Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்த தேசிய வாதத்தின் முன் உண்மையை சொல்லப் போகும் தலைவர் யார்? -அ.நிக்ஸன்

Featured Replies

ஆட்சி மாற்றம் என்ற ஒன்றை சாதகமாகக் கொண்டு ஜெனிவா மனித உரிமைச் சபையின் விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சி பயனளித்தாலும் அந்த விவகாரத்தை புதிய அரசாங்கம் எவ்வாறு கையாளவுள்ளது என்பது தொடர்பாக பௌத்த தேசியவாதம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது.

-அ.நிக்ஸன்-

தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளுக்கு  பிரதானமாக மூன்று விடயங்கள் முக்கியம் பெறுகின்றன. ஓன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது. இரண்டாவது ஜெனீவா மனித உரிமைச்சபையின் அமர்வு ஏற்படுத்தவுள்ள மாற்றங்கள். மூன்றாவது வடமாகாண சபையின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை.

புதிய அரசாங்கத்தின் நிலை

இந்த மூன்று விடயங்களும் புதிய அரசாங்கத்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணிக்கு புதிய பாதை ஒன்றை திறந்து விடுவதற்கான வழியை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு. முக்கியமாக 100 நாள் வேலைத் திட்டத்தை புதிய அரசாங்கம் செய்து முடிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன. அதுவும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றியமைப்பது என்ற விடயத்தில் புதிய அரசாங்கம் இன்னமும் முன்னேற்றத்தை காணவில்லை. இந்த நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற விடயத்தில் சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆட்சி மாற்றம் என்ற ஒன்றை சாதகமாகக் கொண்டு ஜெனிவா மனித உரிமைச் சபையின் விசாரணைகளை ஒத்திவைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் முயற்சி பயனளித்தாலும் அந்த விவகாரத்தை புதிய அரசாங்கம் எவ்வாறு கையாளவுள்ளது என்பது தொடர்பாக பௌத்த தேசியவாதம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. ராஜபக்ஸவுடன்; முரண்பாடுகள் இருந்தாலும் போர்க்குற்ற விசாரணை மற்றும் மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் போன்ற விடயத்தில் சர்வதேச அணுகுமுறைகள் அவசியமற்றவை என்பதுதான் பௌத்த தேசியவாதத்தின் கருத்து. ஆகவே அந்த கண்ணோட்டத்தில் புதிய அரசாங்கம் செயற்படவேண்டும். எனவே ஜெனிவா மனித உரிமைச் சபையின் விசாரணைகளை முற்று முழுதாக நிறுத்தக் கூடிய வல்லமை புதிய அரசாங்கத்திடம் இருக்கின்றதா என்பது கேள்வி?

வடமாகாண சபையின் நிலைப்பாடு

இந்த நிலையில் வடமாகாண சபை நிறைவேற்றிய இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை அரசாங்கம் நிராகரித்தாலும் சர்வதேச ரீதியாக அந்த பிரேரணை தற்போது பேசுபொருளாகி விட்டது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இனப்படுகொலை என்பதை இலகுவில் ஏற்றுக்கொள்ளாது என்று கூறினாலும் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகள் அல்லது வேறு சர்வதேச பொது அமைப்புகள் இனப்படுகொலை என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் வடமாகாண சபையின் தீர்மானத்தை இலங்கை இந்திய அரசுகளும் மற்றும் அமெரிக்காவும் எற்றுக் கொள்ளாது விட்டாலும் சர்வதேச அரங்கில் இந்த விடயம் பேசுபொருளாக மாறிவிட்ட நிலையில் புதிய அரசாங்கத்துக்கு அது தொடர்ச்சியான நெருக்கடியை ஏற்படுத்தும் என கூறலாம்.

மஹிந்த அணிக்கு சாதகமா?

அதேவேளை இனப்படுகொலை தொடர்பான பிரேரணை மஹிந்த ராஜபக்ஸ அணிக்கு மீண்டும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுகின்றது. சர்வதே நாடுகள் இலங்கை என்ற சிறிய அரசை பிளவுபடுத்த முற்படுகின்றன என்பதுதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் குற்றச்சாட்டு. இனப்படுகொலை என்ற விடயம் சர்வதேச அரங்கில் பேசுபொருளாக மாற்றிவிட்டமையினால் எதிர்காலத்தில் அதனை அமெரிக்கா கூட தமக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்ற கருத்தை மஹிந்த ராஜபக்ஸ அணி தேர்தல் பிரசாரங்களில் கூறுமானால் அதனை பௌத்ததேசியவாதம் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படலாம். அவ்வாறான நிலை உருவாகினால் அதற்கு எதிரான பிரச்சாரங்களை புதிய அரசாங்கம் முன்வைக்க முடியாது. ஆகவேதான் உண்மை நிலையை பௌத்த சிங்கள மக்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகியுள்ளது.

துணிவுடன் சொல்வது யார்.

ஆனால் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு என்றும் அதற்காக பிரிபடாத இலங்கைக்குள் சுயாட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் சிங்கள மக்கள் மத்தியில் அதாவது பௌத்த தேசியவாதிகள் முன்னிலையில் துணிவுடன் சொல்லக் கூடிய அரசியல் கட்சி எது? அல்லது அந்த பிரசாரத்தை முன்கொண்டு செல்லக் கூடிய சிங்கள தலைவர்கள் யார்? கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இனவாதத்தை பேசியே சிங்கள தலைவர்கள் வெற்றி பெற்றார்கள். ஆட்சியமைத்த சிங்கள கட்சிகளும் ஒட்டுமொத்தமாக இனவாதத்தையே பேசினர். அல்லது தமிழ் மக்களுக்கு அதாவது இனப்பிரச்சினை என ஒன்று உள்ளது அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரங்களில் கூறவில்லை.

இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திலும் கூட இனப்பிரச்சினை தொடர்பான மூடி மறைப்புகள்தான் இடம்பெற்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் பேசினால் கூட ஈழத்துக்கு ஆதரவு கொடுப்பதாகவே சிங்கள பௌத்த தேசியவாதம் கருதி;யது. மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான எந்த ஒரு உறுதிமொழியும் இன்றியே வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்கள். ஏனெனில் உறுதிமொழிகள் அல்லது ஒப்பந்தங்களை செய்தால் சிங்கள மக்கள் மைத்திரிபால சிறினேவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா சம்பந்தனிடம் கூறியதாக தகவல்.  இந்த நிலைமாற வேண்டும்

ஆகவே சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு பயந்து செயற்படும் இந்த பொய்யான அரசியல் செயற்பாடுகள் மாற்றமடைய வேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தனது சுயநல அரசியலுக்கு பயன்படுத்தி வருகின்றார் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியமை ஏற்புடையது. ரணில் விக்கிரமசிங்க ஒரு நரி என முன்னாள் புலிகளின் அரசியல் ஆலேசகர் அன்ரன் பாலசிங்கம் கூறிய கருத்துக்கு அது ஒப்பானது என அரசியல் விமர்சகர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே தொடர்ச்சியாக தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்ளாமல் 60 ஆண்டுகால அரசியல் பிரச்சினைகளுக்குரிய தீர்வை ஒன்றினைந்து முன்வைப்பதற்கு ஏற்ற வழிவகைகளை காணவேண்டும். வடமாகாண சபையின் பிரேரணையை நிராகரித்து யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் அநீதிகளை புறம்தள்ளாமல் பல்லின சமூகங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசியல் யாப்பு விதிமுறைகளை பின்னபற்றி நேர்மையான அரசியலுக்கு இடமளிக்கப்பட வேண்டும்.  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116597/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.