தொழில் பக்தியும் உள்ளவர்களுக்கு கற்றுக் கொடுக்க விரும்பும் இவர், மூத்த கலைஞர்கள் சிலர் தமது தொழிலை கற்றுக் கொடுக்காமையே இன்று சிற்பக்கலை வீழ்ச்சி அடைந்து செல்ல காரணமாகின்றது என்றும் ஆதங்கப்பட்டார்.
 
கற்றதை கற்பித்தாலேயே அடுத்த ஜென்மத்திலும் இக்கலை இருக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு சிற்பங்களை செய்து வரும் இக் கலைஞனை ஊக்கப்படுத்துவதோடு இன்னும் பல கலைஞர்களையும் வட பகுதியில் உருவாக்க வேண்டிய பொறுப்பு வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுதுறை அமைச்சுக்கும் அது சார் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும் உரித்தாக இருக்கும் என்பதே இக் கலைஞரின் எதிர்பார்ப்பாகும்.
 
sitpam%20ffffva%20rf9887845.jpg
 
sitpam%20ffffva%20rf9887842.jpg
 
sitpam%20ffffva%20rf9887846.jpg
 
 
 

நன்றி சகோதரரே , நீங்கள் உண்மையான திறமையாளன் . மிக அருமையான சிற்பங்கள் . தொடரட்டும் உங்கள் பணி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.